என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • கோன் சாம்பிராணியை வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
    • தயாரித்து வணிக ரீதியாக சந்தைப்படுத்துங்கள்.

    பூஜையில் சுவாமிக்கு சாம்பிராணி போடும் வழக்கம் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். பாறை போல் இறுகிக் கிடக்கும் சாம்பிராணிக் கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், நமக்கு வரும் கடினமான துன்பங்கள் எல்லாமே சாம்பிராணி போடப், போட விலகி ஓடும் என்பது ஒரு நம்பிக்கை.

    வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் காலை சாம்பிராணி தூபம் போடுவது பலரும் மேற்கொள்ளும் பாரம்பரிய வழக்கமாகும். இதற்கு தேவைப்படும் கோன் சாம்பிராணியை குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே தயாரிக்க முடியும். இதை எப்படி எளிமையான முறையில் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    உலர்ந்த பூக்கள் கப் (ரோஜா. சாமந்தி, மல்லிகை பூக்களின் கலவையாக எடுத்துக் கொள்ளுங்கள்)

    சாமகிரி 1 கப் (வாசனை மூலிகைகளின் கலவை)

    ஏலக்காய் - 10

    கிராம்பு - 10

    பச்சைக் கற்பூரம் - 5 வில்லைகள்

    மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

    சந்தனப் பொடி 2 டேபிள் ஸ்பூன்

    வெட்டிவேர் - ஒரு கைப்பிடி

    ரோஜா- ஒரு கப்

    3 டீஸ்பூன்

    ரோஸ் எசன்ஸ்

    பன்னீர் - கப்

    செய்முறை:

    உலர்ந்த பூக்களை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக பொடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை சல்லடையில் கொட்டி சலித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு சாமகிரி, ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், மஞ்சள் தூள். சந்தனப் பொடி, வெட்டி வேர் ஆகியவற்றை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ளுங்கள்.

    அகன்ற பாத்திரத்தில் இரண்டு பொடிகளையும் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். பின்பு அதில் நெய் ஊற்றி நன்றாகக் கலக்க வேண்டும்.

    அதன்பிறகு அந்த கலவையில் சிறிது சிறிதாக பன்னீர் சேர்த்து கிளறுங்கள். இந்த கலவை புட்டு மாவு பதத்தில் இருக்க வேண்டும். அதாவது கையில் பிடித்தால் உதிராமல் இருக்க வேண்டும்.

    பின்னர் கோன் மோல்டில் வைத்து இறுக்கமாக சுருட்டி ஒட்டவும். அதன் உள்ளே இந்த கலவையை வைத்து அழுத்தி, வெளியில் எடுத்து வைத்தால் கோன் வடிவத்தில் சாம்பிராணி தயாராகிவிடும். இவற்றை இரண்டு நாட்கள் வெயிலில் காயவைத்து எடுக்க வேண்டும்.

    இந்த சாம்பிராணியை பூஜை அறையில் பயன்படுத்தும்போது, வீட்டில் தெய்வீக மணம் பரவும். முதலில் உங்களுடைய தேவைக்காக தயாரித்து பயன்படுத்திய பிறகு, வணிக ரீதியாக சந்தைப்படுத்துங்கள்.

    • பிறவி கர்மாவை எளிதில் வெல்லலாம்.
    • மனம் விட்டு சிரிக்கும் வீடுதான் சொர்க்கம்

    ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற ஆயிரம் ஆயிரம் வழிகள் தர்மத்தில் உள்ளது. உண்மைதான். ஆனால் உறவுகளையும், நட்புகளையும் கொண்ட இந்த உலகை வெல்வதும்... பிறவி பிணியை அறுப்பதற்கும் ஒரே ஒரு வழிதான் உள்ளது அதுதான் இல்லறம்.

    இல்லறம் என்றவுடன் எம்மில் பலருக்கு இல்லத்தரசியின் நினைவு வரும். எவன் ஒருவன் கட்டிய மனைவியை கடைசி மூச்சு உள்ளவரை கண்கலங்காமல் காப்பாற்றுகிறாரோ... அவன் தவம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இல்லறமே ஒப்பற்ற தவம்.

