என் மலர்tooltip icon

    சத்தீஸ்கர்

    • சத்தீஸ்கரில் 20 இடங்களில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது
    • மிசோரம் மாநிலத்தில் 40 இடங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது

    சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 20 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், 17-ந்தேதி 70 தொகுதிகளுக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    20 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. பிரசாரம் முடிவடைந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான வேலைகளை செய்து வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு நடைபெறும் இடம் மாவோயிஸ்ட் நிறைந்த இடமாகும். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மீதமுள்ள 10 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 20 தொகுதிகளில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள். சுமார் 40,78,681 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 19,93,937 பேர் ஆண்கள், 20,84,675 பேர் பெண்கள் மற்றும் 69 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

    கடந்த 2018 சட்டசபை தேர்தலில் 68 இடங்களை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், 15 இடங்களை பாரதிய ஜனதா கட்சியும் பெற்றன. தற்போதைய தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரமாக போராடி வருகின்றன.

    • சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது
    • நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்கள் அச்சுறுத்தல் அதிகம் உள்ளது

    இந்திய பாராளுமன்றத்தின் 543 இடங்களுக்கு அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் இம்மாதம் பல்வேறு தேதிகளில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களுக்கும் டிசம்பர் 3 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

    மத்திய இந்தியாவில் உள்ள அதிகளவு வனப்பிரதேசங்களை கொண்ட மாநிலமான சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது. அம்மாநில சட்டசபையில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன.

    நாளை அங்கு 20 இடங்களுக்கு முதற்கட்ட தேர்தலும், மீதமுள்ள 70 இடங்களுக்கு வரும் 17-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கெனவே அங்கு அமலில் உள்ளது.

    அம்மாநில பஸ்டார் (Bastar) பகுதியில் 12 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல் பெருமளவு உள்ள பகுதி என்பதால் சுமார் 60 ஆயிரம் சீருடை பணியாளர்களை காவலுக்கு தேர்தல் ஆணையம் பணியில் அமர்த்தி உள்ளது. இவர்களில் 40 ஆயிரம் மத்திய ஆயுத காவல் படையினர் (CAPF) மற்றும் 20 ஆயிரம் மாநில காவல்துறையினர் அடங்குவர். இப்பணியில் பெண் கமாண்டோ படையினரும், நக்சலைட்டு எதிர்ப்பு பிரிவு வீரர்களும் அடங்குவர்.

    மொத்தம் 5304 வாக்குச்சாவடிகள் நாளைய தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பாதுகாப்பு காரணங்களுக்காக 149 வாக்குச்சாவடிகள் காவல் நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளன.

    முதற்கட்ட தேர்தலில் 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள்.

    சுமார் 40,78,681 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 19,93,937 பேர் ஆண்கள், 20,84,675 பேர் பெண்கள் மற்றும் 69 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

    கடந்த 2018 சட்டசபை தேர்தலில் 68 இடங்களை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும், 15 இடங்களை பாரதிய ஜனதா கட்சியும் பெற்றன. தற்போதைய தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.க.வும் மும்முரமாக போராடி வருகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 5 மாநில தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
    • 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

    ராய்ப்பூர்:

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் முடிவடைவதால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

    மிசோரம் மாநிலத்தில் வருகிற 7-ந் தேதியும் மத்திய பிரதேசத்தில் 17-ந் தேதியும், ராஜஸ்தானில் 25-ந் தேதியும், தெலுங்கானாவில் 30-ந் தேதியும் தேர்தல் நடக்கிறது. சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக 7 மற்றும் 14-ந்தேதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடக்கிறது.

    5 மாநில தேர்தலையொட்டி ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தலைவர்கள் வாக்குசேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று மாலையுடன் அங்கு பிரசாரம் ஓய்கிறது. இதையொட்டி அங்கு தலைவர்கள் இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. இங்கு இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.

    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சத்தீஸ்கரில் நேற்று பிரசாரம் செய்து ஆதரவு திரட்டினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அன்னயோஜனா திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது.
    • அன்னயோஜனா திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது.

    ராய்ப்பூர்:

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளின் பசியை போக்குவதற்காக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா என்ற திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    இந்த திட்டத்தின் கீழ் நபர் ஒன்றுக்கு 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷனுடன் கூடுதலாக இந்த உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

    இந்த திட்டம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் அடுத்த மாதத்துடன் நிறைவடைய இருந்தது. இதை மேலும் நீட்டித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.

