search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • பணம் தராவிட்டால் சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார்.
    • மாணவியின் வீடியோ மட்டுமின்றி பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ஆரூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் அருண் பிரசாத் என்கிற சிட்டா (வயது 23). இவர் அதேபகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரிடம் பழகி உள்ளார். அப்போது அந்த மாணவிக்கு தெரியாமல் அவரை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அந்த மாணவியிடம் வீடியோவை காட்டி மிரட்டி அருண் பிரசாத் பணம் கேட்டுள்ளார். பணம் தராவிட்டால் சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிடுவேன் என்று மாணவியை மிரட்டியுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது வீட்டிற்கு செல்லாமல் பக்கத்து கிராமத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மாணவி சோகத்துடன் இருப்பதை பார்த்த உறவினர்கள் மாணவியிடம் விசாரித்துள்ளனர். பின்னர் மாணவி நடந்ததை தெரிவித்துள்ளார். மாணவியின் உறவினர்கள் ஆரூர் கிராமத்தில் உள்ள அருண் பிரசாத்தின் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்துள்ளனர்.

    அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மாணவியன் உறவினர்கள் வாலிபரை தாக்கி அவரிடம் இருந்து செல்போனை பிடுங்கிப் பார்த்துள்ளனர். அதில் மாணவியின் வீடியோ மட்டுமின்றி பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மாணவியின் உறவினர்கள் அந்த செல்போனை சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் தெரிவித்தனர். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தகவல் அறிந்த அருண் பிரசாத் தப்பிவிட்டார். சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அருண் பிரசாத்தை அவரது தொலைபேசி எண்ணின் மூலம் தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்நிலையில் குளத்தூர் 4 முனை சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பஸ்சில் அருண் பிரசாத் வந்திறங்கினார். உடனே அருண் பிரசாத்தை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஒரிரு தினங்களில் போலீஸ் காவலில் எடுத்து அருண் பிரசாத்திடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    • அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்னை- திருச்சி 4 வழிச்சாலையில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் ஓட்டுநர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதிக்கப்பட்ட 22 மாணவர்களையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது.
    • கிளினர் ராஜவேல் மீது வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ், விஜயபுரத்தில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை புறப்பட்டது. பஸ்சினை ஈரியூரை சேர்ந்த கோவிந்தன் (வயது 47) ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் பள்ளியின் பாத்ரூமை கழுவ 2 லிட்டர் ஆசிட் வாங்கி வைக்கப்பட்டிருந்தது.

    பஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஆசிட் பாட்டில் சாய்ந்து விழுந்து, ஆசிட் கொட்டியது. இதனால் பஸ் முழுவதும் கடும் நெடியுடன் துர்நாற்றம் வீசியது. இதில் மாணவர்களுக்கு மூச்சுதிணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பஸ்சினை நிறுத்திய டிரைவர், மாணவர்களை பஸ்சிலிருந்து கீழே இறக்கினார். தொடர்ந்து கிளினர் அம்ம களத்தூர் ராஜவேல் (36) உதவியுடன் ஆசிட் மீது நீரை ஊற்றி சுத்தம் செய்தார்.

    தொடர்ந்து பஸ்சினை இயக்கிய டிரைவர், மாணவர்களை பள்ளியில் இறக்கிவிட்டார். வகுப்பறைக்கு சென்ற ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர். சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட 22 மாணவர்களையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து நேற்று மாலை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பள்ளி பஸ்சின் டிரைவர் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் கிளினர் ராஜவேல் மீது வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சின்னசேலத்தில் உள்ள மற்றொரு தனியார் பள்ளி பஸ் கவிழந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கதாகும்.

    • 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
    • விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே தனியார் ப ள்ளி பேருந்தில் எடுத்து சென்ற ஆசிட் பாட்டில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

    இதில், 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கழிப்பறை சுத்தம் செய்வதற்காக ஆசிட் எடுத்து சென்றபோது வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றவர்களை பல்வேறு நிறுவனங்களில் இருந்து வந்தவர்கள் நேர்காணல் நடத்தி தேர்வு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. மணிக்கண்ணன் விழாவிற்கான ஏற்பாடு செய்து வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளரும், நகர மன்ற தலைவருமான வைத்தியநாதன், ஒன்றிய கழக மேற்கு செயலாளரும், உளுந்தூர்பேட்டை யூனியன் சேர்மன் ராஜவேல், முன்னாள் எம்.எல்.ஏ.வும், நகர மன்ற தலைவருமான திருநாவுக்கரசு, திருநாவலூர் யூனியன் சேர்மன் சாந்தி இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பங்கேற்றவர்களை பல்வேறு நிறுவனங்களில் இருந்து வந்தவர்கள் நேர்காணல் நடத்தி தேர்வு செய்தனர். இதில் 5716 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 1143 பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். இவர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் ஷ்ர்வன்குமார், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், மணிகண்ணன் ஆகியோர் சேர்ந்து வழங்கி பேசினார்கள்.

