search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    கோவில்பட்டி தொகுதியில் டி.டி.வி.தினகரன் நாளை வேட்பு மனுதாக்கல்

    கோவில்பட்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 3-வது முறையாக போட்டியிடுகிறார். அவரும் நாளை வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார்.
    கோவில்பட்டி:

    சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    ஆர்.கே.நகர் அல்லது போடி தொகுதியில் தான் அவர் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் கோவில்பட்டி தொகுதியில் களம் இறங்க போவதாக அறிவித்தது அக்கட்சியினருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

    அவர் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்தினர் அதிகம் உள்ள இந்த தொகுதியில் அவர் களம் இறங்குவது தென் மாவட்டங்களில் அ.ம.மு.க.வினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் கோவில்பட்டி தொகுதி வி.ஐ.பி. அந்தஸ்து பெற்றுள்ளது.

    இந்நிலையில் டி.டி.வி. தினகரன் நாளை (திங்கட் கிழமை) மதியம் 1.30 மணியளவில் கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணனிடம் வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார்.

    இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 3-வது முறையாக போட்டியிடுகிறார். அவரும் நாளை மதியம் 12 மணிக்கு மனுதாக்கல் செய்ய உள்ளார்.
    Next Story
    ×