search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • ஒரு விலங்கு ஏன் நரமாமிசத்தை தேடுகிறது? என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    வன விலங்குகள் வேட்டை தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அவற்றில் சில வீடியோக்கள் ரசனையாகவும், சில வீடியோக்கள் அதிர்ச்சியாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் முதலை வேட்டை தொடர்பான வீடியோ இணைய பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    அதில், ஒரு ஓடையில் பெரிய முதலை மெதுவாக தண்ணீரில் மிதந்து செல்கிறது. அப்போது அங்கு ஒரு சிறிய முதலை செல்வதையும், திடீரென பெரிய முதலை அந்த குட்டி முதலையை பிடித்து உண்ணும் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இணையத்தில் வைரலாகி 35 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ள இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ஒரு விலங்கு ஏன் நரமாமிசத்தை தேடுகிறது? என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு பயனர், இதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இதுபோன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் கங்கை நதியில் நடுப்பகுதிக்கு ஒருவர் படகை எடுத்து செல்கிறார்.
    • தண்ணீருக்குள் காந்தத்தை வீசி கடலுக்குள் கிடக்கும் நாணயங்களை சேகரிக்கிறார்.

    கங்கை நதியில் புனித நீராடும் பொதுமக்கள் பலரும் தங்கள் பொருட்களை கங்கை நதியில் வீசி செல்கின்றனர். சிலர் நாணயங்களை வீசி சென்று விடுகின்றனர்.

    இந்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் கங்கை நதியில் நடுப்பகுதிக்கு ஒருவர் படகை எடுத்து செல்கிறார். பின்னர் தண்ணீருக்குள் காந்தத்தை வீசி கடலுக்குள் கிடக்கும் நாணயங்களை சேகரிக்கிறார். பின்னர் அந்த நாணயங்களை சந்தையில் விற்று தங்கள் வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்வதாக அவர் கூறுகிறார்.

    சில நேரங்களில் இவ்வாறு நாணயங்களை சேகரிக்கும் போது தங்கம், வெள்ளி கூட கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்வைகளை குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இப்படியெல்லாம் கூட பணம் கிடைக்குமா என பதிவிட்டு வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து நாகம்மாவின் ஊரில் விசாரணை நடத்தினர்.
    • நாகம்மா உடலை 10 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், கோனே கண்டலா அடுத்த பெத்தமரி வீடுவை சேர்ந்தவர் நாகம்மா (வயது 80). இவரது மகன், பெத்த பஜார். இவருக்கு வெங்கடேஷ், தினா என 2 மகன்கள் உள்ளனர்.

    உள்ளூரில் சரி வர கூலி வேலை கிடைக்காததால் பெத்த பஜார் தனது மனைவி மகன்களுடன் குண்டூருக்கு குடி பெயர்ந்தார். அங்கு வெங்கடேஷ் நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கங்களுக்கு ஆளானார். மேலும் புதிய செல்போன் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்தது. புதிய செல்போன் வாங்க வேண்டுமென தனது பெற்றோரிடம் பணத்தை கேட்டார். அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என தெரிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 4-ந் தேதி வெங்கடேஷ் பாட்டி நாகம்மா வீட்டிற்கு வந்தார். பாட்டியை கொலை செய்து அவர் அணிந்திருக்கும் நகைகளை விற்று புதிய செல்போன் வாங்க முடிவு செய்தார்.

    அதன்படி நள்ளிரவில் நாகம்மா வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது வெங்கடேஷ் பாட்டியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக் கொண்டார். பின்னர் வீட்டில் குழி தோண்டி பாட்டியின் உடலை புதைத்தார்.

    மறுநாள் காலை ஒன்றும் தெரியாதது போல் பாட்டியின் வீட்டில் இருந்து எமிகானூர் வந்து அங்குள்ள நகைக்கடையில் பாட்டியின் நகைகளை ரூ.29 ஆயிரத்துக்கு விற்பனை செய்தார். பின்னர் குண்டூருக்கு சென்று அங்குள்ள செல்போன் கடையில் ரூ.25 ஆயிரத்திற்கு புதிய செல்போன் வாங்கினார்.

