என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கந்தன் புகழ் பாடும் கந்தர் அலங்காரம் - தீராத வினைகளைத் தீர்க்கும் தீர்த்தகிரி
Byமாலை மலர்22 Oct 2021 11:46 AM GMT (Updated: 22 Oct 2021 11:46 AM GMT)
வேலூர் அருகே அமைந்த தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் திருக்கோவில் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகிறது.
முருகா என்று அழைத்தால் செவ்வேள் ஓடியும் வருவான். கண்ணுக்கெதிரே மலைபோல் தோன்றும் துன்பங்களையும் வேல் கொண்டு சிதறடிப்பான் முருகன். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் கந்தன், சொல்லும்போதே இனிக்கும் கற்கண்டாய் இருக்கும் செந்தில்வேலவன், உயர்ந்த பண் புகளெல்லாம் அமைந்த உயர்தனிப் பொருளாக விளங்குகிறான்.
கலியுகம் என்பது தீமைகள் நிறைந்த யுகம். நம் உறுதியைக் குலைத்து, உண்மைகளை மறைத்து, தீயவர்கள் ஓங்கி நிற்கவும், நல்லவர்கள் மனம் குமுறி, தீவினைகளின் செயல் களால் மனம் வாடி நிற்கவும் செய்யும் யுகம்.
இந்தக் காலத்தில் எல்லோரையும், எல்லா இடத்திலும் காத்து நிற்பவன் செவ்வேள். அன்பு உள்ள இடத்தில் இன்பம் உண்டாகும். முருகன் அன்பு வடிவம். அன்பே சத்தியம், அன்பே நித்தியம் என்று அவனைப் போற்றுகிறது கந்தகுரு கவசம்.
வேலூர் அருகே அமைந்த தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் திருக்கோவில் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகிறது. வள்ளியை மணம் புரிய கந்தன் வள்ளிமலை நோக்கிச் செல்லும்போது தீர்த்தகிரி மலையில் சிறிது நேரம் தங்கி இளைப்பாறியதாகக் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக மருகனின் பாதச் சுவடுகள் மலையேறிச் செல்லும் பாதையில் உள்ளது.
222 படிகள் உள்ளது.. படியேறும் போது பத்து படிகள் ஏறியதுமே வலதுபுறம் முருகனின் திருவடி தரிசனம் கிடைக்கிறது. இடது புறம் கன்னிமார்கள் சன்னதியும், வலது புறம் விழுதுகள் இல்லாத கல்லால மரமும் காட்சி தருகின்றது. மலையில் அழகான ஆலயம் கண்ணையும், மனதையும் கவருகிறது. ஆலயத்தின் மேற்கே ஆலமரம், கிழக்கே அத்திமரம், தென்கிழக்கே அரசமரம், வட கிழக்கே தலமரமான நாவல் மரம் ஆகியவை காணப்படுகிறது. ஆலமரத்தின் அடியில் ஒரு பாறையின் கீழ் இன்றும் சுனை நீர் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. இதனாலேயே இத்தலம் தீர்த்தகிரி என்று அழைக்கப் படுகிறது.
வள்ளியை காதலித்து மணந்த முருகன் தன் மனைவிக்கு சம மான இடம் தந்திருக்கிறான். தன்னில் பாதியாக மனைவியைக் கருதி அவளுக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும் என்று காண்பிக்கிறான் குமரன். எனவே இங்கு காதல் திருமணம்தான் அதிகம் நடக்கிறது.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் முருகன் அழைத்தவர் குரலுக்கு உடனே ஓடி வருகிறான். இதையே தன் கந்தர் அலங்காரப் பாடலில் “சொன்ன கிரவுஞ்ச கிரியூடுருவ” என்கிறார். பொன் மயமான கிரவுஞ்ச மலையைப் பிளந்து அதில் அடைந்து கிடந்த லட்சக் கணக்கான வீரர்களையும், பூதத் தலைவர்களையும் காப்பாற்றினார்
இதையே கந்தர் அந்தாதியில் அடியார் களுக்கு அருளும் வரப் பிரசாதத்தை உடைய, மயிலின் மேல் ஏறி கிரவுஞ்ச மலையைத் தன் வேலால் தூளாக்கிய முருகப் பெருமானின் திருவடிகளை நான் அணுகாத காரணத்தினால், பஞ்ச இந்திரியங்களின் செயல்களால் என் இதயம் இருளில் மூழ்கி இருக்கிறது என்கிறார் அருணகிரிநாதர்.
சிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் ஜியாங்கழலாச்
சிறைவர வாமையி நெஞ்சுட னேநின்று தேங்குவதே” என்று பாடுகிறார்.
