என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனுமதி இன்றி பிரசாரம் செய்ததாக புகார்: கனிமொழி எம்.பி.- அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு
Byமாலை மலர்30 March 2021 4:38 AM GMT (Updated: 30 March 2021 4:38 AM GMT)
கனிமொழி எம்.பி. அனுமதி பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் தேர்தல் அலுவலர் மாரிமுத்து புகார் அளித்தார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் (28-ந்தேதி) கோவில்பட்டி பத்திர காளியம்மன் கோவில் அருகே பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் கனிமொழி எம்.பி. அனுமதி பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் தேர்தல் அலுவலர் மாரிமுத்து புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் கனிமொழி எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதே போன்று கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக உரிய அனுமதி பெறாமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக அ.ம.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா, நகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் மீதும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் (28-ந்தேதி) கோவில்பட்டி பத்திர காளியம்மன் கோவில் அருகே பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் கனிமொழி எம்.பி. அனுமதி பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் தேர்தல் அலுவலர் மாரிமுத்து புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் கனிமொழி எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதே போன்று கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக உரிய அனுமதி பெறாமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக அ.ம.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா, நகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் மீதும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X