என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக-வை அழிக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது: திருமாவளவன்
Byமாலை மலர்4 March 2021 9:04 AM GMT (Updated: 4 March 2021 9:04 AM GMT)
தமிழகத்தில் பாஜக வெற்றி பெறக்கூடாது. திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று திருமாவளவன் கூறினார்.
சென்னை:
சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2016ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் விசிக இருந்து வருகிறது.
* மதவாதம் தலைதூக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் திமுக கூட்டணி செயல்பட்டு வருகிறது.
* மதசார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறக்கூடாது என்பதே விசிக-வின் நோக்கம்.
* திமுக கூட்டணி உடைந்துவிடக்கூடாது என்பதே விசிக-வின் எண்ணம்.
* விசிக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்த நிலையிலும் திமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
* விசிக 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டியிடும்.
* தேர்தல் அறிவிப்புக்கு ஓரிரு நாள் முன்பு, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்த்தது. சமூக நீதியை அழித்து ஒழிக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது.
* நட்புக்கு நேர்மையாக பாஜக நடந்து கொள்ளாது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் உடன் பிரச்சினை உள்ளது.
* தமிழகத்தில் சனாதனத்தை வளர்க்கும் பா.ஜ.க.வை தி.மு.க. கூட்டணி விரட்டும். தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறக்கூடாது. தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.
* அதிமுக-வை அழிக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது.
* வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அது பா.ஜ.க.வின் வெற்றியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 2016ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் விசிக இருந்து வருகிறது.
* மதவாதம் தலைதூக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் திமுக கூட்டணி செயல்பட்டு வருகிறது.
* மதசார்பற்ற சக்திகளின் வாக்குகள் சிதறக்கூடாது என்பதே விசிக-வின் நோக்கம்.
* திமுக கூட்டணி உடைந்துவிடக்கூடாது என்பதே விசிக-வின் எண்ணம்.
* விசிக நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்த நிலையிலும் திமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
* விசிக 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டியிடும்.
* தேர்தல் அறிவிப்புக்கு ஓரிரு நாள் முன்பு, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்த்தது. சமூக நீதியை அழித்து ஒழிக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது.
* நட்புக்கு நேர்மையாக பாஜக நடந்து கொள்ளாது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் உடன் பிரச்சினை உள்ளது.
* தமிழகத்தில் சனாதனத்தை வளர்க்கும் பா.ஜ.க.வை தி.மு.க. கூட்டணி விரட்டும். தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறக்கூடாது. தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.
* அதிமுக-வை அழிக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது.
* வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அது பா.ஜ.க.வின் வெற்றியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X