search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    பாஜக தற்போது தமிழகம், புதுச்சேரியை குறி வைத்துள்ளது- திருமாவளவன் பேச்சு

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் பா.ஜ.க.வை வழி நடத்துகிறது. இதற்கு மாற்றாக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.ஜி. ராஜேந்திரனுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    திமுக கூட்டணியானது 5 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கூட்டணியாகும். அ.தி.மு.க. சந்தர்ப்பவாத கூட்டணி. பா.ஜ.க. தற்போது தமிழகம், புதுச்சேரியை குறி வைத்துள்ளது. புதுச்சேரியில் ஆட்சியை கலைத்து விட்டு அங்குள்ள எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை எப்படியாவது கைப்பற்றுவோம் என கொக்கரித்து வருகின்றது. அடுத்த முதல்-அமைச்சராக ஸ்டாலின்தான் வரவேண்டும் என முடிவு செய்து நாங்கள் ஏற்படுத்திய கூட்டணியாகும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் பா.ஜ.க.வை வழி நடத்துகிறது. இதற்கு மாற்றாக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×