என் மலர்


என்னமா கதவுடுறானுங்க
Director: பிரான்சிஸ் ராஜ்
Editor: NA
Camera: NA
Music: NA
Release: 2016-08-05 00:00:00
OTT: NA
படக்குழுவினர்
கதைக்களம்
புதுமுக நடிகர் அர்வி நடிப்பு மற்றும் இயக்கத்தில் பேய் படமாக வெளிவந்திருக்கும் ‘என்னமா கதவுடுறானுங்க’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்...
விமர்சனம்
என்னமா கதவுடுறானுங்க
நாயகன் அர்வி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் பேய்களுடன் நேரடியாக பேசுவதற்காக ஒரு மெஷின் ஒன்றை தயாரித்து, அதன்மூலம் பேய்களிடம் பேசி வருகிறார். அதே தொலைக்காட்சியில் நாயகி அலிஷாவும் தொகுப்பாளியான பணியாற்றி வருகிறார். அர்வி தயார் செய்யும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அவர்தான் தொகுப்பாளினியாக பணியாற்றுகிறார்.
இந்நிலையில், ரவிமரியா மிகப்பெரிய பொருட்செலவில் கட்டிவரும் ஒரு கட்டிடத்தில் ஆவி இருப்பதாக அறியும் அர்வி, அங்கு சென்று தான் கண்டுபிடித்த மெஷினை வைத்து ஆவியிடம் பேசுகிறார். அப்போது, அவருடன் பேசும் ஆவி, அந்த கட்டிடம் எழுப்பப்பட்டிருக்கும் இடம் சுடுகாடு என்பதால், தங்கள் இடத்தை ஆக்கிரமித்துவிட்டதாக புகார் சொல்கிறது.
இதை அப்படியே அர்வி தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய, ரவிமரியாவுக்கு பிரச்சினை வருகிறது. இதனால், ரவிமரியாவின் பகைக்கு ஆளாகிறார் அர்வி. இதன்பிறகு, மதுரைக்கு அருகில் கோட்டைமேடு என்ற கிராமத்தில் நடக்கும் கொலைகளுக்கு ஒரு பேய்தான் காரணம் என்றும், அதை கண்டுபிடிக்க அர்விக்கு அழைப்பு வருகிறது.
அதன்படி, தனது குழுவுடன் சென்று அங்கு அவர்கள் சொன்னபடி பேய் இருக்கிறதா? என்று ஆராய்கிறார். அப்போது, மற்றொரு நாயகியான சௌம்யாவை பார்க்கும் அர்வி அவள் மீது காதல்வயப்படுகிறார். சௌம்யாவும் அர்வியை காதலிக்கிறாள். இந்நிலையில், அர்வியின் ஆராய்ச்சியில் அந்த ஊரில் ஆவி இல்லை என்று தெரிகிறது. ஆனால், அந்த ஊரில் உள்ள அனைவரும் ஆவிதான் இந்த கொலைகளையெல்லாம் செய்கிறது. அதை நீரூபித்துவிட்டுத்தான் அந்த ஊரை விட்டு செல்லவேண்டும் என்று அர்விக்கு கட்டளையிடுகின்றனர்.
அதன்பிறகு நாயகன் அந்த ஆவியை கண்டுபிடித்தாரா? ஆவிதான் அந்த ஊரில் நடக்கும் கொலைகளையெல்லாம் செய்ததா? எதற்காக அந்த கொலைகளை அந்த ஆவி செய்கிறது? என்பதே மீதிக்கதை.
ஹீரோயிசம் இல்லாத ஒரு கதையில் ஹீரோயிசம் காட்டி நடித்திருக்கிறார் நடிகர் அர்வி. மேலும், இவர் பேசும் வசனங்கள் அழகாக இருந்தாலும், அதை இவர் பேசும் விதங்கள் சரியாக இல்லை.
படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அர்வி தயாரிப்பாளர் என்பதால் தன்னைத்தானே முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக மற்ற கதாபாத்திரங்களுக்கு எதுவும் முக்கியத்துவம் கொடுக்காதது போல் தெரிகிறது. சாம்ஸின் காமெடி ரசிக்க வைத்தாலும், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது சலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. ரவிமரியா வழக்கம்போல் காமெடி வில்லனாக ரசிக்க வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வெளிவந்திருக்கிறது. எல்லா படங்களிலும் பேய் என்பது கொடூரமானது என்பதை காட்டியிருப்பார்கள். ஆனால், இந்த படத்தில் பேயிடம் நான் அன்போடு பழகினால், அதுவும் நம்மிடம் அன்பாக நடந்துகொள்ளும் என்று வித்தியாசமான கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரான்சிஸ் ராஜ். ஆனால், சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல் கோட்டை விட்டுவிட்டார்.