    எம்முடைய பெற்றோர்கள் வழியிலான கர்மா ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய 21 வயது வரை பின் தொடரும். அதன் பிறகு தான் அவர்களுக்கான கர்மா இயங்கத் தொடங்கும். அதனால் தான் எம்முடைய முன்னோர்கள் 21 வயதுக்கு பிறகு தான் ஆண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் தற்போதைய மூத்தோர்கள் பெண்களுக்கு 21 வயதுக்குப் பிறகுதான் திருமணம் செய்ய வேண்டும் என்று பாலின சமத்துவத்தை இந்த கருத்திலும் உட்பகுத்தி இருக்கிறார்கள்.

    சொந்தம் என்பது கர்மாவின் பழைய பாக்கி என அறிந்தவனுக்கும், அறிந்து கொள்பவனுக்கும் சொந்தம் ஒரு போதும் சுமையாக இருக்காது. நட்பு என்பது பழைய பகை என்பதை பண்புடன் அறிந்தவனுக்கு பதற்றம் ஒருபோதும் ஏற்படாது.

    எதிரி என்பவன் எம்முடைய கர்மாவின் தார்மீக கணக்கு என்ற உண்மையை உணர்ந்தால் எதிரி எதிரியாக இருப்பதில்லை. உனது செயலே கர்மாவாக மாற்றம் அடைந்து அந்த கர்மாவே நீ எதிரி என நினைக்கும் உயிருள்ள சடலத்தை உனக்கு எதிராக பயன்படுத்துகிறது என்ற பேருண்மையை நீ உணரும் போது எதிரி எதிரே அசுர பலத்துடன் வந்தாலும் உனக்குள் கலக்கம் என்பது துளியும் இருக்காது.

    எம்மை உடனிருந்தே துன்புறுத்தும் உறவுகள். உன்னுடன் பிறந்த உன் பழைய கர்மா கணக்கு என புரிந்தால் பந்தம், பாசம், சகோதரத்துவம் மீது எந்தவித பற்றும் அல்லாத ஒரு நிலையை பின்பற்றி பிறவி கர்மாவை எளிதில் வெல்லலாம்.

    இதில் இன்னும் ஒரு படி மேலே சென்று உம்முடைய கர்மாவின் கணக்கை துல்லியமாக உங்களால் அவதானிக்க முடிந்தால், உங்களுக்கு அருகில் அமரும் மனைவி யார் என்றும் புரியும். மனைவியை மகிழ்ச்சியாக வைப்பது உலகிலேயே கடும் சிரமமான பணி மட்டுமல்ல... அதுதான் உலகிலேயே ஈடுஇணையற்ற சிறந்த தவம்.

    கட்டிய மனைவியையும், உன்மூலம் அவள் பெற்ற பிள்ளைகளையும் உளமாற நேசித்து, உன்னதமாக உனது வாழ்வை ஆனந்தமாக நீ அர்ப்பணித்தால் அதுவே உலகின் சிறந்த தர்மம். சிறந்த தவம்.

    இந்த பேருண்மையை உணர்ந்து கொண்டதால் தான் எம்முடைய முன்னோர்கள் இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினான். மேலும் இதனை எளிமையாக 'மனைவி மனம் புழுங்கி அழும் வீடுதான் நரகம் என்றும், மனைவி மனம் விட்டு சிரிக்கும் வீடுதான் சொர்க்கம்' என்றும் குறிப்பிட்டனர். சக்தியை உணர்ந்தால் மட்டுமே சிவம் ஜோதியாகி ஜொலிக்கும் என்ற சூட்சுமமான குறிப்பையும் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள்.

    எனவே மனைவி மற்றும் பிள்ளைகளை நேசித்து அவர்களுடன் இனிமையான இல்லற வாழ்க்கையை வாழ்ந்து எம்முடைய பிறவி கடனை கழித்து வீடு பேறடைவோம்.

    • நிறங்களுக்கும், நமது உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
    • உடல் மற்றும் மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை.

    சில வகை நிறங்கள் உங்களுக்குள் பதற்றத்தையும், பயத்தையும் உண்டாக்குவதை உணர்ந்து இருக்கிறீர்களா? சில நிறங்கள் உங்களை சூழ்ந்து இருக்கும்போது உங்கள் மனம் அமைதியில் மூழ்குவதை அறிந்திருக்கிறீர்களா? நிறங்களுக்கும், நமது உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நிறங்கள் நமது உடல் மற்றும் மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை.

