search icon
என் மலர்tooltip icon

    கரூர்

    • நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எந்த குடும்பத்தில் இதுவரை அரசு வேலை சேரவில்லையோ அந்த குடும்பத்திற்கு அரசு வேலை எட்டிப் பார்க்கும்.
    • தி.மு.க.வை போல ஆண்டு தோறும் அடையாறு ஆற்றை சுத்தப்படுத்துவதாக பொய் சொல்லி அடிக்கடி நிதியை ஒதுக்க மாட்டோம்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் சின்ன தாராபுரத்தில் 100-வது நாளாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை பங்கேற்ற 'என் மண், என் மக்கள்' நடை பயணம் நேற்று மாலை நடை பெற்றது. சின்னதாராபுரம் நேரு நகரில் கரூர் மெயின் சாலையில் தொடங்கிய இந்த நடை பயணத்திற்கு வந்த மாநில தலைவர் அண்ணாமலைக்கு கரூர் மாவட்டத்தலைவர் வி.வி.செந்தில்நாதன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    அரவக்குறிச்சி சட்ட மன்றத் தொகுதி இணை அமைப்பாளரும், கரூர் மாவட்டச் செயலாளருமான ஆர்.வி.எஸ்.செல்வராஜ் வரவேற்றார். முன்னாள் எம்.பி.யும், மாநில துணைத் தலைவருமான கேபி.ராமலிங்கம், மாநில நிர்வாகி சிவசுப்ரமணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தமிழகம், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளையும் வெல்வோம். அரசியலில் நல்ல மனிதர்கள் சேவை செய்வதற்காக வருவார்கள் என்ற எதிர்பார்ப்பை இந்த யாத்திரை உருவாக்கியிருக்கிறது.

     

    தமிழகத்தில் இப்போது இருக்கும் அரசியலில் இருந்து தமிழகம் வெளியே வரவேண்டும். ஊழல் ஆட்சி, குடும்ப ஆட்சி, தனி மனிதனை போற்றி போற்றி கடவுளாக உயர்த்தி, சாமானிய மக்கள் எல்லாம் அரசியலில் இருந்து ஒதுக்கும் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    செந்தில் பாலாஜி 280 நாட்களை தாண்டி சிறைச் சாலையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து கொண்டு, அவருக்கு மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் போய்க் கொண்டிருந்தது. அண்மையில்தான் அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லி இருக்கின்றார்.

    அவரது சகோதரர் இன்னும் பிடிபடவில்லை. இது தமிழகத்தினுடைய காவல்துறைக்கு தலைகுனிவா அல்லது ஊழல்வாதிகளுக்கு காவல்துறை ஒத்துழைக்கிறதா என தெரியவில்லை. அரவக் குறிச்சி தொகுதியில் தொழிற் சாலைகள் கிடையாது, தண்ணீர் கிடையாது, நீர் மேலாண்மை கிடையாது.

    மூன்று நதிகள் அருகில் பாய்ந்தும் வானம் பார்த்த பூமியாக இருக்கிறது. இந்த நிலை பா.ஜ.க. ஆட்சிக்கு வரும்போது மாறும். வளர்ச்சி மட்டுமே தன்னுடைய ஒற்றை குறிக்கோளாக இருந்து ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி நடத்திக் கொண்டிருக்கிறார்.

    மத்தியில் 76 மந்திரிகள் இருக்கின்றார்கள். அவர்கள் ஒரு குண்டூசியை திருடிவிட்டார்கள், மக்களுடைய வரிப்பணத்தை ஒரு ரூபாய் சாப்பிட்டுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதா என்பதை சிந்தித்து பாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எந்த குடும்பத்தில் இதுவரை அரசு வேலை சேரவில்லையோ அந்த குடும்பத்திற்கு அரசு வேலை எட்டிப் பார்க்கும்.

     

    எல்லா குழந்தைகளுக்கும் தரமான கல்விக்கொடுப்போம். டாஸ்மாக்கிற்கு தடை விதித்து, கள் விற்பனையை கொண்டுவருவோம். தி.மு.க.வை போல ஆண்டு தோறும் அடையாறு ஆற்றை சுத்தப்படுத்துவதாக பொய் சொல்லி அடிக்கடி நிதியை ஒதுக்க மாட்டோம். கமிஷன் அடிப்பதற்கே பட்ஜெட் அவர்கள் போடுகிறார்கள்.

    மேலும் பா.ஜ.க தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்போது, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 நவோதயா பள்ளிகளை கொண்டு வருவோம். இந்த பள்ளிகளுக்கு காமராஜர் பெயரை வைப்போம். காவல் துறையை மறுசீரமைப்போம்.

