என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தபால் வாக்குகள் பாதுகாப்பு -தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
Byமாலை மலர்26 March 2021 7:15 AM GMT (Updated: 26 March 2021 7:15 AM GMT)
தபால் வாக்குகளில் எந்த ஒரு குற்றச்சாட்டும் இடம்பெறாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.
சென்னை:
80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா பாதித்தவர்களுக்கு தபால் ஓட்டு அளிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதன்படி தமிழக சட்டசபை தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. தேர்தல் ஆணைய குழுவினர் வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை பெறுகின்றனர்.
இந்நிலையில், தபால் வாக்குகளை சிசிடிவி கேமரா பொருத்திய அறையில் பாதுகாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தபால் வாக்குகளில் எந்த ஒரு குற்றச்சாட்டும் இடம்பெறாத வகையில் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளிலும் தபால் ஓட்டுபோடுவதற்காக 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு 12டி படிவம் வழங்கப்பட்டது. அதில் 12 ஆயிரம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டன. இதில் 7300 பேரின் விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. சென்னையில் 70 வாக்குப்பதிவு குழுக்கள் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டுகளை பெறும் பணியை தொடங்கினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X