    வண்ண உளவியலின்படி, நிறங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சூடானது, மற்றொன்று குளுமையானது. அந்த வகையில் நிறங்களும், அவை ஏற்படுத்தும் மாற்றங்களும் குறித்த தகவல்களை இங்கே அறிவோம்.

     சிவப்பு:

    கவனத்தை ஈர்க்கும் நிறம் சிவப்பு. இது உங்களை உற்சாகமாகவும், புத்துணர்வாகவும் உணர வைக்கும். கூச்ச சுபாவம் உள்ளவர்கள், பய உணர்வுடன் இருப்பவர்களுக்கு சிவப்பு நிறம் நம்பிக்கையை அளிக்கும்.

     மஞ்சள்:

    பிரகாசமாகத் தெரியும் மஞ்சள் நிறம் மகிழ்ச்சி, நட்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது. மஞ்சள் நிறத்தை பார்க்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்கள் மற்றும் நம்பிக்கை ஆகியவை இந்த நிறத்தால் ஈர்க்கப்பட்ட மனித பண்புகள்.

     நீலம்:

    நீல நிறம் அமைதியைக் குறிக்கும். இது மன வலிமை மற்றும் சிந்தனையில் தெளிவை உண்டாக்கும். வெளிர்நீல நிறம், ஒருவருக்குள் நேர்மறை எண்ணத்தை விதைக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம், அடர்நீல நிறம் ஒருவருக்கு தனித்து விடப்பட்டது போன்ற எண்ணத்தை உருவாக்கும்.

     பச்சை:

    பச்சை நிறம் இயற்கை மற்றும் பணத்துடன் அதிக தொடர்பு கொண்டதாகும். வளர்ச்சி, கருவுறுதல், ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இந்த நிறம் அடிப்படையாகும். மனதில் இருக்கும் பதற்றம், கவலையை போக்கி அமைதியை தரும் ஆற்றல் பச்சை நிறத்துக்கு உண்டு. அதேசமயம், அடர் பச்சை நிறத்தை பார்க்கும்போது, மனதில் பொறாமை குணம் தோன்ற வாய்ப்புள்ளது.

     ஊதா:

    ஊதா நிறம் செல்வ செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. கற்பனைத் திறனைத் தூண்டி, படைப்பாற்றலை மேம்படுத்தும் சக்தி இதற்கு உண்டு.

     வெள்ளை:

    வெள்ளை, மன அமைதியின் நிறம். இது கருணை, அன்பு, காதல் உள்ளிட்ட உணர்வுகளை அதிகரிக்கும்.

    • தானாகவே சரியாகிவிடக்கூடியவை. பயப்படத் தேவையில்லை.
    • இரவில் உள்ளாடை அணிவதை தவிர்க்கவும்.

    மாதவிலக்கு நெருங்கும்போது மார்பகங்களில் ஏற்படுகிற இந்த அறிகுறிகளுக்கும் ப்ரீமென்ஸ்டுரல் சிண்ட்ரோம் பிரச்சினைதான் காரணம். மார்பகங்களில் வலி, வீக்கம், மார்பகங்கள் கனத்துப் போன உணர்வு அல்லது மென்மையான உணர்வு என எல்லாவற்றுக்கும் காரணம் புரோஜெஸ்ட்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹோர்மோன்களின் அளவுகளில் ஏற்படுகிற மாற்றங்கள்.

    இந்த அறிகுறிகள் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே ஆரம்பித்து, மாதவிலக்கின் போது உச்சத்தை அடைந்து, பிறகு தானாகவே சரியாகிவிடக்கூடியவை. பயப்படத்தேவையில்லை. அதற்காக இப்படி எல்லா அறிகுறிகளையுமே சாதாரணம் என நினைத்து அலட்சியப்படுத்தவும் கூடாது.

    எவை எல்லாம் சாதாரணமானவை?

    * வீக்கம்

    * மென்மையாதல்

    * வலி* எரிச்சல்

    மார்பகங்களின் அடர்த்தியில் மாற்றம் என்ன செய்யலாம்?

