search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    அதிமுக-வை அழிக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது: திருமாவளவன்

    தமிழகத்தில் பாஜக வெற்றி பெறக்கூடாது. திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று திருமாவளவன் கூறினார்.
    சென்னை:

    சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 2016ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் விசிக இருந்து வருகிறது.

    * மதவாதம் தலைதூக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் திமுக கூட்டணி செயல்பட்டு வருகிறது.

    * மதசார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறக்கூடாது என்பதே விசிக-வின் நோக்கம்.

    * திமுக கூட்டணி உடைந்துவிடக்கூடாது என்பதே விசிக-வின் எண்ணம்.

    * விசிக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்த நிலையிலும் திமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    * விசிக 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டியிடும்.

    * தேர்தல் அறிவிப்புக்கு ஓரிரு நாள் முன்பு, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்த்தது. சமூக நீதியை அழித்து ஒழிக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது.

    * நட்புக்கு நேர்மையாக பாஜக நடந்து கொள்ளாது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் உடன் பிரச்சினை உள்ளது.

    * தமிழகத்தில் சனாதனத்தை வளர்க்கும் பா.ஜ.க.வை தி.மு.க. கூட்டணி விரட்டும். தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறக்கூடாது. தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

    * அதிமுக-வை அழிக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது.

    * வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அது பா.ஜ.க.வின் வெற்றியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×