என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி இன்று மதுரை வருகை- மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார்
Byமாலை மலர்1 April 2021 2:33 AM GMT (Updated: 1 April 2021 2:33 AM GMT)
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.
மதுரை:
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அதை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மீண்டும் தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக அவர் மதுரை வர இருக்கிறார்.
இந்த கூட்டத்தில் மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மோடி ஆதரவு திரட்டுகிறார்.
இதற்காக மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த திடல் முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மதுரை பிரசாரத்துக்காக மோடி கொல்கத்தாவில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இன்று இரவு 8 மணிக்கு மதுரை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன்பின்னர் பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.
அங்கிருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் காரில் புறப்பட்டு, பிரசார கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து கலந்துகொள்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி மதுரை நகரில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் நகரம் உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அதை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) மீண்டும் தமிழக தேர்தல் பிரசாரத்துக்காக அவர் மதுரை வர இருக்கிறார்.
நாளை (2-ந் தேதி) காலை 10.30 மணிக்கு நடைபெறும் பிரசார கூட்டத்தில் பேச இருக்கிறார். இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு அம்மா திடலில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த திடல் முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
மதுரை பிரசாரத்துக்காக மோடி கொல்கத்தாவில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு இன்று இரவு 8 மணிக்கு மதுரை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து காரில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன்பின்னர் பசுமலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.
அங்கிருந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் காரில் புறப்பட்டு, பிரசார கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து கலந்துகொள்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி மதுரை நகரில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் நகரம் உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X