    இந்த நிலையில் நாகம்மாவின் வீட்டிற்கு மற்றொரு பேரன் கோபால் என்பவர் வந்தார். வீட்டில் பாட்டி இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து கோனே கண்டலா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நாகம்மாவின் ஊரில் விசாரணை நடத்தினர். அப்போது வெங்கடேஷ் பாட்டியின் வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. போலீசார் வெங்கடேஷை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து விற்பனை செய்ததை வெங்கடேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வெங்கடேஷை கைது செய்தனர். மேலும் நாகம்மா உடலை 10 நாட்களுக்கு பிறகு தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    • நகர்புறங்களில் 21ஆயிரத்து 595 வாக்கு சாவடிகளும், கிராம புறங்களில் 37ஆயிரத்து 239 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.
    • வேட்புமனு தாக்கல் மார்ச் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெங்களூரு வடக்கு தொகுதியில் அதிகபட்சமாக 31 லட்சத்து 74ஆயிரத்து 98 வாக்காளர்களும், உடுப்பி-சிக்மகளூர் தொகுதியில் குறைந்தபட்சமாக 15லட்சத்து 72ஆயிரத்து 958 வாக்காளர்களும் உள்ளனர்.

    தேர்தலுக்காக 58ஆயிரத்து 834 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றில் நகர்புறங்களில் 21ஆயிரத்து 595 வாக்கு சாவடிகளும், கிராம புறங்களில் 37ஆயிரத்து 239 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணியில் 3.51லட்சம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

    கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக உடுப்பி-சிக்மகளூர், ஹாசன், தட்சிண கன்னடம், சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூரு, சாம்ராஜ் நகர், பெங்களூரு கிராமப்புறம், பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மையம், சிக்கபல்லாபூர், கோலார் ஆகிய 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 28-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை ஏப்ரல் 5-ந் தேதியும், மனுக்களை திரும்ப பெற 8-ந் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் சிக்கோடி, பெல்காம், பாகல்கோட், விஜயபுரா, கலபுர்கி, ராய்ச்சூர், பிதார், கொப்பளா, பெல்லாரி, பாருங்கள், தார்வாட், உத்தரகன்னடம், தாவனகரே, சிமோகா ஆகிய தொகுதிகளுக்கு 2-வது கட்டமாக மே 7-ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி நிறைவு பெறுகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை 20-ந் தேதியும், வேட்பு மனுக்களை திரும்பப்பெற ஏப்ரல் 22-ந் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • அமலாக்கத் துறையின் சம்மன்களுக்கு கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார்.
    • டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி ஜாமின் பெற்றார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 8 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்னும் ஆஜராகவில்லை.

    அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார்.

    இதற்கிடையே விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கில் மார்ச் 16-ம் தேதி ஆஜராகும்படி கோர்ட் உத்தரவிட்டது. நேற்று அவர் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜாமின் பெற்றார்.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதில் வரும் 21-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இஷானியின் வீடியோ பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில், சுகாதார அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பாக விசாரித்துள்ளனர்.
    • சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தினர் நடந்த தவறுக்கு இஷானியிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    டெல்லியில் ஒரு ஓட்டலில் பரிமாறப்பட்ட தோசையில் 8 கரப்பான்பூச்சிகள் இருந்ததாக பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இஷானி என்ற அந்த பெண் டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள பிரபலமான ஓட்டலுக்கு கடந்த 7-ந்தேதி சென்றுள்ளார். அங்கு பிளைன் தோசை ஆர்டர் செய்த அவருக்கு சிறிது நேரத்தில் தோசை பரிமாறி உள்ளனர். அதில், பல கரும்புள்ளிகள் இருப்பதையும், அவை கரப்பான் பூச்சிகள் என்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இஷானியும், அவரது தோழியும் தோசையில் கரப்பான் பூச்சிகள் இருந்ததை வீடியோ எடுத்துள்ளனர்.

    இதைப்பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட உணவை எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து இஷானி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே இஷானியின் வீடியோ பதிவு இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில், சுகாதார அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பாக விசாரித்துள்ளனர். அவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் ஓட்டல்களில் தங்களுக்கு நேர்ந்த உணவு அனுபவம் குறித்து பகிர்ந்தனர்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தினர் நடந்த தவறுக்கு இஷானியிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


    • சமீப காலமாக இணையத்தில் சமோசா தயாரிப்பு தொடர்பாக மட்டுமே புதுபுது வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.
    • வீடியோ இணையத்தில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளை குவித்துள்ளது.

