என் மலர்
கர்நாடகா
- மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு ரேபிஸ் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
- கடந்த 4 மாதமாக குழந்தைக்கு பல்வேறு கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டம் சாஸ்திரி பரங்கேயை சேர்ந்த 4 வயது சிறுமி கதிராபானு. சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு தெருநாய் திடீரென ஆவேசம் அடைந்து சிறுமி கதிராபானுவை கடித்து குதறியது. இதில் சிறுமியின் முகம் மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் தெருநாயிடம் இருந்து சிறுமியை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சிறுமியை பெங்களூருவில் உள்ள இந்திராகாந்தி குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது மருத்துவ பரிசோதனையில் குழந்தைக்கு ரேபிஸ் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் அதற்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கடந்த 4 மாதமாக குழந்தைக்கு பல்வேறு கட்ட சிகிச்சைகள் அளித்தும் குழந்தை கதிராபானு இறந்து விட்டது.
கர்நாடகாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை 2.8 லட்சம் பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதில் 26 பேர் இறந்து இருப்பதாகவும் மாநில கண்காணிப்பு பிரிவின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
- தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு கேலிக்கூத்தாக இருந்தது.
- தேர்தல் ஆணையம் உண்மையான பிரச்சினையைப் பற்றி கூட பேசவில்லை.
குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. கர்நாடகாவை சேர்ந்த ரம்யா முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரம்யா, "ராகுல் காந்தி சொல்வது சரியானது. தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு கேலிக்கூத்தாக இருந்தது. அவர்கள் உண்மையான பிரச்சினையைப் பற்றி கூட பேசவில்லை. வாக்காளர் பட்டியலில் ஏன் போலி வாக்காளர்கள் உள்ளனர், அவர்களை நீக்க அவர்கள் என்ன செய்வார்கள் என்பதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பீகார் SIR சர்ச்சை தொடர்பாக ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடினார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்ததுகுறிப்பிடத்தக்கது.
- 43 சமூக வலைதள கணக்குகள் மீது ரம்யா புகார் அளித்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் திரைப்படத்துறை அமைப்புகளும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. கர்நாடகாவை சேர்ந்த ரம்யா முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஆவார்.
இந்நிலையில் ரசிகரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் தகாத முறையில் பேசுவதாகவும், பாலியல் ரீதியாகவும் அச்சுறுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் கொலை வழக்கில் தர்ஷன் சம்பந்தப்பட்டிருப்பதை விமர்சித்து, கொலை செய்யப்பட்ட ரேணுகாமசாமி குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என ரம்யா கருத்து தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக, தர்ஷன் ரசிகர்கள் ரம்யாவை சமூக வலைதளங்களில் ஆபாசமான கருத்துக்களையும், கொலை மிரட்டல்களையும் பதிவிட்டு தொல்லை கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, 43 சமூக வலைதள கணக்குகள் மீது ரம்யா புகார் அளித்தார். இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தனக்கே இத்தகைய அச்சுறுத்தல் ஏற்பட்டால், மற்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என கேள்வி எழுப்பிய ரம்யா, தான் புகார் அளித்த பிறகு இது போன்ற மிரட்டல்கள் குறைந்திருப்பதாகவும், பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிராக தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டுமென கோரி, கர்நாடக மாநில மகளிர் ஆணையம் மற்றும் திரைப்படத்துறை அமைப்புகளும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளன.
- பெங்களூருவில் பன்னேர்கட்டா தேசிய பூங்கா அமைந்துள்ளது.
- ஜீப்பின் கதவு வழியாக உள்ளே ஏற முயன்றது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பன்னேர்கட்டா தேசிய பூங்கா அமைந்துள்ளது.
இங்கு சஃபாரி பயணம் சென்றிருந்தபோது, சிறுத்தை தாக்கியதில் 13 வயது சிறுவன் காயமடைந்தான்.
நேற்று மதியம் காட்டு வழியாக ஜீப் சஃபாரி சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றிருந்த ஒரு சிறுத்தை திடீரென சஃபாரி ஜீப்பை நோக்கி ஓடியது.
பின்னர் அது ஜீப்பின் கதவு வழியாக உள்ளே ஏற முயன்று, அப்போது கதவருகே அமர்ந்திருந்த 13 வயது சிறுவன் கையில் சிறுத்தையின் நகங்கள் பட்டு காயம் ஏற்பட்டது.