உள்ளத்தில் உறைகின்ற அருள் ஜோதியை உணர்ந்து கொள். அவனையே நினைத்து அவனையே உருகப் பாடி, இருந்தால் முருகன்
கைவேல் நம்மைக் காக்கும் என்கிறார் நக்கீரர்.
குன்றம் எறிந்தாய்!குறை கடலில்சூர்தடித்தாய்
புன்தலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய்! அழகியாய்! ஏறூர்ந்தான் ஏறே!
உளையாய் என் உள்ளத்துறை”
என்று வேண்டுகிறார்.
ஏறு ஏறுகின்ற சிவபெருமானின் மைந்தனே கிரவுஞ்ச மலையையும், கடலையும் அழித்து சூரனைக் கொன்ற பூதப்படையை உடையா சிங்கம் போன்ற அழகியவனே, என்றும் தமிழ் போல் இளமையாய் இருக்கும் வேந்தனே நீ என் உள்ளத்தில் அமர்வாய் என்கிறார்.
தீர்த்தகிரியில் இவர் பாடிய திருப்புகழ் நம் அனைவருக்கும் முருகனின் பெருமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. நல்ல நெறிகளை அறியவில்லை. இந்திரியங்களின் பின்னே ஓடுகிறோம். எழுதிய தலைவிதி என்பது எந்த வழியாக ஓடுகிறது என்பதையும் அறியவில்லை என்று அறிவுரை கூறுவது போல் அமைந்துள்ளது.
மனம் பாட்டின் பொருளையும், சொல்லையும் கேட்டு உருகுவதில்லை. யமன் வரும் வழியைக் கண்டும் பக்தியால் உருகுவதே, தினந்தோறும், கஷ்டங்களை அனுபவித்தாலும்,உண்மைப் பொருளை நாடி அணுகுவதில்லை. பாழ்படும் இந்தப் பிறப்புகளிலேயே ஈடுபடுகின்றது மனம்.
உடல் சிறையாகிய இந்தக் கூட்டை விட மனமில்லாத உனக்கு ஒரு அறிய வழி சொல்லுகிறேன் என்று இத்திருப்புகழைப் பாடுகிறார்.
பாட்டிலுருகிலை கேட்டுமுருகிலை
கூற்று வழி வரு பார்த்து முருகிலை
பாட்டை யநுதின மேற்று மறிகிலை தினமானம்....என்று கூறுபவர்
வாக்கு முனதுள நோக்கு மருளுவ ....னேத்த
புகழடி யார்க்கு மெளியனை வாழ்த்த இரு வினை
நீக்கு முருகனை மருவாயோ?”
என்று கேட்டு முருகனை வணங்குவதால் இருவினைகளும் தீரும் என்கிறார். ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்தவனும், உமையவள் பாலனுமாகிய தீர்த்தகிரி இறைவனை வணங்க தீராத வினைகள் தீரும் என்கிறார்.
தீர்த்த எனதகம் ஏட்டையுடன் நினை ஏத்த
அருளுடன் நோக்கி அருளுதி . . . தீர்த்தமலை
நகர் காத்த சசிமகள் பெருமாளே!”- என்கிறார்.
இத்திருப்புகழையும், கந்தர் அலங்காரப் பாடலையும் தீர்த்தகிரி முருகனை நினைத்துச் சொல்லி வர தீராத வினைகள், குறைகள் அனைத்தும் தீரும் என்பது கண்கூடு என்கிறார்கள் பக்தர்கள். வேலை வாய்ப்பு, திருமண வரம், குழந்தை வரம் என்று வேண்டியதை அள்ளித் தரும் அருள் வள்ளல் முருகன்.
மலேசியா பத்துமலை முருகன் சிலையைப் போலவே இங்கும் 108 அடி உயர முருகன் சிலை அமைக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பத்துமலை முருகன் சிலையைச் செய்த சிற்பியே இந்தச் சிலையையும் வடிவமைத்துள்ளார்.
கலியுகம் என்பது தீமைகள் நிறைந்த யுகம். நம் உறுதியைக் குலைத்து, உண்மைகளை மறைத்து, தீயவர்கள் ஓங்கி நிற்கவும், நல்லவர்கள் மனம் குமுறி, தீவினைகளின் செயல் களால் மனம் வாடி நிற்கவும் செய்யும் யுகம்.
இந்தக் காலத்தில் எல்லோரையும், எல்லா இடத்திலும் காத்து நிற்பவன் செவ்வேள். அன்பு உள்ள இடத்தில் இன்பம் உண்டாகும். முருகன் அன்பு வடிவம். அன்பே சத்தியம், அன்பே நித்தியம் என்று அவனைப் போற்றுகிறது கந்தகுரு கவசம்.