    இந்தியாவில் தெருவோரங்கள் மற்றும் தள்ளுவண்டியில் விற்பனை செய்யப்படும் சிற்றுண்டி வகைகள் மற்றும் தின்பண்டங்களில் சமோசாவுக்கு தனி இடம் உண்டு. காரமான மசாலா கலவைகள் தொடங்கி பல்வேறு ரகங்களில் சமோசாக்கள் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் சமீப காலமாக இணையத்தில் சமோசா தயாரிப்பு தொடர்பாக மட்டுமே புதுபுது வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள புதிய 'பிந்தி சமோசா' மோகம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக மசாலா உருளைக்கிழங்கால் சமோசாக்கள் தயாரிக்கப்படும் நிலையில் இந்த புதிய வகை பிந்தி சமோசாவில் பச்சை நிறத்தில் சட்னி உள்ளிட்ட கலவை நிரப்பி தயாரிக்கப்படும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வைகளை குவித்துள்ளது. வீடியோவை பார்த்த உணவு ஆர்வலர்கள் பலரும் இந்த சமோசா தயாரிப்பு குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர் சமோசாவை அப்படியே விட்டு விடுங்கள் எனவும், மற்றொரு பயனர், சமோசா சாப்பிடும் மனநிலையை அழித்து விட்டீர்கள் எனவும் பதிவிட்டு உள்ளார்.


    • இஸ்லாமியத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளாக (சபை நாள்) அனுசரிக்கப்படுகிறது.
    • இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி, வெள்ளிக்கிழமை ஆகும்.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கேரளாவில் 26-ந்தேதியும் நடக்கிறது. இந்த 2 நாட்களும் வெள்ளிக்கிழமை என்பதால், இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க சிரமத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவி வருகிறது.

    இது தொடர்பாக இந்திய முஸ்லிம் லீக் கேரள மாநில பொதுச்செயலாளர் பி.எம்.ஏ.சலாம் கூறியதாவது:-

    கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆகும். இஸ்லாமியத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா நாளாக (சபை நாள்) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் முஸ்லிம்கள், நமாஸ் (பிரார்த்தனை) செய்ய மசூதிகளுக்கு செல்வார்கள். அந்த நாளில் வாக்குப்பதிவு வைத்திருப்பது இஸ்லாமிய மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதே நிலை தான் தமிழகத்திலும் உள்ளது. அங்கு வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி, வெள்ளிக்கிழமை ஆகும்.

    இந்த நாள் இஸ்லாமிய நம்பிக்கையை பின்பற்றும் வாக்காளர்கள், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இடையூறாக இருக்கும். இதுகுறித்து உடனடியாக தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதனை மறுபரிசீலனை செய்ய அவர்கள் தயாராக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, மாநிலத்தில் காங்கிரஸ் ஆரம்பத்தில் இடதுசாரிகள் பக்கம் நின்றது.
    • 18 காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒருவர் கூட பாராளுமன்றத்தில், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை.

    திருவனந்தபுரம்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல் படுத்தமாட்டோம் என்று கேரளா, தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, மாநிலத்தில் காங்கிரஸ் ஆரம்பத்தில் இடதுசாரிகள் பக்கம் நின்றது. ஆனால் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றி பா.ஜனதாவுக்கு ஆதரவளித்தது.

    கேரளாவை சேர்ந்த 18 காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒருவர் கூட பாராளுமன்றத்தில், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. பாராளுமன்றத்தில் கேரளாவின் குரல் மவுனமாகிறது.

    பாராளுமன்றத்தில் காங்கிரசின் முக்கிய குரலாக இருக்க வேண்டியவர் வயநாடு எம்.பி. ராகுல்காந்தி. ஆனால் அவர் மக்களுக்காக பேசினாரா? மதச்சார்பற்ற இந்தியாவை அழிக்கும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து காங்கிரசிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை.