இதன்பின் அந்த ஜீப் ஓட்டுநர் வாகனத்தை விரைவாக செலுத்தி அங்கிருந்து பயணிகளை பத்திரமாக அழைத்துச் சென்றார். இதன்பின் சிறுவனுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து, ஜன்னல்களில் வலைகளை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்நாடக வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஈஸ்வர காண்ட்ரே தெரிவித்தார்.

- ரோபோவுக்கு திண்டி என பெயர் வைத்துள்ளேன்.
- இது வணிக பதிவு அல்ல, இது எனது புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு:
உலக அளவில் பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனங்களின் புகலிடமாக உள்ளது. இதனால் தொழில்நுட்ப பூங்கா என்று அழைக்கப்படும் பெங்களூருவில் ரோபோ பயன்பாடும் அதிகரித்து வருகிறது. ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இல்லத்தரசிகள் வீடுகளை கூட்டி பெருக்கவும், தண்ணீர் வைத்து கழுவி எடுக்கவும் ரோபோக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
நிலைமை இப்படி இருக்க இல்லத்தரசிகளின் சமையல் வேலையை எளிதாக்க இப்போது ரோபோ வந்துள்ளது. அதாவது தோசை சுடும் ரோபோவை பெங்களூருவை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.
இதுபற்றி அந்த என்ஜினீயர் ரெடிட் என்ற இணையதள பக்கத்தில் தோசை சுடும் ரோபோவை பகிர்ந்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-
நான் கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் தனிப்பட்ட முறையில் ஒரு ரோபோவை வடிவமைத்துள்ளேன். இந்த ரோபோ தானாகவே அடுப்பில் தோசை கல் வைத்தால் போதும் தானாகவே மாவை ஊற்றி தோசையை சுட்டெடுக்கும். எனது குடும்ப உறுப்பினர்கள் தோசை சுட சிரமப்படுவதை பார்த்து நான் இந்த தோசை சுடும் ரோபோவை வடிவமைத்தேன்.
இந்த ரோபோவுக்கு திண்டி என பெயர் வைத்துள்ளேன். (திண்டி என்றால் தமிழில் சிற்றுண்டி என்று பொருள்). இதுதொடர்பாக உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். இது வணிக பதிவு அல்ல, இது எனது புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதன் விலை பற்றி அவர் எதுவும் அறிவிக்கவில்லை.
இந்த பதிவை பார்த்த பல இணையதள வாசிகள் அந்த என்ஜினீயரின் கண்டுபிடிப்புக்காக அவரை பாராட்டி வருகிறார்கள். ஒருவர், இந்த தோசை ஒரு இங்கிலாந்து கிரிக்கெட் ஸ்டேடியம் போல் தெரிகிறது என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர், இந்த ரோபோவை உருவாக்க நீங்கள் நிறைய கடினமாக உழைத்திருக்க வேண்டும் என எனக்கு தெரிகிறது. இதைவிட இன்னும் சிறப்பான ரோபோவை உருவாக்க வேண்டும். அதற்கு எனது வாழ்த்துகள் என கூறியுள்ளார். இன்னொருவரின் பதிவில், இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த திட்டத்தில் நீங்கள் எடுத்த முயற்சியை நான் புரிந்துக்கொள்கிறேன் என்று கருத்து கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கு தாய்மார்கள் தோசை சுட்டு ஊட்டும்போது இது அம்மா சுட்ட தோசை... இது அப்பா சுட்ட தோசை என கூறி தோசை ஊட்டுவது வழக்கம். இனிமேல் இது அம்மா... அப்பா... சுட்ட தோசை என கூற முடியாது. இது ரோபோ சுட்ட தோசை என கூறும் நிலை வந்துவிட்டது என்றால் மிகையல்ல.
- சிக்கமகளூரு மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- இதற்கு தகுந்த தீர்வு எடுக்க வேண்டும் என்றார் போஜே கவுடா.
பெங்களூரு:
கர்நாடக மேல்சபையில் நேற்று சிக்மகளூரு மாவட்டத்தில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் போஜே கவுடா பேசியதாவது:
சிக்மகளூரு மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு தகுந்த தீர்வு எடுக்க வேண்டும்.
தடுப்பூசியால் ரேபிஸ் மட்டுமே தடுக்க முடியும். கடிப்பதை தடுக்க முடியாது. நான் கடிக்கும் நாய்கள் பற்றி பேசுகிறேன்.
நாய்களின் நிலை இப்போது முற்றிலும் மாறிவிட்டது. முந்தைய உத்தரவை மாற்ற உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யுங்கள்.