    * கொழுப்பு அதிகமான உணவுகளைத் தவிர்த்து குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடவும்.

    * கஃபைன் உள்ள கோப்பி, டீ, சொக்லேட் என எல்லாவற்றையும் தவிர்க்கவும்.

    * மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துவிடவும்.

    * மார்பகங்களை உறுத்தாத, சிரமப்படுத்தாத சப்போர்ட் கொடுக்கும்படியான வசதியான உள்ளாடை அணியவும்.

    * உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக்கொள்ளவும்.

    எவற்றை அலட்சியப்படுத்தக்கூடாது?

    * மார்பகங்களிலோ அல்லது அக்குள் பகுதிகளிலோ அசாதாரணமான கட்டி, வீக்கம், வலி போன்றவை தென்பட்டால்...

    * மார்பகங்களில் இருந்து திரவமோ, ரத்தமோ கசிந்தால்...

    * உணவு, உடற்பயிற்சி, உள்ளாடை என மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் பின்பற்றிய பிறகும் ஒருவித அசெளகரியத்தை

    உணர்ந்தால்...

    * தூக்கம் கெட்டுப்போகும் அளவுக்கு அது உங்களைப் பாதித்தால்...

    * மாதவிலக்கு முடிந்த பிறகும் இந்த அறிகுறிகள் தொடர்ந்தால்...

    * மார்பகங்களின் வடிவத்தில் மாற்றங்களை உணர்ந்தால்...

    * மார்பகத்தின் சருமமானது சிவந்துபோவது, அரிப்பது, குழிகள் விழுந்து காணப்படுவது போன்ற மாற்றங்களை சந்தித்தால்...

    இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக இது தொடர்பான மருத்துவரை அணுகிப் பரிசோதனையும் ஆலோசனையும் மேற்கொள்வது பாதுகாப்பானது.

    என்ன செய்யலாம்?

    * மார்பகங்களில் வலியோ வீக்கமோ இருக்கும் நாட்களில் இரவில் உள்ளாடை அணிவதை தவிர்க்கவும்.

    * மருத்துவரின் ஆலோசனையின் பேரில் விட்டமின் மற்றும் மக்னீசியம் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக்கொள்ளலாம்.

    * நடைப்பயிற்சி, இரவில் வெதுவெதுப்பான நீரில் குளியல் போன்றவையும் இதமளிக்கும்.

    சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள்

    * வேர்க்கடலை மற்றும் ஹேசில் நட்ஸ்

    * பசலைக்கீரை

    * ஆலிவ்

    * சோளம்

    * கேரட்

    * வாழைப்பழம்

    * பழுப்பரிசி

    * அவகோடா

    • உடல்பருமன் குறைந்தாலும் கூடினாலும் இந்த பிரச்சினை இருக்கலாம்.
    • தூக்கமின்மை காரணங்களாலும் மாதவிடாய் இரண்டு முறை வரலாம்.

    பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் ஒவ்வொரு மாதமும் முன், பின் என மாறிவருவது இயல்பு. அதுவே 10 நாட்களுக்கு மேல் தள்ளிப்போதல், ஒரே மாதத்தில் இரண்டு முறை வருதல் போன்ற பிரச்சினைகளை உடனே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளுதல் அவசியம். அப்படி ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வர என்ன காரணம் என்று பார்க்கலாம்.

    * முதலில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையும் வருவது மாதவிடாய்தானா அல்லது அது ரத்தக் கசிவா எனக் கண்டறிவது அவசியம்.

    * மாதவிடாய் போன்று உதிரப்போக்கு வந்துகொண்டிருந்தால் அது மாதவிடாய்தான். அவ்வாறு அல்லாமல் சிறிது உதிரம் மட்டுமே வந்து, நெப்கின் முழுமையாக பயன்படுத்தவில்லை எனில், அது ரத்த கசிவதாக இருக்கலாம்.

    * பிறப்புறுப்பில் இருந்து ரத்தக் கசிவு என்பது உடலுறவு கொள்ளுதல், கருக்கலைதல் அல்லது பிரசவ காலத்திலோதான் பெரும்பாலும் நிகழும். இதுதான் காரணம் என்றால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் அவசியம்.

