search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பட்டாசுகளை வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்
    X
    பட்டாசுகளை வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்

    பட்டாசுகளை வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்...

    பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை அனைவருக்கும் எடுத்துக்கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
    தீபாவளி பண்டிகை என்பது பட்டாசுகள் வாணவேடிக்கைகளுடன் குதுகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதை அனைவருக்கும் எடுத்துக்கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

    செய்ய வேண்டியவை

    * பட்டாசுகளை வெடிக்கும் பொழுது எப்பொழுதுமே திறந்தவெளியைத் தேர்ந்தெடுத்து அங்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வெடிக்க தொடங்க வேண்டும்.

    * பட்டாசுகளை பட்டாசு விற்க உரிமம் பெற்றவர்கள் மற்றும் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து வாங்க வேண்டும்.

    * மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்கள், நடமாடும் இடங்கள் மற்றும் குழந்தைகள் இருக்கும் இடங்களிலிருந்து ஒதுங்கி பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

    * எப்பொழுதுமே பட்டாசுகளை வெடிக்க நீளமான அகர்பத்தியை பயன்படுத்துவது நல்லது. அதே போல் பட்டாசுகளை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்தே வெடிக்க வேண்டும்.

    * பட்டாசுகளின் மேல் அச்சிடப்பட்டிருக்கும் வழிமுறைகளை படித்து பின்பு அதன்படி பட்டாசுகளை வெடிப்பது மிகவும் பாதுகாப்பானதாகும்.

    * ராக்கெட் போன்ற வானவேடிக்கை பட்டாசுகளை பற்றவைப்பதற்கு முன் திறந்த ஜன்னல், கதவுகள், பால்கனி போன்றவற்றை நோக்கி இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் வெடிப்பது நல்லது. இதன் மூலம் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

    * நம்முடைய மொத்த பட்டாசுகளை வெடிக்கும் பொழுது கால்களில் காலணிகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.

    * தண்ணீர் நிறைந்த வாளியை பட்டாசு வெடிக்கும் இடத்திற்கு அருகில் வைத்திருக்க வேண்டும். இதனால் தீ விபத்துகள் ஏற்பட்டாலும் அவற்றை எளிதில் அனைத்து விட முடியும்.

    * ஒரு நேரத்தில் ஒரு வெடியை மட்டுமே வெடிக்க வேண்டும். ஒருவர் பட்டாசை வெடிக்கும் பொழுது மற்றவர்கள் அதை பார்ப்பது (பாதுகாப்பான தூரத்திலிருந்து) பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

    * நாம் வசிக்கும் குடியிருப்பு பகுதி, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீபாவளிக்கு முன் பட்டாசுகளை எவ்வாறு கையாள்வது, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து ஒரு கூட்டம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

    செய்யக்கூடாதவை

    செய்யக்கூடாதவை

    * பட்டாசுகளை வெடிக்கும் பொழுது ஜெர்ஸி, நைலான், சில்க் போன்ற துணிகளை அணியாமல் பருத்தி துணிகளை அணிய வேண்டும்.

    * பட்டாசுகளை வெடிக்க தீக்குச்சிகள், சிறிய ஊதுபத்திகளை பயன்படுத்தக் கூடாது.

    * மரங்கள் மற்றும் மின்சார ஒயர்கள் இருக்கும் இடங்களுக்கு கீழே பட்டாசுகளை வெடிக்க கூடாது.

    * இரண்டு, மூன்று வெடிகளை இணைத்து வெடிக்க கூடாது.

    * உபயோகப்படுத்தப்படாத பட்டாசுகளின் அருகில் எரியும் விளக்கு, ஊதுபத்தி போன்றவற்றை வைக்க கூடாது.

    * வெடிக்காமல் பாதியில் நின்று போன வெடிகளுக்கு அருகில் சென்று அவற்றை வெடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.

    * தெருக்கள் மற்றும் சாலைகளில் மக்கள் நடந்து செல்லும் பொழுதோ அல்லது வாகனங்களில் செல்லும் பொழுதோ வெடிகளை வெடிக்க கூடாது.

    * அதே போல் எந்த ஒரு பட்டாசையும் கைகளில் வைத்து வெடிப்பது போன்ற வேடிக்கை விளையாட்டில் ஈடுபடக் கூடாது.

    * குழந்தைகளின் கைகளில் பட்டாசுகளை கொடுத்து ஏற்றக்கூடாது.

    * வீட்டிற்குள்ளே பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

    * நாம் பற்றவைத்த பட்டாசுகளை வெடிக்கவில்லை என்றால் அவற்றை கைகளில் தூக்கிப் பார்ப்பது அல்லது கால்களால் தள்ளுவது போன்றவற்றைச் செய்யக்கூடாது.

    * அதே போல் சிறிய பாட்டில்கள் பாத்திரங்கள், பெட்டிகளின் உள்ளே வைத்து பட்டாசுகளை வெடிக்க கூடாது.

    * வெடிக்கும் பொழுது தீக்காயம் பட்டுவிட்டால் அவற்றின் மீது கிரீம், களிம்பு அல்லது எண்ணெயை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உபயோகிக்க கூடாது.

    * தொளதொளப்பாக இருக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

    * ஆஸ்துமா, அழற்சி மற்றும் நுரையீரல் பிரச்சினை இருப்பவர்கள் தீபாவளி சமயங்களில் மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ளும் மாஸ்க்குகளை அணிந்து கொண்டு வெளியில் செல்ல வேண்டும்.

    * தீபாவளி பண்டிகை என்பது மிகவும் குதுகலமாகவும், சந்தோஷமாகவும் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இத்தீபாவளி திருநாளை பாதுகாப்புடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவது நம் கைகளில்தான் உள்ளது.

    அனைவருக்கும் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் கொண்டாடுவதற்கு வாழ்த்துக்கள்.
    Next Story
    ×