பள்ளிக் குழந்தைகள், சாதாரண மக்களை நாய்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
நான் நகராட்சி தலைவராக இருந்தபோது, 2,800 நாய்களுக்கு, இறைச்சியில் மருந்து தெளித்து கொன்றோம். பின், அவை ஒரு தென்னை மரத்தின் கீழ் புதைக்கப்பட்டன.
விலங்குகள் மீது நமக்கும் அக்கறை உண்டு, ஆனால் விலங்கு பிரியர்கள் மற்றொரு அச்சுறுத்தல்.
நீங்கள் சிறு குழந்தைகளின் துன்பங்களைப் பார்க்கிறீர்கள். இதைப் பற்றி நீங்கள் தினமும் செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் படிக்கிறீர்கள். இது ஒவ்வொரு நாளும் நடக்கிறது. நம் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தேவைப்பட்டால் சிறைக்கும் செல்வோம் என தெரிவித்தார்.
- 2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி கர்ப்பம் தரித்தார்
- முதலில் என் அமணிவியிடம் வேலையை விடுமாறு கூறினேன்.
கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ரூ.1.2 கோடி (வருடத்திற்கு) ஊதிய வேலையை ராஜினாமா செய்துள்ள சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இளைஞர் ஒருவர் Reddit இல் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், "நான் WHF (WORK FROM HOME) முறையில் ஆண்டுக்கு ரூ.1.2 கோடி ஊதியம் பெற்று வருகிறேன். 2 மாதங்களுக்கு முன்பு என் மனைவி கர்ப்பம் தரித்தார். இதையடுத்து முதலில் அவளை வேலையை விட சொன்னேன். ஆனால் மனைவி தொடர்ந்து வேலை செய்ய விரும்பியதால் மனைவியை கவனித்துக்கொள்ள நான் வேலையை விட்டுவிட்டேன். வீட்டிலிருந்து மனைவியை கவனித்துக்கொள்ள போகிறேன். உங்கள் குடும்பத்தினருக்கு தேவைப்படும் போது நீங்கள் அவர்களுடன் இருப்பதை தவிர வேறு எதுவும் முக்கியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக அந்த இளைஞரை பாராட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
- துண்டிக்கப்பட்ட கை இருந்த சுற்றுவட்டார பகுதியில் சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர்.
- சொகுசு கார் செல்லும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 7-ந் தேதி காலையில் பிளாஸ்டிக் கவரில் துண்டிக்கப்பட்ட ஒரு கையுடன் தெருநாய் ஒன்று சுற்றிக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த கையை மீட்டு விசாரணை நடத்தினர். ரத்தம் வடிந்த நிலையில் கை இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. யாரையோ கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசி இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணையை தொடங்கினர்.
இதையடுத்து துண்டிக்கப்பட்ட கை இருந்த சுற்றுவட்டார பகுதியில் சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது 19 இடங்களில் துண்டிக்கப்பட்ட உடலின் பல்வேறு பாகங்கள் மீட்கப்பட்டது. ஆனாலும் தலையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசார் மீட்கப்பட்ட உடல் உறுப்புகளை மீட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அது பெண்ணின் உடல் பாகங்கள் என்று தெரியவந்தது.
இதைதொடர்ந்து போலீசார் துமகூரு மாவட்டத்தில் மாயமான பெண்கள் குறித்த பட்டியலை தயாரித்தனர். அப்போது கடந்த 3-ந்தேதி துமகூரு புறநகர் பெல்லாவியை சேர்ந்த லட்சுமி தேவி (42) என்ற பெண் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் அவரது கணவர் பசவராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த 3-ந் தேதி தனது மனைவி ஹனுமந்தபுராவில் உள்ள தனது மகள் தேஜஸ்வியின் வீட்டிற்கு சென்றபோது மாயமானதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையை தேடினர். அப்போது கொரட்டகெரேவில் பெண்ணின் தலையை மீட்டனர். பின்னர் மாயமான லட்சுமி தேவியின் கணவர் பசவராஜை அழைத்து வந்து காட்டிய போது அது தனது மனைவியின் தலை என்று அடையாளம் காட்டினார். இதையடுத்து போலீசார் மாயமான லட்சுமி தேவி கொலை செய்யப்பட்டு உடல் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர்.