    * உங்களுக்கு மாதவிடாயாக இருக்கும் பட்சத்தில் அது ஒவ்வொரு மாதமும் தொடர்கதையானால் சில பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். உங்களுக்கு தைராய்டு அதிகம் சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ இந்த பிரச்சினை வரலாம்.

    * ஒருவேளை நீங்கள் மாதவிடாய் நிற்கும் தருவாயில் இருக்கிறீர்கள் என்றாலும் இந்த பிரச்சினை வரலாம்.

    * நீங்கள் அதிகம் கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொள்கிறீர்கள் என்றாலும் இரண்டு முறை மாதவிடாய் வரலாம். மன அழுத்தம் காரணங்களால் சரியான உணவின்மை, தூக்கமின்மை காரணங்களாலும் மாதவிடாய் இரண்டு முறை வரலாம்.

    * திடீரென உடல்பருமன் குறைந்தாலும் கூடினாலும் இந்த பிரச்சினை இருக்கலாம். மேலே குறிப்பிட்ட விஷயங்கள் உங்கள் வாழ்க்கை முறையோடு ஒத்துப்போவதாகக் கருதினால், இதை சாதாரணமாக கடந்து செல்லாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறுவது அவசியம்.

    • படம் வைக்கும்போது ஜோடியாக வைப்பதுதான் முறை.
    • வாஸ்து ரீதியாக அமைத்து பராமரித்து வருவது வழக்கத்தில் இருக்கிறது.

    உள் அலங்கார யுக்திகளில் ஒன்றாகவும், அலங்கார கலைப்பொருள் என்ற கண்ணோட்டத்துடன் வீட்டின் உட்புறமாகவும், வெளிப்பகுதிகளிலும் சிலைகள் வைக்கப்பட்டாலும், வாஸ்து ரீதியான அணுகுமுறை யாகத்தான் அவை கவனிக்கப்படுகின்றன. அறைகளை அலங்கரிக்கும் உள்கட்டமைப்பு முறைகளில் பல்வேறு நவீன அணுகுமுறைகள் இப்போது கையாளப்பட்டு வருகின்றன. அவற்றில் பிரத்யேகமான முறையாக மண் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட சிலைகளை வீடுகளின் முக்கியமான இடங்களில் வைப்பதும் ஒன்று. பரவலாக நடைமுறையில் இருக்கும் அத்தகைய சிலை அலங்கார முறைகளில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    வீடுகளின் வரவேற்பறை, சுவர் அலமாரிகள், ஷோகேஸ், படிக்கும் அறை, பூஜையறை ஆகிய இடங்களில் பரவி இருக்கும் நேர்மறை சக்தி அலைகளை ஈர்க்கும் மையமாக பிள்ளையார் சிலைகள் அமைக்கப்படுகின்றன.

    வீடுகளில் வைக்கப்படுவது மட்டுமல்லாமல் தெரு முனைகளிலும் பிள்ளையார் சிலைகள் இருக்கின்றன. பிள்ளையார் சிலைகள் வைப்பது ஆன்மிக அடையாளம் என்ற நிலையை தாண்டி, வைக்கப்படும் இடத்தில் உள்ள பஞ்சபூத சக்திகளை நிலைப்படுத்தும் தன்மை கொண்ட வடிவியல் குறியீடாக வாஸ்து சாஸ்திரம் கவனிக்கிறது.

     வீடுகளின் நுழைவு வாசலில் பிள்ளையார் சிலை அல்லது படம் வைக்கும்போது ஜோடியாக வைப்பதுதான் முறை. ஒன்று நுழைவாயிலை பார்த்தவாறும், இன்னொன்று அதற்கு எதிர்ப்புறம் பார்த்தவாறு வைக்க வேண்டும். மற்ற இடங்களில் பிள்ளையார் சிலைகள் வைக்கப்படும்போது பெரிய அளவில் உள்ளவற்றை தவிர்த்து சிறிய அளவாக இருப்பதையே வைக்க வேண்டும்.

