என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொகுதி ஒதுக்கீட்டில் கவலையோ, சந்தோஷமோ இல்லை- எல்.முருகன்
Byமாலை மலர்6 March 2021 5:50 AM GMT (Updated: 6 March 2021 5:50 AM GMT)
எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதோ, அத்தனை தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
திருச்சி:
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இதில் பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வுடன் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறது. இதற்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்தது. முடிவில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்தநிலையில் திருச்செந்தூரில் இருந்து திருவண்ணாமாலை செல்லும் வழியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் இன்று அதிகாலை திருச்சி வந்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-
கே: நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ. க.வுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
ப: எங்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதோ, அத்தனை தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இருக்கிறோம். அதிகபடியான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கில் சென்று கொண்டிருக்கிறோம்.
கே: குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் கவலை இருக்கிறதா?
ப: இது தேர்தல் கூட்டணி. எல்லோரும் இணைந்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவலைப்படுவதற்கோ, சந்தோஷப்படுவதற்கோ ஒன்றுமில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு இலக்கு இருக்கும். எங்களை பொருத்தமட்டில் ஜெயிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.
கே: தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளியாகும்?
ப: விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இதில் பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வுடன் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறது. இதற்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்தது. முடிவில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்தநிலையில் திருச்செந்தூரில் இருந்து திருவண்ணாமாலை செல்லும் வழியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் இன்று அதிகாலை திருச்சி வந்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் விபரம் வருமாறு:-
கே: நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ. க.வுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
ப: எங்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதோ, அத்தனை தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இருக்கிறோம். அதிகபடியான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கில் சென்று கொண்டிருக்கிறோம்.
கே: குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் கவலை இருக்கிறதா?
ப: இது தேர்தல் கூட்டணி. எல்லோரும் இணைந்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவலைப்படுவதற்கோ, சந்தோஷப்படுவதற்கோ ஒன்றுமில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு இலக்கு இருக்கும். எங்களை பொருத்தமட்டில் ஜெயிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.
கே: தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளியாகும்?
ப: விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X