    சத்தீஸ்கரின் துர்க் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    80 கோடி ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய இருக்கும் நிலையில், அது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

    இது வெறும் ஒரு தேர்தல் அறிவிப்பு அல்ல, இது மோடியின் உத்தரவாதம்.

    தங்கள் குடும்பத்துக்காக வீட்டை விட்டு தொலைதூரத்தில் சென்று உழைக்கும் மக்களும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வழியாக இந்த இலவச ரேஷனை பெற முடியும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    இந்த கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை வைக்கும் காங்கிரஸ் கட்சியையும், சூதாட்ட செயலி ஊழலில் சிக்கியிருக்கும் சத்தீஸ்கர் முதல்-மந்திரியையும் கடுமையாக சாடினார்.

    • 'ஆதிவாசி'க்கு பதிலாக 'வனவாசி' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்.
    • வனவாசி மற்றும் ஆதிவாசி என இரண்டு வார்த்தைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், ஜதல்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியிடம் சரமாரி கேள்விகளை கேட்டார்.

    "பா.ஜ.க. தலைவர்கள் தங்களது பேச்சுகளில் 'ஆதிவாசி'க்கு பதிலாக 'வனவாசி' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தான் வனவாசி என்ற வார்த்தையை உருவாக்கி உள்ளனர். வனவாசி மற்றும் ஆதிவாசி என இரண்டு வார்த்தைகளுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது."

    "மத்திய பிரதேச மாநிலத்தில், பா.ஜ.க. தலைவர் ஒருத்தர், பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்து, அதே சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து அதனை வைரலாக்கினார். இது தான் பா.ஜ.க.-வின் மனநிலை. அவர்கள் உங்களது பகுதியை விலங்குகள் வசிக்கும் காடாக நினைத்து, உங்களையும் விலங்குகளை போன்றே நடத்துகின்றனர்."

    "நாட்டில் தலித், ஆதிவாசி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் இருப்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். நாட்டில் ஒரே ஒரு சாதி தான் இருக்கிறது என்றால், அவர் ஏன் தன்னை ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்று கூறிக் கொள்கிறார்?," என்று ராகுல் காந்தி பேசினார்.

    முன்னதாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் உள்ள ஒரே சாதி ஏழ்மை தான் என்று தெரிவித்து இருந்தார். பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் போது தான் ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.

    • ரூ.5 கோடியுடன் கைது செய்யப்பட்டவர் பாகேலுக்கு தர இருப்பதாக கூறினார்
    • ஏமாற்ற கிடைக்கும் எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் விடாது என மோடி தெரிவித்தார்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது.

    இம்மாதம் அங்கு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், அக்கட்சியை வீழ்த்த பா.ஜ.க.வும் தீவிரமாக முயன்று வருகின்றன. பா.ஜ.க. சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாய் பகுதியை சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகிய இருவர் துபாயில் இருந்தவாறு "மகாதேவ் இணையதள சூதாட்ட செயலி" என செயலி ஒன்றை வடிவமைத்தனர். இந்த சூதாட்டத்திற்கான செயலியில் எந்த நிலையிலும் நிறுவனம் பணத்தை இழக்காதவாறு மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருந்தது. புதிதாக விளையாட விரும்புவோர் முதலில் சிறு லாபம் பெறும் வகையிலும், அவர்கள் தொடர்ந்து ஆடும் போது பெரும் தொகையை வைத்து ஆட தொடங்கி அதில் பெரும் நஷ்டம் வரும் வகையிலும், இந்த செயலியை திட்டமிட்டு அமைத்திருந்தனர். இதன் மூலம் பல கோடிகள் லாபமடைந்தனர் இதன் நிறுவனர்கள்.

    இந்நிலையில், அமலாக்க துறையினரால் ரூ.5 கோடியுடன் கைது செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கு பணம் கொண்டு செல்லும் ஊழியர் ஒருவர் அதனை 'பாகேல்' எனும் ஒருவருக்கு தர இருப்பதாகவும், முன்னரே ரூ.508 கோடி அவருக்கு அளித்திருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து சத்தீஸ்கர் முதலவர் பூபேஷ் பாகேல் அமலாக்க துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளதாக செய்திகள் தெரிவித்தன.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    உங்களை ஏமாற்றி பணம் பறிக்க காங்கிரஸ் எந்த வாய்ப்பையும் தவற விடாது. அவர்கள் 'மகாதேவ்' எனும் கடவுளை கூட விடவில்லை. சத்தீஸ்கர் மாநிலத்தை சுரண்டிய அனைவரும் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் ஏமாற்றிய ஒவ்வொரு ரூபாய்க்கும் பதில் சொல்ல வைப்போம். இது போன்ற ஊழல்கள் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு ஏமாற்றியவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு மோடி கூறினார்.

    • சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
    • சத்தீஸ்கா் மக்கள் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலைக் காண அழைத்துச் செல்லப்படுவா்.

    ராய்பூர்:

    90 உறுப்பினா்களைக்கொண்ட சத்தீஸ்கா் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு நவ. 7-ந் தேதியும், எஞ்சிய 70 தொகுதிகளுக்கு நவம்பா் 17-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    சத்தீஸ்கரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'சத்தீஸ்கா் 2023-க்கான மோடியின் உத்தரவாதம்' என்ற தலைப்பிலான பா.ஜ.க. தோ்தல் அறிக்கையை மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டாா்.

    அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-

    சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதன்படி, விவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு 21 குவிண்டால் நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,100 வீதம் கொள்முதல் செய்யப்படும். இதற்கான பணம் ஒரே தவணையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    திருமணமான பெண்களுக்கான உதவித்திட்டத்தின் கீழ், அவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 12,000 நிதியுதவி அளிக்கப்படும். நிலமில்லா ஏழை விவசாயத் தொழிலாளா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படும்.

    ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த பெண்களுக்கு ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகிக்கப்படும்.

    கல்லூரி செல்லும் மாணவா்களுக்கு மாத பயணப்படி நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஒரு லட்சம் பணியிடங்கள் ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் நிரப்பப்படும்.

    பிரதமரின் வீட்டு வசதி (ஆவாஸ் யோஜனா) திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் 2 ஆண்டுகளுக்குள் குழாய் மூலம் குடிநீா் விநியோகம் வழங்கப்படும்.

    அனைத்துக் குடிமக்களுக்கும் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் 50 சதவீத பங்களிப்பு தொகையை மாநில அரசு ஏற்கும்.

    சத்தீஸ்கா் மக்கள் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலைக் காண அழைத்துச் செல்லப்படுவா். இவ்வாறு பா.ஜ.க. தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் 20 வாக்குறுதிகளை அமித் ஷா விவரித்தாா்.

    • சத்தீஸ்கரில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
    • மொத்தமுள்ள 90 இடங்களுக்கு வரும் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இம்மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    கான்கெர் நகரில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், ராய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகெல் பிரதமர் நரேந்திர மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் பேசுகையில், நேற்று பிரதமர் மோடி கான்கேருக்கு வந்தார். எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை என்றார்.

    சாமானியர்களின் வளர்ச்சியை அவர் பார்க்கவில்லை, அதானியின் வளர்ச்சியை மட்டுமே பார்க்கிறார்.

    சுரங்கத்தையும், நாகர்னார் உருக்காலையையும் அதானிக்கு கொடுக்கவில்லை. அதனால்தான் வளர்ச்சி இல்லை என்று சொல்கிறார்.

    அதானிக்கு சுரங்கங்களையும், நகர்நார் உருக்காலையையும் கொடுத்தால்தான் சத்தீஸ்கரில் வளர்ச்சி ஏற்படும் என்று பிரதமர் நினைக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    • காங்கிரஸை எதிர்த்து பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கி உள்ளது
    • 5 வருடங்களில் காங்கிரஸார் என்ன சாதனை செய்தார்கள் என கேட்டார் மோடி

    சத்தீஸ்கர் மாநிலத்தின் சட்டசபையில் உள்ள 90 இடங்களுக்கு இம்மாதம் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    கடந்த சட்டசபை காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல் தலைமையில் ஆட்சி நடைபெற்றது. இதனால், மீண்டும் தொடர்ந்து ஆட்சிக்கு வர காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பா.ஜ.க.வும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.

