என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாமகவுக்கு இணையான தொகுதிகளை கேட்டு பிடிவாதம்: அதிமுக-தேமுதிக தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிப்பு
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. வுக்கு முதலில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டது. 23 தொகுதிகளை அந்த கட்சிக்கு அ.தி.மு.க. ஒதுக்கி கொடுத்தது.
கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. தங்களுக்கும் பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதனால் அ.தி.மு.க.- தே.மு.தி.க. இடையிலான பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில் நேற்று 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடை பெறுவதாக இருந்தது. ஆனால் தே.மு.தி.க. தரப்பில் பேச்சுவார்த்தைக்கு யாரும் செல்லவில்லை.
அதேநேரத்தில் தே.மு.தி.க. துணை செயலாளரான எல்.கே. சுதிஷ் கூட்டணிக்காக அ.தி.மு.க. தான் கெஞ்சிக் கொண்டு இருக்கிறது என்று சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா? இல்லை விலகி தனித்து போட்டியிடுமா? என்பது பலத்த கேள்வியாக உருவெடுத்துள்ளது.
அ.தி.மு.க.வுடன் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்பது பற்றி தே.மு.தி.க. நிர்வாகிகள் யாரும் வாய் திறக்காமல் மவுனமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்