    இதில் வேலை வாய்ப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் லதா, கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரி முரளிதரன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல் ராஜ், பள்ளி பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் சிவராஜ், துணைத்தலைவர் அம்பிகாபதி, அறங்காவலர் குழு தலைவர் செல்லையா, நகர மன்ற முன்னாள் ஒன்றிய செயலாளர் தொல்காப்பியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிவக்குமார், உறுப்பினர்கள் கலா, மதியழகன், குமரவேல், செல்வகுமார், ரமேஷ்பாபு, சந்திரகுமாரி, நிர்வாகிகள் ஐஸ்வர்யா, பாலாஜி, மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்நிலையில் சம்பவத்தன்று மாணவியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டனர்.
    • இதுகுறித்து மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி தியாகதுருகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாணவியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டனர். இதனை அறிந்து கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல் மகன் ஆனந்தபாபு (29) மாணவியின் வீட்டிற்குள் சென்று மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி ஆனந்தபாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • 3 பேர்களுக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • லோகநாதன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பீளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராயர் (வயது 80) இவர் தனது மகன்களான ராமமூர்த்தி, லோகநாதன், அன்பழகன் ஆகிய 3 பேர்களுக்கும் சொத்துக்களை பிரித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் அன்பழகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். இந்நிலையில் மற்ற 2 மகன்களும் தன்னை பராமரிக்கவில்லை என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதன்படி தியாகதுருகம் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். சம்பவத்தன்று ராயர் தியாகதுருகம் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தபோது அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் வீட்டில் இருந்த பாத்திரங்களை அவரது மகன் லோகநாதன் திருடி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ராயர் கொடுத்த புகாரின் தந்தையை முறையாக பராமரிக்காத ராமமூர்த்தி மற்றும் லோகநாதன் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தந்தை வீட்டில் இருந்து பணம் மற்றும் பாத்திரங்களை திருடிய லோகநாதனை கைது செய்தனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தனது பணிகாலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மாதங்கள் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மோகன்ராஜ் கடந்த3.1.2023-ந் தேதி பொறுப்பேற்றார். இவர் ஓய்வு பெற கூடிய காலம் 31.5.2024-ந் தேதி ஆகும்.

    ஆனால் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு விருப்ப ஓய்வு பெற முடிவு செய்தார். அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பு விருப்ப ஓய்வு பெறுவதற்கான மனுவை தமிழக டி.ஜி.பி. சங்கர்ஜிவாலுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு விருப்ப ஓய்வு பெற அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு நேற்று மாலை 7 மணி அளவில் விருப்ப ஓய்வு பெறுவதற்கான கடிதம் டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் மைக் மூலமாக தொடர்பு கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    மேலும் தன்னுடன் சிறப்பான முறையில்பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தனது பணிகாலம் முடிவதற்கு 6 மாதத்திற்கு முன்பே விருப்ப ஓய்வு பெற் றுள்ளார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 மாதங்கள் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷசாங் சாய்க்கு கூடுதலாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே இந்திலி மேற்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் செயல்பட்டு வருவதாக சென்னை பாலின தேவை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி பாலின தேவை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழு துணை சூப்பிரண்டு சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் இந்திலி பகுதியில் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் முருகேசன் (வயது 43) பி.பார்ம் படித்துவிட்டு சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தி வந்தது தெரிய வந்தது. அதிகாரிகள் சோதனை செய்த போது கர்ப்பிணிப் பெண்களுக்கு வயிற்றில் இருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என ஸ்கேன் கருவி மூலம் பரிசோதனை செய்ததும், பெண் சிசுவாக இருந்தால் கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது.இதனையடுத்து அவருடைய வீட்டில் இருந்த 2 சொகுசு கார்கள், மோட்டார் சைக்கிள், ஸ்கேன் கருவி, கருக்கலைப்பு மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கருக்கலைப்பு மையத்தை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து சின்னசேலம் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் குறளியன் கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், முருகேசனுக்கு உதவியாளராக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சின்னராஜ் (28) என்பவரையும் கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா கூறுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண் குழந்தைகள் வேண்டாம் என்று நினைக்கும் பெற்றோர்கள் கருவிலிருக்கும் சிசு ஆணா? பெண்ணா? என கண்டறிந்து சட்டவிரோதமாக செயல்படும் மையங்களில் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர்.