    2 கட்சிகளும் வேண்டாம் என்கின்ற நிலைப்பாட்டில் பா.ஜ.க. நின்று கொண்டிருக்கிறது. ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். 2024-ல் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டு, 2026 தேர்தலை முடிவு செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பா.ஜ.க. மாநில மகளிரணி துணைத்தலைவர் மீனா வினோத்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் சக்தி வேல்முருகன் உள்ளிட்ட கட்சியினர் திரளாக பங்கேற்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம்.
    • செந்தில் பாலாஜி தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அங்கு கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் வந்தனர்.

    அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டுக்குள் சென்ற அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே இந்த வீட்டில் பல முறை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடைபெற்ற நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம். அல்லது உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம்.

    ஆனால், பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படை வீரர்கள் இல்லாமல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அங்கு வசிக்கும் அவரது தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடியும் வரை, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொ டர்பான அமலாக்கத்துறையின் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கில் தீர்ப்பை வரும் 15-ந்தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார். இந்த சூழலில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சாமி கோவிலின் உபகோயிலாக இணைக்கப்பட்டது.
    • கோவிலை பழுது பார்த்து புனரமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் திரு முக்கூடலூரில் அகஸ்தீஸ்வரர் சாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் அகஸ்தீஸ்வரர், இறைவி, அஞ்சனாச்சியம்மன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

    நிதி வசதி இல்லாத இக்கோவில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சாமி கோவிலின் உபகோயிலாக இணைக்கப்பட்டது.

    இக்கோவிலின் அகஸ்தீஸ்வரர் மணலால் பிடிக்கப்பட்டவர் எனவும், இங்கு அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.இக்கோவிலின் மதில் சுவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முழுவதும் சேதம் அடைந்தது. சோழ மன்னர்கள் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் தொடர்பாக கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகிறது .திருக்கோயில் உள்ள பழமையான கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலை பழுது பார்த்து புனரமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இந்த நிதி மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்பாள் சன்னதி, மடப் பள்ளி, ராஜகோபுரம் ஆகியவற்றில் புனரமைப்பு பணிகளும், சோபனா மண்டபம், வசந்த மண்டபம், அபிஷேக மண்டபம், சுப்பிரமணியர் சன்னதி ஆகியவற்றில் மீள கட்டுதல் பணிகளும், உப சந்நிதிகளில் வர்ணம் பூசும் பணிகளும், மேற்கு வடக்கு கிழக்கு மதில் சுவர்கள் பழுது பார்த்து புதுப்பித்தல் பணியும் நடைபெற உள்ளது.

    இந்த பணிகள் அனைத்தும் 24 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.

    அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    2022-23-ம் நிதி ஆண்டில் 113 கோயில்கள் ரூ.154.90 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 நிதி ஆண்டில் 84 திருக்கோயில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்கு பின் திருப்பணி களுக்கு மானியமாக ரூ.200 கோடி தமிழக அரசு வழங்கி உள்ளது.

    இதுவரை ஆயிரம் ஆண்டுகள் பழமையான 12 கோயில்கள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 13 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. மேலும் வரலாற்றில் படித்த ராஜ ராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் கோவிலுக்கான திருப்பணிகள் நடைபெற்றது போல தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இவ்வாறு அவர் பெருமிதத்துடன் கூறினார்.

    • தண்ணீர் சூடான பிறகு மின்சார ஸ்விட்ச் ஆப் செய்தனர்.
    • சிறுமி சுபிக்‌ஷா வாட்டர் ஹீட்டரை கையில் எடுத்தார்.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவாயம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி பார்வதி. இவர்களது குழந்தைகள் தருண்(வயது 12 ), நித்திஷ்(8), சுபிக்ஷா(6). ரங்கசாமியும், பார்வதியும் கூலி வேலை செய்து குழந்தைகளை படிக்க வைத்து வாழ்ந்து வருகின்றனர்.

    சுபிக்ஷா 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை வீட்டில் உள்ள குளியலறையில் குளிப்பதற்காக வாட்டர்ஹூட்டரை பக்கெட்டில் வைத்து தண்ணீரை சுட வைத்துள்ளனர்.

    தண்ணீர் சூடான பிறகு மின்சார ஸ்விட்ச் ஆப் செய்தனர். இந்நிலையில் சிறுமி சுபிக்ஷா வாட்டர் ஹீட்டரை கையில் எடுத்தார். அப்போது வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கியது. இதில் சுபிக்ஷா குளியலறையிலேயே மயங்கி கிடந்தார்.

    இதனை பார்த்த பெற்றோர்கள் உடனடியாக குழந்தையை வெளியே எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்து வமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

    சோதனை செய்த மருத்துவர் சுபிக்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவலை குளித்தலை காவல் நிலையத்திற்கு தெரிவித்து குளித்தலை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். சிறுமி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அமைச்சரின் நண்பரான ராயனூர் சுப்பிரமணியத்தின் கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ்ஸில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டை அளவீடு செய்து மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர்.

