என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் நவம்பர் 19-ம் தேதி பொது விடுமுறை
Byமாலை மலர்3 Nov 2016 1:01 PM GMT (Updated: 7 Nov 2016 7:16 AM GMT)
தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 19-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் நவம்பர் 19-ம் தேதி மூன்று தொகுதிகளிலும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:-
தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் 19-ம் தேதி பொது விடுமுறை விடப்படுகிறது.
இந்த தொகுதிகளை உள்ளடக்கிய கரூர், தஞ்சாவூர், மதுரை மாவட்டங்கள் மற்றும் இந்த தொகுதிகளில் வாக்குரிமை உள்ள அண்டை மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 19-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடவேண்டும். மூன்று தொகுதிகளிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் நவம்பர் 19-ம் தேதி மூன்று தொகுதிகளிலும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:-
தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் 19-ம் தேதி பொது விடுமுறை விடப்படுகிறது.
இந்த தொகுதிகளை உள்ளடக்கிய கரூர், தஞ்சாவூர், மதுரை மாவட்டங்கள் மற்றும் இந்த தொகுதிகளில் வாக்குரிமை உள்ள அண்டை மாவட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 19-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடவேண்டும். மூன்று தொகுதிகளிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X