    கருக்கலைப்பு செய்வதால் பாலின விகிதம் குறையும் நிலை உள்ளது. எனவே பாலின சமத்துவத்தை உணர்ந்து ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளும் சாதிக்கலாம் என்பதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. இவ்வாறு அவர் கூறினார்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக நல மருத்துவத்துறை தலைவர் (பொறுப்பு) பொன்னரசு கூறுகையில்,இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்து வருகின்றனர். சட்ட விரோதமாக நடைபெறும் கருக்கலைப்பு மையங்களில் 90 சதவீதம் பேர் பெண் சிசுக்கலையும், சுமார் 10 சதவீதம் முறையற்ற உடல் உறவினால் உருவாகும் கருவினையும் கருக்கலைப்பு செய்கின்றனர். கருவில் வளரும் சிசுவிற்கு மருத்துவ ரீதியாக குறைபாடுகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளிலேயே கருக்கலைப்பு செய்யப்படும்.இவ்வாறு கருக்கலைப்பு செய்யப்படும் பெண்களுக்கு மனநல மருத்துவரால் மன ஆற்றுதல் சிகிச்சையும் வழங்கப்படும். இதனால் அவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் இது போன்று சட்டவிரோத கருக்கலைப்பு செய்வதன் மூலமாக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மருத்துவம் கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்றார்.

    கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மூத்த வக்கீல் செல்வநாயகம் கூறுகையில்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டு காலங்களில் அதிக அளவில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த குற்றத்தில் கைது செய்யப்படும் நபர்கள் 10 தினங்களில் ஜாமீன் பெற்று வெளியே வந்து விடுகின்றனர். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்.தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே பெண் பிள்ளைகளின் பிறப்பு சதவீதத்தை அதிகப்படுத்த முடியும் என்றும் இல்லையென்றால் அது சமூகத்தின் பெரிய சீர்கேட்டை ஏற்படுத்தும் என கூறினார்.சட்ட விரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்திய முருகேசன் மகள் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார் என்பதும், முருகேசன் இது போன்ற வழக்கில் 4-வது முறையாக கைது செய்யப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    2 கடைக்கு சீல், 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகே போலீசார் அதிரடி சோதனை செய்தனர். இதில் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (வயது32), அண்ணா நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் (62), பகண்டை கூட்டு சாலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட லாலாபேட்டை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (30), சங்கரபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வடசிறுள்ளூர் கிராமத்தை சேர்ந்த அறிவழகன் (28), சங்கராபுரத்தை சேர்ந்த ஹரிஷ் (19), திருநாவலூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மடப்பட்டு கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (27), கெடிலம் கிராமத்தை சேர்ந்த ராமன் (62), திருநாவலூர் பகுதியை சேர்ந்த சுகுமார் (44), தியாகதுருகம் பகுதியை சேர்ந்த விக்ரம் (37), திருநாவலூரை சேர்ந்த வெங்கடேசன் (45), மணலூர்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அத்தியந்தல் கிராமத்தை சேர்ந்த நதியா (36), சின்னசேலம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (70), கதிரவணன் (60) ஆகியோர் அவர்களது கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இவர்களிடமிருந்து சுமார் 15 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த 13 நபர்கள் மீதும் அந்தந்த பகுதியைச் சேர்ந்த போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 9 கைது செய்யப்பட்டனர். 2 கடைகளுக்கு வருவாய் துறையினரால் மூலம் சீல் வைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மொபைல் கடை வெளியே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று வெளியே வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார் சைக்கிள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் உள்ள சி.சி.டி.வி காட்சியை ஆய்வு செய்து பார்த்தபோது பட்டப்பகலில் மோட்டர் சைக்கிளை கள்ளச்சாவி போட்டு அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே வீ.பா ளை யம் கிரா மத்தைச் சேர்ந்த வர் சுரேஷ் (வயது 46) விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடூர் கிராமத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் மற்றும் வீ.பாளையம் கிராமத்தை சேர்ந்த மாயவேல் மகன் தமிழரசன் (20) ஆகியோர் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த சுரேஷ் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் குடிபோதையில் சுரேஷ் வீட்டிற்கு சென்று நீ மாடூர் காரனுக்குத்தான் ஆதரவாக பேசினாய் எனக்கூறி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து தன் கையில் வைத்திருந்த கத்தியால் தனது கையை கிழித்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். மேலும் இவர் மீது கேரள மாநிலத்தில் அடிதடி சம்பந்தமாக வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    ×