    கரூர்:

    கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது சகோதரர் அசோக் குமார் வீடு, அலுவலகம் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள், வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அமைச்சரின் நண்பரான ராயனூர் சுப்பிரமணியத்தின் கரூர்-கோவை சாலையில் உள்ள கொங்கு மெஸ்ஸிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி, அந்த மெஸ்சுக்கு சீல் வைத்தனர்.

    பின்னர் சமீபத்தில் அதிகாரிகள் ஒப்பதலுடன் சீல் அகற்றப்பட்டு மெஸ் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் 7 வருமான வரித்துறை அதிகாரிகள் கொங்கு மெஸ் நிர்வாகத்தினர் பழைய மெஸ் கட்டிடம் அருகாமையில் புதிதாக புதிதாக கட்டி வரும் 4 மாடி கட்டிடத்தை பொறியாளர்களை வைத்து அளந்தனர். மேலும் கட்டிட மதிப்பீட்டை பொறியாளர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று (வியாழக்கிழமை) வருமான வரித்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டை அளவீடு செய்து மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். இதில் 2 கார்களில் வந்த 9 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வீட்டிலும் ஏற்கனவே வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பூட்டி சீல் வைத்தனர்.

    பின்னர் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அங்கு இல்லாததால் சம்பந்தப்பட்டவர் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீசும் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    செந்தில் பாலாஜியின் நண்பரின் ஓட்டல் கட்டிடத்தை தொடர்ந்து அவரது சகோதரர் கட்டும் புதிய வீட்டினை வருமானவரித்துறை அதிகாரிகள் அளவீடு செய்து மதிப்பீடு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விபத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே சேலம் பைபாஸ் சாலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சபரிமலைக்கு வந்து கொண்டிருந்த ஜீப் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முட்டை வாகனத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    விபத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
    • வசூலித்த பணத்துடன் மேலாளர் எந்த வழியில் வருவார்? என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தனர்.

    உத்தமபாளையம்:

    கரூர் மாவட்டம் ஆத்தூர் புதூரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிக்குளம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பரமசிவம் என்பவர் மேலாளராக உள்ளார்.

    சின்னமனூர் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட்டிக்கு பணம் கொடுத்து அதனை வசூல் செய்வதற்காக பல ஊழியர்களையும் கணேசன் நியமித்துள்ளார். கணேசன் 2 மாதத்துக்கு ஒரு முறை நிதி நிறுவனத்துக்கு வந்து வரவு செலவு கணக்குகளை பார்த்து பணத்தை பெற்றுச் செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று பைனான்ஸ் மேலாளர் பரமசிவம் மற்றும் ஊழியர் கண்ணன் ஆகியோர் வசூல் செய்த பணத்தை எடுத்துக் கொண்டு காமயகவுண்டன்பட்டியில் இருந்து நாராயணதேவன் பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    செல்லாயி அம்மன் கோவில் அருகே இவர்கள் நின்று கொண்டு இருந்த போது திடீரென வந்த ஒரு கும்பல் அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் பணம் மற்றும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றனர்.

    மிளகாய் பொடி தூவியதால் நிலை குலைந்து கீழே விழுந்த அவர்கள் அதன் பின்னர் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கண்ணன் தனது நண்பர்கள் 2 பேரை சேர்த்துக் கொண்டு வசூல் செய்த பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. வசூலித்த பணத்துடன் மேலாளர் எந்த வழியில் வருவார்? என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தனர். பணம் அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்த்த நிலையில் ரூ.2 லட்சமே கிடைத்ததால் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளான கரூரைச் சேர்ந்த அபிஷேக் (36), வேலூரைச் சேர்ந்த பாஸ்கரன் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ.2 லட்சம் மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. 

    • கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அரசு அரசமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டு அரசமைப்பு தினம் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகளூர் காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தில் அரசு அரசமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டின் இறையாண்மையையும், சமநல சமுதாயமும், சமயச் சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன வளாகத்தில் உள்ள கால அலுவலகம் அருகே உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் செயல் இயக்குநர் (இயக்கம்) சீனிவாசன், பொது மேலாளர் (பேப்பர் புரொடக்சன்) மகேஷ், துணைப் பொது மேலாளர் (சேப்டி மற்றும் செக்யூரிட்டி) ராதாகிருஷ்ணன், முதுநிலை மேலாளர்(மனித வளம்) சிவக்குமார், மேலாளர் (மனித வளம்) வெங்கடேசன், துணை மேலாளர் (பாதுகாப்பு) சங்கிலி ராஜன் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவன பணியாளர்கள் கலந்துகொண்டு அரசமைப்பு தினம் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

    • கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், நபார்டு வங்கி ,கரூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் திருச்சி ராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை யும் இணைந்து இக்கூட்டத்தை நடத்தின.
    • கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், நபார்டு வங்கி ,கரூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் திருச்சி ராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை யும் இணைந்து இக்கூட்டத்தை நடத்தின.

