என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது- திருமாவளவன்
Byமாலை மலர்6 March 2021 5:35 AM GMT (Updated: 6 March 2021 5:35 AM GMT)
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடுகிறது. தொகுதிகள் எவை எவை என்று தி.மு.க. தரப்பு குழுவினரோடு கலந்து பேசி ஓரிரு நாட்களில் இறுதி செய்து அறிவிக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புபடி வேட்புமனு தாக்கல் வருகிற 12-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. அதற்குள்ளாக விருப்ப மனு செய்வோரை நேர்காணல் செய்து வேட்பாளர்களை தேர்வு செய்தாக வேண்டும். எனவே இன்று (6-ந்தேதி) முதல் 8-ந்தேதி வரை விருப்ப மனுக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெறப்படும்.
இந்த 3 நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். தேர்தல் பணிக்குழுவினர் மாநில செயலாளர் குணவழகன், தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவேரா, தேர்தல் பணிக்குழு மாநில துணை செயலாளர்கள் தனக்கோடி, வக்கீல் தமிழினியன், இணை செய்தி தொடர்பாளர் விக்கிரமன் ஆகியோர் விருப்ப மனுக்களை பெறுகின்றனர்.
விருப்ப மனு கட்டணமாக ரூ.2000 ரொக்கமாக செலுத்த வேண்டும். விருப்ப மனு படிவத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையகத்தில் பெற்றுக்கொள்ளலாம். 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை விருப்ப மனுவுடன் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடுகிறது. தொகுதிகள் எவை எவை என்று தி.மு.க. தரப்பு குழுவினரோடு கலந்து பேசி ஓரிரு நாட்களில் இறுதி செய்து அறிவிக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புபடி வேட்புமனு தாக்கல் வருகிற 12-ந்தேதி முதல் தொடங்க உள்ளது. அதற்குள்ளாக விருப்ப மனு செய்வோரை நேர்காணல் செய்து வேட்பாளர்களை தேர்வு செய்தாக வேண்டும். எனவே இன்று (6-ந்தேதி) முதல் 8-ந்தேதி வரை விருப்ப மனுக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெறப்படும்.
இந்த 3 நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். தேர்தல் பணிக்குழுவினர் மாநில செயலாளர் குணவழகன், தலைமை நிலைய செயலாளர் இளஞ்சேகுவேரா, தேர்தல் பணிக்குழு மாநில துணை செயலாளர்கள் தனக்கோடி, வக்கீல் தமிழினியன், இணை செய்தி தொடர்பாளர் விக்கிரமன் ஆகியோர் விருப்ப மனுக்களை பெறுகின்றனர்.
விருப்ப மனு கட்டணமாக ரூ.2000 ரொக்கமாக செலுத்த வேண்டும். விருப்ப மனு படிவத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையகத்தில் பெற்றுக்கொள்ளலாம். 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை விருப்ப மனுவுடன் இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X