    வயநாட்டில், வன விலங்குகள் தாக்குதலால் மக்கள் தொடர்ந்து உயிர் இழக்கிறார்கள். வனச் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் இதற்கு நிரந்தர தீர்வு காணமுடியாது. இந்த விவகாரத்திலும் ராகுல்காந்தியால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செங்கடலில் பயணிக்கும் சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
    • கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களின் சதியை இந்திய கடற்படை முறியடித்தது.

    புதுடெல்லி:

    அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் அடிக்கடி வந்து அந்த கப்பல்களை கடத்தி அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கொள்ளையர்களை ஒடுக்க இந்திய கடற்படை தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் மால்டா நாட்டில் கொடியுடன் சென்ற எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். அந்தக் கப்பலை அவர்கள் தங்களது கடத்தல் முயற்சிக்கு பயன்படுத்தி வந்தனர்.

    இதற்கிடையே இந்திய கடற்கரையிலிருந்து 2,800 கிலோமீட்டர் தொலைவில் கடற்கொள்ளையர் கடத்திய எம்.வி.ரூயென் கப்பல் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. உடனே இந்திய கடற்படை அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

    கடற்கொள்ளையர்களிடம் இருந்து கப்பலை மீட்கும் முயற்சியில் கடல் ரோந்து விமானம் ஐ.என்.எஸ். கொல்கத்தா, ஐ.என்.எஸ். சுபத்ரா கப்பல்களை சி-17 விமானம், ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டன.

    சரக்கு கப்பலை சுற்றிவளைத்து கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது இந்திய ஹெலிகாப்டர் மீது கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். கப்பலை மீட்கும் பணி சுமார் 40 மணி நேரம் நிகழ்ந்தது. சரணடையாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய கடற்படை எச்சரிக்கை விடுத்தது. சுற்றி வளைக்கப்பட்டதால் கடற்கொள்ளையர்கள், இந்திய கடற்படையில் சரணடைந்தனர். கப்பலில் இருந்த 35 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

    கப்பல் ஊழியர்கள் 17 பேரை மீட்டனர். இவர்கள் 100-நாட்களுக்கும் மேலாக கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர். எம்.வி.ரூயென் கப்பல் தற்போது முழுமையாக இந்திய கடற்படை வசம் உள்ளது.

    இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டோ விவேக் மத்லால் கூறுகையில், கடந்த 40 மணி நேரத்தில் ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் உள்ளிட்டவைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மூலம் 35 கடற்கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட னர். 17 ஊழியர்கள் எந்த வித காயமுமின்றி மீட்கப்பட்ட னர். கப்பலில் இருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றார்.

    • 2104-ம் ஆண்டு தான் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
    • ஜம்மு மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்கியது.

    அப்போது, இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கடைசியாக 2104-ம் ஆண்டு தான் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.


    நாடு முழுவதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதும், ஜம்மு-காஷ்மீருக்கு தேதி அறிவிக்கப்படவில்லை.

    ஆனால், ஜம்மு-காஷ்மீரில் பாராளுமன்றத்துக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த யூனியன் பிரதேசத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. 5 தொகுதிகளுக்கும் 5 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி ஜம்மு பகுதியில் உள்ள உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    அனந்த்நாக் தொகுதியில் மே 7 -ம் தேதியும், ஸ்ரீநகர் தொகுதியில் மே 13-ம் தேதியும், பாரமுல்லா தொகுதியில் மே 20-ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் 42.58 லட்சம் பெண்கள் மற்றும் 161 மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட மொத்தம் 86.93 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளனர்.

    • மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
    • மக்கள் தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே ஓடுவதை பார்க்க முடிந்தது.

    ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள பெரிய தொழில் மையமான தருஹேராவில் உள்ள லைஃப் லாங் நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது.

    இதில், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

    இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், வானத்தில் புகை மூட்டத்துடன் மக்கள் தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே ஓடுவதை பார்க்க முடிந்தது.

    இதுகுறித்து சிவில் சர்ஜன் டாக்டர் சுரேந்தர் யாதவ் கூறுகையில், " ரேவாரி, தாருஹேராவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்துள்ளது. பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

    சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஒருவருக்கு காயம் தீவிரமாக உள்ள நிலையில் மேலும், ஒரு தீவிர ரோஹ்தக்கிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்" என்றார்.

    ×