search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒரு நாளும் பலிக்காது- அன்புமணி பேச்சு

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒரு நாளும் பலிக்காது என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார்.

    ‘‘சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மக்களை நம்பி போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி கார்ப்பரேட் கம்பெனியை நம்பி போட்டியிடுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். ஸ்டாலினின் முதல்வர் கனவு ஒரு நாளும் பலிக்காது.

    எனவே, பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர வேண்டும். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதல்வர் பழனிசாமி அறிவித்த திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தலில் பேரில் முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடன் நிறைவேற்றப்படும்.

    வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதுபோல, அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பா.ம.க. சார்பில் ஏற்கெனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த உடன் இந்த கோரிக்கையும் நிறைவேற்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் முயற்சி எடுப்பார்’’ என்றார்.

    Next Story
    ×