என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதாவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கீடு- நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
Byமாலை மலர்2 March 2021 6:22 AM GMT (Updated: 2 March 2021 6:22 AM GMT)
கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகமான தொகுதிகளை பா.ஜனதா கேட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் போது தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
அப்போது பா.ஜனதா தேர்வு செய்து வைத்திருந்த 60 தொகுதிகள் பெயர் பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கி உள்ளார்கள். அதில் இருந்து தொகுதிகளை பகிர்ந்து கொள்ளும்படி அமித்ஷா கூறி இருக்கிறார்.
முக்கியமாக கள நிலவரம், அ.தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்துவது, தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விசயங்கள் குறித்து அமித்ஷாவுடன் ஆலோசித்து இருக்கிறார்கள்.
இந்த ஆலோசனை பற்றி அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று விவாதித்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று மாலையில் எம்.ஜி.ஆர்.நகர் லீலாபேலஸ் ஓட்டலில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம், பா.ஜனதா அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், அண்ணாமலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தை 3 மணிநேரம் நீடித்தது. இது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-
22 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எண்ணிக்கையில் பிரச்சனை எழவில்லை. தொகுதிகளை அடையாளம் காணுவதில் தான் சில பிரச்சனைகள் உள்ளது என்றனர்.
கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகமான தொகுதிகளை பா.ஜனதா கேட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இழுபறி ஏற்பட்டது. அந்த தொகுதிகளில் எதன் அடிப்படையில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றி ஒவ்வொரு தொகுதி பற்றியும் விவாதித்து முடிவு செய்துள்ளனர். பேச்சுவார்த்தை விபரம், தொகுதிகள் விபரம் பற்றி பா.ஜனதா தரப்பில் உடனடியாக டெல்லிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தொகுதிகளை உறுதிப்படுத்த ஒப்பந்தம் போடுவதற்காக தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் சி.டி.ரவி நாளை சென்னை வருகிறார்.
நாளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்திக்கின்றனர். அப்போது பா.ஜனதாவுக்கான தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் போது தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
அப்போது பா.ஜனதா தேர்வு செய்து வைத்திருந்த 60 தொகுதிகள் பெயர் பட்டியலை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கி உள்ளார்கள். அதில் இருந்து தொகுதிகளை பகிர்ந்து கொள்ளும்படி அமித்ஷா கூறி இருக்கிறார்.
முக்கியமாக கள நிலவரம், அ.தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்துவது, தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விசயங்கள் குறித்து அமித்ஷாவுடன் ஆலோசித்து இருக்கிறார்கள்.
இந்த ஆலோசனை பற்றி அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று விவாதித்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று மாலையில் எம்.ஜி.ஆர்.நகர் லீலாபேலஸ் ஓட்டலில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம், பா.ஜனதா அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், அண்ணாமலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
இந்த பேச்சுவார்த்தை 3 மணிநேரம் நீடித்தது. இது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-
22 தொகுதிகள் வரை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எண்ணிக்கையில் பிரச்சனை எழவில்லை. தொகுதிகளை அடையாளம் காணுவதில் தான் சில பிரச்சனைகள் உள்ளது என்றனர்.
கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகமான தொகுதிகளை பா.ஜனதா கேட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் இழுபறி ஏற்பட்டது. அந்த தொகுதிகளில் எதன் அடிப்படையில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பற்றி ஒவ்வொரு தொகுதி பற்றியும் விவாதித்து முடிவு செய்துள்ளனர். பேச்சுவார்த்தை விபரம், தொகுதிகள் விபரம் பற்றி பா.ஜனதா தரப்பில் உடனடியாக டெல்லிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தொகுதிகளை உறுதிப்படுத்த ஒப்பந்தம் போடுவதற்காக தமிழக பா.ஜனதா பொறுப்பாளர் சி.டி.ரவி நாளை சென்னை வருகிறார்.
நாளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்திக்கின்றனர். அப்போது பா.ஜனதாவுக்கான தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X