என் மலர்
சத்தீஸ்கர்
- சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க. துணைத்தலைவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
- பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பா.ஜ.க. துணை தலைவராக பதவி வகித்தவர் சாகர் சாஹு.
இவர் நேற்று இரவு இவரது வீட்டில் மர்ம நபர்கள் சிலர் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த சாகர் சாஹுவை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்..இந்தத் தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஒரு குழந்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.
- விபத்து பற்றி கேள்விப்பட்டதும் முதல்வர் பூபேஷ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் மாவட்டத்தில் இன்று பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது லாரி மோதியது. கோரர் சில்காத்தி சவுக் என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில், ஆட்டோ தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது. ஆட்டோவில் பயணித்த குழந்தைகளில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு குழந்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து பற்றி கேள்விப்பட்டதும் முதல்வர் பூபேஷ் பாகல் தனது இரங்கலையும் வேதனையையும் தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறை மூலம் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.
- சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரி பூபேஸ் பாகல், தனது காருக்கு 23 என்ற எண்ணை பயன்படுத்தி வருகிறார்.
- 2018-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அவர் முதல்-மந்திரி பொறுப்புக்கு வந்த பின்பும் அவரது அலுவலக காரின் எண் 23 ஆகவே இருந்தது.
ராய்ப்பூர்:
சொந்தமாக கார் வைத்திருப்பர்கள், காருக்கான பதிவு எண், தங்களின் அதிர்ஷ்ட எண்ணாக அமைய வேண்டும் என்று விரும்புவார்கள்.
குறிப்பாக நியுமராலஜி படியும், அதிர்ஷ்டத்தை கொடுக்கும் எண்களை தங்கள் வாகனங்களின் பதிவு எண்ணாக வைக்கவும் பல லட்சம் பணத்தை கொடுக்க தயாராக இருப்பார்கள்.
இதனை சிலர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டாலும், அரசியல்வாதிகள் இதனை பொதுவெளியில் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் அவர்களில் பலரும் தங்கள் வாகனத்திற்கு பேன்சி எண்களை வைத்திருப்பார்கள்.
அந்த வகையில் சத்தீஸ்கர் மாநில முதல்-மந்திரி பூபேஸ் பாகல், தனது காருக்கு 23 என்ற எண்ணை பயன்படுத்தி வருகிறார். இவர் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த போதும் அவரது காரின் எண் 23 என்றே இருந்தது. 2018-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு அவர் முதல்-மந்திரி பொறுப்புக்கு வந்த பின்பும் அவரது அலுவலக காரின் எண் 23 ஆகவே இருந்தது.
இதற்கு காரணம் அவரது அதிர்ஷ்ட எண் 23 என்று கூறப்படுகிறது. இப்போது முதல்-மந்திரி ஆனபின்பும் அவர் பயன்படுத்தும் கார்களில் 23 என்ற எண்ணே இடம் பெற்றுள்ளது.
இதுபோல சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல் மந்திரியும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான ராமன் சிங் பயன்படுத்திய வாகனங்களில் 004 என்ற எண்ணே இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40 பேர் உடல் உபாதையால் பாதிப்பு.
- உணவில் விஷம் ஏதும் கலந்துள்ளதா என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மரணத்திற்குப் பிந்தைய சடங்கிற்காக தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட 40 பேருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் ராமானுஜ்நகர் மேம்பாட்டுத் தொகுதிக்கு உட்பட்ட விசுன்பூர் கிராமத்தில் நேற்று காலை உணவை உட்கொண்டதாக சூரஜ்பூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி மருத்துவர் ஆர்.எஸ்.சிங் தெரிவித்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அனைவரும் சூரஜ்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரி தெரிவித்தார்.
உணவு உட்கொண்ட இரண்டு, மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40 பேர் உடல் உபாதையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது.
- காங்கிரஸ் தற்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது.
ராய்பூர்:
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததையடுத்து முதலமைச்சராக சுக்விந்தர் சிங் நேற்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ராய்பூர் திரும்பிய சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் சத்தீஸ்கர் மாநில திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றிக்கு சத்தீஸ்கரின் பங்களிப்பும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி தற்போது 3 மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளதாகவும், அடுத்ததாக கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சத்தீஸ்கர் முதல் மந்தரி பூபேஷ் பாகேலின் துணை செயலாளர் சௌமியா சௌராசியா.
- இவரை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்பட்ட நிலக்கரியை அங்கிருந்து எடுத்துச் செல்லும் நிறுவனங்களிடம் சட்டவிரோதமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு நகரங்களில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனையடுத்து, கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஐ.ஏ.எஸ். அதிகாரி சமீர் விஷ்னோய், இந்திராமணி குழுமத்தைச் சேர்ந்த சுனில் அகர்வால் மற்றும் லட்சுமிகாந்த் திவாரி ஆகிய 3 பேரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முதல் மந்தரி பூபேஷ் பாகேலின் துணை செயலாளர் சௌமியா சௌராசியா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அவரிடம் கடந்த இரு மாதங்களில் வருமான வரித்துறையினர் பலமுறை விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், பணமோசடி வழக்கில் சௌமியா சௌராசியாவை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். வருமான வரித்துறையினர் பதிவு செய்த பணமோசடி வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்துள்ளனர்.