    பா.ஜ.க.வை வெற்றியடைய செய்ய இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் இன்று அம்மாநில கன்கெர் நகரத்தில் பா.ஜ.க. ஏற்பாடு செய்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது. மாநில மக்களும், பா.ஜ.க.வும் இணைந்து சத்தீஸ்கர் மாநிலம் உருவாக பாடுபட்டனர். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது, இங்குள்ள பா.ஜ.க.வுடன் சண்டையிட்டு கொண்டே இருந்தது. இது ஒரு எம்.எல்.ஏ.வையோ அல்லது முதல்வரையோ தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அல்ல. இது உங்கள் குழந்தைகளின் வருங்காலத்தை குறித்து நீங்கள் முக்கிய முடிவெக்க வேண்டிய தேர்தல். சத்தீஸ்கரின் அடையாளத்தை வலிமைப்படுத்த பா.ஜ.க. உழைக்கிறது. கடந்த 5 வருடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் சொத்து மதிப்பு கூடியதை தவிர அவர்கள் என்ன சாதனை செய்தார்கள்? ஏழைகள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு என்ன கிடைத்தது? இம்மாநில அரசாங்க அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதில் புது சாதனை படைத்து விட்டனர். மக்களுக்கு தரமில்லாத சாலைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளே கிடைத்தன.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • சத்தீஸ்கரில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் தீவிரமாக போராடி வருகிறது
    • சிலிண்டருக்கு ரூ.500 மானியமாக வழங்கப்படும் என்றார் பிரியங்கா

    இந்தியாவில் 5 மாநிலங்களுக்கு நவம்பரில் வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல்களுக்கான முடிவுகள், டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    அடுத்த வருடம் இந்தியாவிற்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த 5 மாநில தேர்தல்களை அதற்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. இதன் காரணமாக 5 மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய தேசிய கட்சிகளும், அந்தந்த மாநிலங்களில் வலுவாக உள்ள பிராந்திய கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன.

    இந்த 5 மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜல்பந்தா பகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    மதத்தின் பெயரால் உங்களிடையே பிரிவை ஏற்படுத்துபவர்களுக்கு (பா.ஜ.க.) வாக்களிப்பீர்களா அல்லது உங்கள் நல்வாழ்வுக்காக பாடுபடும் கட்சிக்கு (காங்கிரஸ்) வாக்களிப்பீர்களா? மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இங்குள்ள சுமார் 6 ஆயிரம் உயர்நிலை பள்ளிகள் சுவாமி ஆத்மானந்த் ஆங்கில மற்றும் ஹிந்தி மொழி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். பொதுமக்களுக்கு 200 யூனிட்டுகள் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். சமையல் எரிவாயு தொகையில் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். சாலை விபத்தில் சிக்கும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்கப்படும்.

    இவ்வாறு பிரியங்கா கூறினார்.

    முன்னதாக சத்தீஸ்கரில் பிரியங்கா காந்தியின் சகோதரரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தியும் தனது பிரச்சாரத்தில் பல வாக்குறுதிகளை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என ராகுல் கூறினார்
    • ஆட்சிக்கு மீண்டும் வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என உறுதியளித்தார்

    இந்தியாவில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு நவம்பரில் வெவ்வேறு தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தல்களுக்கான முடிவுகள், டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    அடுத்த வருடம், இந்தியாவிற்கு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த 5 மாநில தேர்தலை அதற்கு முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. எனவே இதில் வெல்ல தீவிர பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன.

    இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் ராகுல் காந்தி ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு தற்போது வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும். நிலமில்லாத கூலி தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை, தற்போது வழங்கப்படும் ரூ.7 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும். இது குறித்து நான் முதல்வர் பூபேஷ் பாகேலுடன் கலந்து ஆலோசித்து விட்டுத்தான் இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். அது மட்டுமல்ல, ஆட்சிக்கு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 2018ல் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றி விட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகள் முன்பு போல் தங்கள் நிலங்களை விற்காமல் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு ராகுல் கூறினார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தியுடன் முதல்வர் பூபேஷ் பாகேல், துணை முதல்வர் சிங் தியோ, உள்துறை அமைச்சர் டம்ரத்வாஜ் சாகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    5 மாநில தேர்தல்களில் மக்களுக்கு வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக வெளியிடாமல் தேர்தல் பொதுக்கூட்டங்களில் வெளிப்படுத்தும் யுக்தியை தற்போது காங்கிரஸ் கடைபிடித்து வருகிறது.

    • சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகிற 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலம் கான்சேர் மாவட்டம் கோயாலி பேடா போலீஸ் நிலையத்துக்குட்பட்ட வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு மறைந்து இருந்த நக்சலைட்டுகள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.

    இதில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் வருகிற 7-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் 2 நக்சலைட்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.

    ×