சிவபாஸ்கரின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான். ரவி விஜயானந்தின் இசை படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. பேய் படத்திற்குண்டான வழக்கமான பயமுறுத்தும் காட்சிகள் இல்லாததால் கதைக்கு ஏற்றவாறு இசையமைத்திருக்கிறார். பாடல்களிலும் ஓரளவுக்கு தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘என்னமா கதவுடுறானுங்க’ கதவுடுறானுங்க....
இந்நிலையில், ரவிமரியா மிகப்பெரிய பொருட்செலவில் கட்டிவரும் ஒரு கட்டிடத்தில் ஆவி இருப்பதாக அறியும் அர்வி, அங்கு சென்று தான் கண்டுபிடித்த மெஷினை வைத்து ஆவியிடம் பேசுகிறார். அப்போது, அவருடன் பேசும் ஆவி, அந்த கட்டிடம் எழுப்பப்பட்டிருக்கும் இடம் சுடுகாடு என்பதால், தங்கள் இடத்தை ஆக்கிரமித்துவிட்டதாக புகார் சொல்கிறது.
இதை அப்படியே அர்வி தனது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ய, ரவிமரியாவுக்கு பிரச்சினை வருகிறது. இதனால், ரவிமரியாவின் பகைக்கு ஆளாகிறார் அர்வி. இதன்பிறகு, மதுரைக்கு அருகில் கோட்டைமேடு என்ற கிராமத்தில் நடக்கும் கொலைகளுக்கு ஒரு பேய்தான் காரணம் என்றும், அதை கண்டுபிடிக்க அர்விக்கு அழைப்பு வருகிறது.
அதன்படி, தனது குழுவுடன் சென்று அங்கு அவர்கள் சொன்னபடி பேய் இருக்கிறதா? என்று ஆராய்கிறார். அப்போது, மற்றொரு நாயகியான சௌம்யாவை பார்க்கும் அர்வி அவள் மீது காதல்வயப்படுகிறார். சௌம்யாவும் அர்வியை காதலிக்கிறாள். இந்நிலையில், அர்வியின் ஆராய்ச்சியில் அந்த ஊரில் ஆவி இல்லை என்று தெரிகிறது. ஆனால், அந்த ஊரில் உள்ள அனைவரும் ஆவிதான் இந்த கொலைகளையெல்லாம் செய்கிறது. அதை நீரூபித்துவிட்டுத்தான் அந்த ஊரை விட்டு செல்லவேண்டும் என்று அர்விக்கு கட்டளையிடுகின்றனர்.
அதன்பிறகு நாயகன் அந்த ஆவியை கண்டுபிடித்தாரா? ஆவிதான் அந்த ஊரில் நடக்கும் கொலைகளையெல்லாம் செய்ததா? எதற்காக அந்த கொலைகளை அந்த ஆவி செய்கிறது? என்பதே மீதிக்கதை.
ஹீரோயிசம் இல்லாத ஒரு கதையில் ஹீரோயிசம் காட்டி நடித்திருக்கிறார் நடிகர் அர்வி. மேலும், இவர் பேசும் வசனங்கள் அழகாக இருந்தாலும், அதை இவர் பேசும் விதங்கள் சரியாக இல்லை.
படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அர்வி தயாரிப்பாளர் என்பதால் தன்னைத்தானே முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக மற்ற கதாபாத்திரங்களுக்கு எதுவும் முக்கியத்துவம் கொடுக்காதது போல் தெரிகிறது. சாம்ஸின் காமெடி ரசிக்க வைத்தாலும், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பது சலிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. ரவிமரியா வழக்கம்போல் காமெடி வில்லனாக ரசிக்க வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வெளிவந்திருக்கிறது. எல்லா படங்களிலும் பேய் என்பது கொடூரமானது என்பதை காட்டியிருப்பார்கள். ஆனால், இந்த படத்தில் பேயிடம் நான் அன்போடு பழகினால், அதுவும் நம்மிடம் அன்பாக நடந்துகொள்ளும் என்று வித்தியாசமான கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரான்சிஸ் ராஜ். ஆனால், சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல் கோட்டை விட்டுவிட்டார்.
சிவபாஸ்கரின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான். ரவி விஜயானந்தின் இசை படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. பேய் படத்திற்குண்டான வழக்கமான பயமுறுத்தும் காட்சிகள் இல்லாததால் கதைக்கு ஏற்றவாறு இசையமைத்திருக்கிறார். பாடல்களிலும் ஓரளவுக்கு தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘என்னமா கதவுடுறானுங்க’ கதவுடுறானுங்க....
Login/Sign Up to review and rate this movie in detail.