தன்னை நம்பும் பக்தர் களின் மேல் அள வற்ற அன்பு கொண்ட அவன் மலை தோறும் குடியிருந்து அவர்களுக்கு அருள் புரிகிறான். அப்படி தீர்த்தகிரி மலையில் குடி கொண் டிருக்கும் முருகன் தீவினைகளை எல்லாம் அழிக்கிறான்.
வேலூர் அருகே அமைந்த தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் திருக்கோவில் பல விதங்களில் சிறப்பு பெற்று விளங்குகிறது. வள்ளியை மணம் புரிய கந்தன் வள்ளிமலை நோக்கிச் செல்லும்போது தீர்த்தகிரி மலையில் சிறிது நேரம் தங்கி இளைப்பாறியதாகக் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக மருகனின் பாதச் சுவடுகள் மலையேறிச் செல்லும் பாதையில் உள்ளது.
வள்ளிக்கும், முருகனுக்கும் இங்கு சம உயரத்தில் சிலை அமைந்துள்ளது. ஆலயத்தின் பின்புறம் தெரியும் பசுமை மலை கண்ணுக்கு இதமான விருந்து. மலைக்கூட்டத்தில் சின்ன மலையின் மீது முருகனின் ஆலயம் உள்ளது. அடிவாரத்தில் செல்வ விநாயகர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இங்கிருந்து சன்னதிக்கு மலையேறும் படிகள் அமைக்கப் பட்டுள்ளன. மலைமீது வாகனங்கள் செல்லவும் வழி உள்ளது.
222 படிகள் உள்ளது.. படியேறும் போது பத்து படிகள் ஏறியதுமே வலதுபுறம் முருகனின் திருவடி தரிசனம் கிடைக்கிறது. இடது புறம் கன்னிமார்கள் சன்னதியும், வலது புறம் விழுதுகள் இல்லாத கல்லால மரமும் காட்சி தருகின்றது. மலையில் அழகான ஆலயம் கண்ணையும், மனதையும் கவருகிறது. ஆலயத்தின் மேற்கே ஆலமரம், கிழக்கே அத்திமரம், தென்கிழக்கே அரசமரம், வட கிழக்கே தலமரமான நாவல் மரம் ஆகியவை காணப்படுகிறது. ஆலமரத்தின் அடியில் ஒரு பாறையின் கீழ் இன்றும் சுனை நீர் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. இதனாலேயே இத்தலம் தீர்த்தகிரி என்று அழைக்கப் படுகிறது.
வள்ளியை காதலித்து மணந்த முருகன் தன் மனைவிக்கு சம மான இடம் தந்திருக்கிறான். தன்னில் பாதியாக மனைவியைக் கருதி அவளுக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும் என்று காண்பிக்கிறான் குமரன். எனவே இங்கு காதல் திருமணம்தான் அதிகம் நடக்கிறது.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்கும் முருகன் அழைத்தவர் குரலுக்கு உடனே ஓடி வருகிறான். இதையே தன் கந்தர் அலங்காரப் பாடலில் “சொன்ன கிரவுஞ்ச கிரியூடுருவ” என்கிறார். பொன் மயமான கிரவுஞ்ச மலையைப் பிளந்து அதில் அடைந்து கிடந்த லட்சக் கணக்கான வீரர்களையும், பூதத் தலைவர்களையும் காப்பாற்றினார்
கடம்ப மலர்மாலை அணிந்தவன், ஞானத்திற்கு எல்லையாக விளங்கும் மவுன நிலையை அடைந்து மெய்யறிவால் உன்னை அறிந்து, நான் என்ற எண்ணம் முழுதும் அழிந்தே விட்டது. உனைத் துதிக்கும் நிலை தவிர வேறு எதுவும் வேண்டேன் என்கிறார்.
நம்மை அறிந்து நான் என்ற எண்ணம் அழிந்து கடம்பனே கருத்தில் நிறைந்த பிறகு அங்கு எந்த ஒரு துன்பத்திற்கும் இடம் இல்லை என்பதே உண்மை. நம் துன்பங்கள் தீரவே, மனதில் உள்ள அசுர குணங்கள் அழியவே முருகனின் அவதாரம் நிகழ்ந்தது.
சிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் ஜியாங்கழலாச்
சிறைவர வாமையி நெஞ்சுட னேநின்று தேங்குவதே” என்று பாடுகிறார்.
உள்ளத்தில் உறைகின்ற அருள் ஜோதியை உணர்ந்து கொள். அவனையே நினைத்து அவனையே உருகப் பாடி, இருந்தால் முருகன்
கைவேல் நம்மைக் காக்கும் என்கிறார் நக்கீரர்.
