search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    தேர்தல் அறிக்கையில் போலி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை அதிமுக ஏமாற்றுகிறது- திருமாவளவன்

    தமிழகத்தில் நடக்க இருப்பது தேர்தல் அல்ல. மத வாதம், மத சார்பின்மைக்கு இடையே நிலவும் போட்டியாகும். இந்த தேர்தல் மூலம் மத வாத சக்தியை தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தடுக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதியில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளின் வேட்பாளர்களுடன் அறிவாலயத்திற்கு சென்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அவரிடம் வாழ்த்துக்களை பெற்றார்.

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மக்களை ஏமாற்றுகின்ற போலி வாக்குறுதிகளை அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தில் நடக்க இருப்பது தேர்தல் அல்ல. மத வாதம், மத சார்பின்மைக்கு இடையே நிலவும் போட்டியாகும். இந்த தேர்தல் மூலம் மத வாத சக்தியை தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தடுக்க அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலைவர் கே.பாலகிருஷ்ணனை திருமாவளவன் தனது வேட்பாளருடன் சந்தித்து பேசினார்.

    Next Story
    ×