search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகர் கார்த்திக்
    X
    நடிகர் கார்த்திக்

    அதிமுக கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் செய்வேன்- நடிகர் கார்த்திக் பேட்டி

    சட்டசபை தேர்தலில் 2 தொகுதி ஒதுக்கியதால் போட்டியிடவில்லை, அ.தி.மு.க. கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் செய்வேன் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.

    சென்னை:

    மனித உரிமை காக்கும் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்திக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபை தேர்தலில் ஏற்கனவே நாங்கள் இருக்கும் அ.தி.மு.க. கூட்டணிலேயே தொடர் கிறோம். எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிட 2 சீட் தருவதாக சொன்னார்கள். ஆனால் அதை வைத்துக் கொண்டு எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. எனவே 2 சீட்டுகளை ஏற்க மறுத்துவிட்டேன்.

    அதற்கு பதிலாக மக்கள் நலன் சார்ந்த சில கோரிக்கைகளை முன் வைத்து இருக்கிறோம். அதை செய்து கொடுக்கும்படி கேட்டு இருக்கிறோம்.

    அந்த கோரிக்கைகள் எங்கள் தேர்தல் அறிக்கையில் விரிவாக வெளியிடப்படும். மக்களின் உரிமைக்குரலை எழுப்ப சட்டமன்றத்தை விட பாராளுமன்றம் சக்தி வாய்ந்தது. அதனால்நான் ராஜ்யசபா எம்.பி.ஆகும் வாய்ப்பு இருக்கிறது. அது பற்றி இப்போது விரிவாக பேச முடியாது.

    தமிழக முதல்- அமைச்சரையும், துணை முதல்- அமைச்சரையும் சந்தித்து எங்கள் ஆதரவை முறைப்படி தெரிவித்துவிட்டேன்.

    என்னால் எங்கெல்லாம் போக முடியுமோ அங்கெல்லாம் சென்று தேர்தல் பிரசாரம் செய்வேன். கூட்டணியில் இணைவதற்காகவும், பிரசாரம் செய்வதற்காகவும் எந்த பணமும் பெறவில்லை. பெறவும் மாட்டேன்.

    பா.ஜனதா கட்சியில் சேர எனக்கு அழைப்பு வந்தது உண்மை. ஆனால், நான் தனிக்கட்சி நடத்துகிறேன். அதற்கென்று தனிக்கொள்கை இருக்கிறது. அதனால் பா.ஜனதாவில் சேரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×