குன்றம் எறிந்தாய்!குறை கடலில்சூர்தடித்தாய்
புன்தலைய பூதப் பொருபடையாய் - என்றும்
இளையாய்! அழகியாய்! ஏறூர்ந்தான் ஏறே!
உளையாய் என் உள்ளத்துறை”
என்று வேண்டுகிறார்.
ஏறு ஏறுகின்ற சிவபெருமானின் மைந்தனே கிரவுஞ்ச மலையையும், கடலையும் அழித்து சூரனைக் கொன்ற பூதப்படையை உடையா சிங்கம் போன்ற அழகியவனே, என்றும் தமிழ் போல் இளமையாய் இருக்கும் வேந்தனே நீ என் உள்ளத்தில் அமர்வாய் என்கிறார்.
முருகன் அழ கன். தமிழ்க் கட வுள். தமிழுக்குக் கடவுள். அவனை நம் நெஞ்சத்தில் நிலை நிறுத்தினால் அழியாப் புகழுடன் வாழ வைப்பான். அவனை அறிந்து வணங்க வேண்டியதே நம் கடமை. அவனை தலங்கள் தோறும் சென்று தரிசித்துக்கந்தனின் பெருமையைப் பாடினார் அருணகிரியார்.
தீர்த்தகிரியில் இவர் பாடிய திருப்புகழ் நம் அனைவருக்கும் முருகனின் பெருமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. நல்ல நெறிகளை அறியவில்லை. இந்திரியங்களின் பின்னே ஓடுகிறோம். எழுதிய தலைவிதி என்பது எந்த வழியாக ஓடுகிறது என்பதையும் அறியவில்லை என்று அறிவுரை கூறுவது போல் அமைந்துள்ளது.
மனம் பாட்டின் பொருளையும், சொல்லையும் கேட்டு உருகுவதில்லை. யமன் வரும் வழியைக் கண்டும் பக்தியால் உருகுவதே, தினந்தோறும், கஷ்டங்களை அனுபவித்தாலும்,உண்மைப் பொருளை நாடி அணுகுவதில்லை. பாழ்படும் இந்தப் பிறப்புகளிலேயே ஈடுபடுகின்றது மனம்.
உடல் சிறையாகிய இந்தக் கூட்டை விட மனமில்லாத உனக்கு ஒரு அறிய வழி சொல்லுகிறேன் என்று இத்திருப்புகழைப் பாடுகிறார்.
பாட்டிலுருகிலை கேட்டுமுருகிலை
கூற்று வழி வரு பார்த்து முருகிலை
பாட்டை யநுதின மேற்று மறிகிலை தினமானம்....என்று கூறுபவர்
வாக்கு முனதுள நோக்கு மருளுவ ....னேத்த
புகழடி யார்க்கு மெளியனை வாழ்த்த இரு வினை
நீக்கு முருகனை மருவாயோ?”
என்று கேட்டு முருகனை வணங்குவதால் இருவினைகளும் தீரும் என்கிறார். ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்தவனும், உமையவள் பாலனுமாகிய தீர்த்தகிரி இறைவனை வணங்க தீராத வினைகள் தீரும் என்கிறார்.
தீர்த்த எனதகம் ஏட்டையுடன் நினை ஏத்த
அருளுடன் நோக்கி அருளுதி . . . தீர்த்தமலை
நகர் காத்த சசிமகள் பெருமாளே!”- என்கிறார்.
இத்திருப்புகழையும், கந்தர் அலங்காரப் பாடலையும் தீர்த்தகிரி முருகனை நினைத்துச் சொல்லி வர தீராத வினைகள், குறைகள் அனைத்தும் தீரும் என்பது கண்கூடு என்கிறார்கள் பக்தர்கள். வேலை வாய்ப்பு, திருமண வரம், குழந்தை வரம் என்று வேண்டியதை அள்ளித் தரும் அருள் வள்ளல் முருகன்.
இங்கு ஆடிக் கிருத்திகை மூன்று நாள் விழாவாக மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது இது தவிர, சஷ்டி, சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம், பால்குட அபிஷேகம், விளக்கு பூஜை போன்றவை சிறப்பாகச் செய்யப் படுகிறது.
சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வசூர் ஊரின் எல்லையில் அமைந்துள்ளது தீர்த்தகிரி. சோழர்களும், விஜய நகர அரசும் இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்திருக்கிறது. தீர்த்தகிரி தேர் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலை போலவே இங்கும் பல சித்தர்கள் பல வடிவங்களில் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை நிலவுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X