    கரூர்

    கரூர் மாவட்டத்தில் கரூர் வட்டாரத்தில் உள்ள ஆர்.1561 தாந்தோணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில், கோடங்கிபட்டியில் சங்க உறுப்பினர்களுக்கு உறுப்பினர் கல்வி திட்ட கூட்டமும், நிதி சார் மேலாண்மை மற்றும் விழிப்பு ணர்வு கூட்டமும் நடைபெற்றது. கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், நபார்டு வங்கி ,கரூர் மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் திருச்சி ராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை யும் இணைந்து இக்கூட்டத்தை நடத்தின.

    கரூர் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் வசந்தகுமார் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவதுf:-

    சங்க உறுப்பினர்கள் எத்தனை வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளோம் என்பது முக்கிய மில்லை. ஒரு வங்கி அல்லது ஒரு சங்கத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தாலும் போதுமானது. அந்த கணக்கை தொடர்ந்து பயன்படுத்தி வரவேண்டும். குடும்பத்தில் 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் யாராக இருந்தாலும் மேல்படிப்பு படிப்பதற்கு கல்வி கடன் பெற்று பயன் அடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    கரூர் மாவட்ட நபார்டு வங்கியின் கோட்ட மேலாளர்மோகன் கார்த்திக் பேசும்போது:-

    சங்கத்தில் உறுப்பினர்க ளுக்கு பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகிறது, ஒரு வங்கியிலோ அல்லது ஒரு சங்கத்திலோ கடன் பெற்ற பிறகு வேறு ஊரிலோ, பக்கத்தில் உள்ள வங்கியிலோ, முன்னர் பெற்ற கடனை கட்டி முடிக்காமல் புதிய கடன்கள் பெற முடியாது. பயிர்க்கடன்,சுய உதவிக்குழு கடன் எதுவானாலும் முழு வதும் திருப்பி செலுத்தி விட்டு புதிய கடன்கள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கரூர் வட்டார கள மேலாளர் கதிர்வேல் அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கரூர் சரக மேற்பார்வையாளர் ரமேஷ் கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து மகளிர் சுயஉதவி குழு ஆரம்பித்து சங்கத்தி ல் கடன்பெற்று தங்களுடைய வாழ்வாதா ரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    சங்க செயலாள வளர் மதி, கரூர் மாவட்ட கூட்டு றவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் திருப்பதி, சங்க பணியாளர் குணசேகரன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பி னர்களும் கலந்து கொண்டனர்.

    • கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
    • அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 31 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 13 கிலோ பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் வேலாயு தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 31 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 13 கிலோ பான் மசாலா, குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளர் ரமேஷ் கைது செய்யப்பட்டார்.

    அதேபோல் வேலாயு தம்பாளையம்-நொய்யல் செல்லும் சாலையில் உள்ள புங்கோடை பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டபோது, தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பாப்பன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி(வயது 57) என்பவர் கடைகளுக்கு சப்ளை செய்ய வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசார ணையில் பெங்களூருவில் இருந்து, வாங்கி வந்து கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவி த்தார். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 2022 -2023 நிதியாண்டு அம்ருத் -2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்காக 13 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமிபூஜை விழா நடைபெற்றது.
    • பூமி பூஜை விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் ரூபா முரளிராஜா தலைமை வைத்தார்.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் 2022 -2023 நிதியாண்டு அம்ருத் -2.0 திட்டத்தின் கீழ் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்காக 13 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூமிபூஜை விழா நடைபெற்றது.

    பூமி பூஜை விழாவிற்கு பேரூராட்சித் தலைவர் ரூபா முரளிராஜா தலைமை வைத்தார். துணைத் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ருக்மணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரவக்கு றிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு குடிநீர் திட்டபணிகளுக்கான பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

    பூமி பூஜை விழாவில் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் முரளிராஜா, வார்டு கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள், பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவி யர்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.
    • அதனைத் தொடர்ந்து புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

    வேலாயுதம்பாளையம்

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்டம் புகழூர் நகரக் தி.மு.க. சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது, புகழூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலை பள்ளிகள், நடு நாணப்பரப்பு நகராட்சி துவக்கப்பள்ளி, குறுக்குபாளையம் நகராட்சி துவக்கப்பள்ளி மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவி யர்களுக்கு பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு புகழூர் நகர கழக செயலாளரும், புகழூர் நகர்மன்ற தலைவருமான சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு பெட்டகங்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் பிரதாபன், நகர்மன்ற உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், செல்வகுமார், நந்தா, மாவட்ட தொழிற்சங்க தலைவர் அண்ணாவேலு, நகர் மன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, நகர, வார்டு தி.மு.க. நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. மூத்த முன்னோடிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து புன்னம் சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

    ×