பின்னர் இந்த கொலை குறித்து துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது கடந்த 3-ந்தேதி மாலை துமகூரு அனுமந்தபுராவில் இருந்து ஒரு வெள்ளை நிற சொகுசு கார் செல்லும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த காரின் முன்பக்கத்தில் ஒரு பதிவு எண்ணும், பின் பக்கத்தில் ஒரு பதிவு எண்ணும் இருப்பதை கண்டு பிடித்தனர். இதையடுத்து அந்த காரின் உண்மையான எண்ணை கண்டுபிடித்தனர். அப்போது அது கொரட்டகெரே அருக உள்ள உர்டிகெரே கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. மேலும் போலீசார் அவரது செல்போன் எண்ணை கைப்பற்றி அழைப்புகளை கண்காணித்தனர். அப்போது லட்சுமிதேவி காணாமல் போன அன்று மதியம் முதல் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் கேட்ட போது கடந்த 3, 4-ந் தேதிகளில் சதீஷ் தோட்டத்தில் வெள்ளை நிற சொகுசு கார் நின்றதாக தெரிவித்தனர்.
எனவே போலீசார் சதீஷ் மற்றும் அவரது கூட்டாளி கிரண் ஆகியோரை பிடித்து விசாரணைக்காக துமகூருக்கு அழைத்து சென்றனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.
கொலை செய்யப்பட்ட லட்சுமி தேவியின் மருமகன் ராமசந்திரய்யா. பல் டாக்டரான இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு சொகுசு காரை வாங்கி அதை சதீஷின் பெயரில் பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பல் டாக்டர் ராமசந்திரய்யாவை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த சதீஷ், கிரண் ஆகியோரை பார்த்ததும் ராமசந்திரய்யா அதிர்ச்சி அடைந்தார். அப்போது கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் லட்சுமி தேவியை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி 19 இடங்களில் வீசியதை ஒப்புக்கொண்டனர்.
பின்னர் பல் டாக்டர் ராமச்சந்திய்யாவிடம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
எனக்கு 40 வயது ஆகிறது. எனக்கு ஏற்கனவே முதல் திருமணம் நடந்த நிலையில் 2-வதாக லட்சுமி தேவியின் 20 வயதான மகள் தேஜஸ்வியை திருமணம் செய்து கொண்டேன். அவருக்கும் எனக்கும் 20 வயது வித்தியாசம். இதை அடிக்கடி கூறி எனது மாமியார் லட்சுமி தேவி குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி வந்தார். எனவே அவரை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நான் ஒரு காரை வாங்கி அதை சதீஷ் பெயரில் பதிவு செய்தேன். சம்பவத்தன்று எனது வீட்டிற்கு வந்த மாமியார் லட்சுமி தேவியை கொலை செய்ய திட்டமிட்டோம். அதன்படி சதீஷ், கிரண் ஆகியோருக்கு ரூ.4 லட்சம் பணம் தருவதாக தெரிவித்தேன். முன்பணமாக ரூ.50 ஆயிரத்தை கொடுத்தேன்.
அதன்படி எனது மாமியார் வீட்டிற்கு வரும் தகவல் தெரிந்து அவரை வழிமறித்து காரில் ஏற்றி அழைத்து சென்றோம். காரில் செல்லும்போதே அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தோம். பின்னர் சதீசின் விவசாய தோட்டத்திற்கு கொண்டு சென்று கூர்மையான கருவிகளை பயன்படுத்தி அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி 19 இடங்களில் வீசினோம் என்று தெரியவித்தார். இதையடுத்து போலீசார் பல் டாக்டர் ராமசந்திரய்யா உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
- அப்போது கட்சித் தலைவர்கள் ஏன் அமைதியாக இருந்தனர் என்றும் கேள்வி எழுப்பினார்.
- முதல்வர் சித்தராமையாவுடன் நெருக்கமாக இருந்தபோதிலும், கட்சி அழுத்தத்தின் கீழ் ராஜண்ணா ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ராகுல் காந்தியின் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகளை கர்நாடக கூட்டுறவு அமைச்சர் கே.என். ராஜண்ணா பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று திடீரென தனது பதவியை ராஜூனாமா செய்வதாக அறிவித்தார்.
2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இருப்பினும், இந்த முறைகேடுகள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறிய ராஜண்ணா, அப்போது கட்சித் தலைவர்கள் ஏன் அமைதியாக இருந்தனர் என்றும் கேள்வி எழுப்பினார்.
கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிற்கு எதிராக ராஜண்ணாவின் பேச்சு, கட்சி உயர்மட்டத்தையும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களையும் கோபப்படுத்தியது. கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் ராஜண்ணாவின் கருத்துக்களை விமர்சித்தனர்.