- 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சுரங்க இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கிறார்கள்
சத்தீஸ்கர் மாநிலம் மால்கான் என்ற கிராமத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்தின் மேற்பகுதி இன்று திடீரென இடிந்து விழுந்தது. சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
- மோகன்காடி, சுமித்ரா உள்பட 30 முதல் 40 மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்.
- பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. காட்டு பகுதிகளில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகளை பிடிக்க காதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பொம்ரா காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் பிரிவு குழு உறுப்பினர்களாக மோகன்காடி, சுமித்ரா உள்பட 30 முதல் 40 மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட ரிசர்வ் போலீசார், சிறப்பு அதிரடி படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆகியோர் பொம்ரா காட்டில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இன்று காலை நடந்த தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கு இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் காட்டுக்குள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.
இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி., கூறும்போது, "பொம்ரா காட்டுப் பகுதியில் துப்பாக்கி சண்டை நிறுத்தப்பட்ட பிறகு ஒரு பெண் உள்பட 3 மாவோயிஸ்டுகளின் உடல்கள் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன. அப்பகுதியில் தேடுதல் பணி நடந்து வருகிறது" என்றார்.
- ஜாஸ்பூர் மாவட்டத்தில் பாஹ்டி கோர்வா என்ற பழங்குடியின கிராமம் உள்ளது.
- விளையாடிக் கொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று தீபக்ராம் கையை கடித்துள்ளது.
ராய்ப்பூர்:
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள். ஆனால் தன்னை கடித்த பாம்பை சிறுவன் ஒருவன் கடித்துக்கொன்ற வினோத சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள ராய்ப்பூர் பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஸ்பூர் மாவட்டத்தில் பாஹ்டி கோர்வா என்ற பழங்குடியின கிராமம் உள்ளது.
இப்பகுதியில் 200 வகையான பாம்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த 12 வயதான சிறுவன் தீபக்ராம் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளான். அங்கே விளையாடிக் கொண்டிருந்த போது நாகப்பாம்பு ஒன்று தீபக்ராம் கையை கடித்துள்ளது.
இதனால் வேதனையடைந்த சிறுவன் கையை உதறினான். ஆனாலும் பாம்பு விடாமல் கையை சுற்றியதால் ஆவேசம் அடைந்த சிறுவன் அந்த பாம்பை பலமுறை திரும்ப கடித்தான். இதில் அந்த பாம்பு உயிரிழந்தது. இதற்கிடையே சிறுவனின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் சிறுவனை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு சிறுவனுக்கு விஷ முறிவு மருந்துகள் செலுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிறுவன் நலமாக உள்ளான்.
இதுகுறித்து பாம்பு நிபுணர் கைசர் ஹுசைன் கூறுகையில், தீபக்ராமை பாம்பு கடித்ததும் அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. இத்தகைய பாம்புக் கடிகள் வலிமிகுந்தவை. கடித்த பகுதியில் மட்டுமே அறிகுறிகளை காட்டக்கூடும். எனினும் அவர் விரைவில் குணமடைந்து விட்டார் என்றார்.
- பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இந்த சண்டை நடந்தது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சிக்கோட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட காட்மே கிராமத்தை சுற்றியுள்ள காட்டில் அதிகாலை 4 மணியளவில் இந்த துப்பாக்கி சண்டை நடந்தது. தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் இந்த சண்டை நடந்தது.
சண்டை ஓய்ந்த பிறகு அங்கு கிடந்த 2 மாவோயிஸ்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டன. அவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- முஸ்தாக் கான் தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி உள்ளார்
- முஸ்தாக் கான் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராய்கர்:
சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டம் அடல் சவுக் பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் கான். இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் முஸ்தாக் கான் தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி உள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று நடவடிக்கை எடுத்து முஸ்தாக் கானை கைது செய்தனர்.
அவர் மீது 153 'ஏ' பிரிவின் கீழ் (மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்கள் இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கு பாதகமான செயல்களை செய்தல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவரது வீட்டில் இருந்த பாகிஸ்தான் கொடியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதுதொடர்பாக பூபேஷ் பாகல் தனது டுவிட்டர் பக்கத்தில் அதன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
- ஒவ்வொரு ஆண்டும் இந்த சடங்கில் முதல்வர் பங்கேற்பார் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள ஜஜாங்கிரி மற்றும் கும்ஹாரி ஆகிய இரண்டு கிராமங்களில் கௌரி கௌரா பூஜை என்கிற பாரம்பரிய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக சாட்டையால் அடிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம்.
இந்த வழிபாட்டின்போது சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மணிக்கட்டில் சாட்டையால் பலமுறை சவுக்கடி வாங்கினார்.
கௌரி- கௌரா வழிபாட்டின் போது சவுக்கடி வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாகவும், தீமை விலகியோடும் என்றும் நம்பப்படுகிறது என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக பூபேஷ் பாகல் தனது டுவிட்டர் பக்கத்தில் அதன் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மாநிலம் செழிக்க வேண்டி, ஒவ்வொரு ஆண்டும் இந்த சடங்கில் முதல்வர் பங்கேற்பார் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌரி- கௌரா பூஜை: மக்களின் நலனுக்காக சவுக்கடி வாங்கிய முதலமைச்சர் pic.twitter.com/qNCsA8l6tz
— Maalai Malar தமிழ் (@maalaimalar) October 25, 2022