முதல்வர் சித்தராமையாவுடன் நெருக்கமாக இருந்தபோதிலும், கட்சி அழுத்தத்தின் கீழ் ராஜண்ணா ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதல்வர் சித்தராமையாவுடன் கலந்துரையாடிய பிறகு ராஜண்ணா தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.
இதை பாஜக தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகிறது.
- பிரதமர் மோடியால் இந்த நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.
- இந்தியாவுக்கு அமெரிக்கா வரி விதிப்பதாக மிரட்டினாலும், பிரதமர் மோடி பயப்படவில்லை.
பெங்களூரு:
பெங்களூருவில் 3 ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். இந்த நிலையில் அவரை வழிநெடுகிலும் நின்று ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்ததுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை பார்க்க சாளுக்கியா சர்க்கிளில் சிவாஜிநகரை சேர்ந்த முதியவரான முகமது கவுஸ், பிரதமர் மோடியின் புகைப்படத்தை கையில் பிடித்தபடி காத்து நின்றார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடியை பார்க்க வந்துள்ளேன். இதற்கு முன்பு 3 முறை அவரை பார்த்துள்ளேன். ஒருமுறை விதானசவுதா முன்பாக கை கொடுக்கும் தூரத்தில் பிரதமர் மோடியை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அதனை மறக்கவே முடியாது. நான் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டன். நான் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர்.
பிரதமர் மோடியால் இந்த நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நாட்டுக்காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார். இந்தியாவுக்கு அமெரிக்கா வரி விதிப்பதாக மிரட்டினாலும், பிரதமர் மோடி பயப்படவில்லை. அவா் சக்தி மான் போன்றவர். அல்லா கொடுத்த பரிசு பிரதமர் மோடி ஆவார். இதனை தைரியமாக சொல்வேன். பிரதமர் மோடியை பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தில் இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை என்றார்.
- பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என்றார்.
- இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
பெங்களூரு:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற முறைகேடுகளை வெளியிட்டு, அதற்கான ஆதாரங்களையும் குறிப்பிட்டார்.
பா.ஜ.க.வும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து இதுபோன்ற பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் 2 முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுதொடர்பாக, கர்நாடக மாநில தேர்தல் ஆணையர் கூறியதாவது:
வாக்குச்சாவடி அதிகாரி வெளியிட்ட தரவுகளின்படி, ஒரு குறிப்பிட்ட பெண் வாக்காளர் இருமுறை தேர்தலில் வாக்குப்பதிவு செய்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். ஆனால் விசாரணையில், அந்த வாக்காளர் தான் ஒரேயொரு முறையே வாக்குப் பதிவு செய்ததாக கூறியுள்ளார்.
ராகுல் காந்தி காட்டிய ஆவணங்கள் மேற்கண்ட தேர்தல் அதிகாரியால் வெளியிடப்பட்டதல்ல என்பது தேர்தல் ஆணைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆகவே, மேற்கண்ட ஆவணங்கள் எங்களுக்கு கிடைத்தால் இவ்விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
- மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் ஐந்து வெவ்வேறு முறைகள் மூலம் திருடப்பட்டதாக அவர் கூறினார்.
- ராகுல் காந்தி பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
நடந்து முடிந்த கர்நாடகா, மாகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பஜகவுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது, "கர்நாடகாவில் 16 இடங்கள் கிடைக்கும் என்று எங்கள் உள் கணக்கெடுப்பு கணித்திருந்தது. ஆனால் எங்களுக்கு ஒன்பது இடங்கள் மட்டுமே கிடைத்தன. நாங்கள் 7 இடங்களில் ஏன் தோற்றோம் என்பதை ஆராய்ந்தோம்.
குறிப்பாக மகாதேவபுரா தொகுதியில் 1,00,250 வாக்குகள் ஐந்து வெவ்வேறு முறைகள் மூலம் திருடப்பட்டதாக அவர் கூறினார். இதில் போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் மற்றும் ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், புகைப்படம் இல்லாத வாக்காளர்கள், படிவம் 6 முறைகேடு செய்தல் ஆகியவை அடங்கும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, "மக்களவை தேர்தலில் வாக்கு திருட்டு தொடர்பான புகார்களை சட்டத்துறை விசாரிக்கும்.
அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணையை முடித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிடப்படும்" என்று கூறினார்.
இதற்கிடையே "ராகுல் காந்தி ஆதாரம் காட்ட வேண்டும் அல்லது தனது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.