    வீடுகளை பாதிக்கும் தெருக்குத்து போன்ற வாஸ்து ரீதியான குறைகள் பிள்ளையார் சிலைகளை அமைப்பதன் மூலமாக சரி செய்யலாம் என்பது பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக வீடுகளின் தெற்கு திசை, மேற்கு திசை மற்றும் தென்மேற்கு மூலை ஆகிய பகுதிகளில் தெருக்குத்து இருக்கும்பட்சத்தில் வீட்டு சுவரில் அல்லது சுற்றுச்சுவரில் கல்லால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலையை வாஸ்து ரீதியாக அமைத்து பராமரித்து வருவது வழக்கத்தில் இருக்கிறது.

     சீனாவில் இருந்து நமக்கு இறக்குமதியான பொருட்களில் சிரிக்கும் புத்தர் என்ற சிலை வடிவமும் ஒன்று. பெரும்பாலும் சீனக்களிமண்ணால் செய்யப்பட்ட சிரிக்கும் புத்தர் சிலைகள் மகிழ்ச்சியின் வெளிப்பாடான சிரிப்பை காட்டுவதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். பார்ப்பவர்களது மனதில் அந்த சிலையானது மகிழ்ச்சியின் அலைகளை எதிரொலிக்கக்கூடிய மனோதத்துவத்தை உள்ளடக்கியதாக அதன் வடிவம் இருப்பதை நாம் உணர முடியும்.

     குபேரதிக்கு என்று சொல்லப்படும் வடக்கில் இந்த சிலைகளை வைக்க வேண்டும் என்பது முறையாகும். முற்றிலும் பொருளாதாரம் சார்பான கருத்தையும், அதன் வளர்ச்சியையும் குறியீடாக கொண்ட அடையாளமாக இந்த சிலை பார்க்கப்படுகிறது. வீடுகளில் இவை குபேரனின் அம்சம் என்ற கருத்துடன் வைத்து பராமரிக்கப்படுகிறது. படுக்கை அறைகளில் வைக்கப்படும் சிலைகளில் முக்கியத்துவம் பெற்றவையாக இவை உள்ளன.

    யானை அல்லது வாத்து சிலைகள் குடும்ப உறவுகளில் இருக்கும் கசப்பான உணர்வுகளை இனிமையாக மாற்றுவதற்கான மனோதத்துவ குறியீடுகளாக வைக்கப்படுகின்றன. பொதுவாக படுக்கை அறையில் வைக்கப்படும் அவை ஜோடிகளாக இருக்க வேண்டும்.

    சிலைகளாக அவற்றை வைக்க இயலாத நிலையில் அழகிய பிரேம்கள் பொருத்தப்பட்ட படங்களாகவும் படுக்கையறை சுவரில் மாட்டி வைக்கலாம் என்ற மாற்று முறையும் வாஸ்து வல்லுநர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    • உறக்கத்தை எளிமையாக பெறுவது சாத்தியமாக இருக்கும்.
    • கட்டில்கள் மரத்தால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும்.

    வீடுகளில் உள்ள மற்ற அறைகளுக்கு இல்லாத முக்கியமான பங்கு படுக்கையறைக்கு இருக்கிறது. காரணம் பகல் முழுவதும் நம்மால் செலவழிக்கப்பட்ட உடலின் சக்தியை, உறக்கத்தின் மூலம் உடல் திரும்பவும் பெற்றுக்கொள்கிறது என்பது யாவருக்கும் தெரியும். படுக்கையறை அமைக்கப்படும்போது அமைதியான சூழலை மனதில் கொண்டு செயல்படவேண்டும் என்று கட்டுமான வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அவர்களது ஆலோசனைகளையும், அமைதி தரக்கூடிய வண்ணங்களை பயன்படுத்துவது பற்றிய முக்கியமான தகவல்களையும் இங்கே பார்ப்போம்.

    சிறியவர் முதல் பெரியவர் வரை ரிலாக்சாக இருக்கும் இடமாக படுக்கையறை இருப்பதால் அதன் அமைப்பு, அறையில் உள்ள பொருட்கள், பூசப்பட்ட வண்ணங்கள் மற்றும் படுக்கைகள் ஆகிய அனைத்திலும் தகுந்த கவனம் செலுத்தினால், அருமையான உறக்கத்தை எளிமையாக பெறுவது சாத்தியமாக இருக்கும் என்று கட்டிட பொறியாளர்கள் சொல்கிறார்கள்.

    மின்சாதனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நுட்பமான பொருட்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. அமைதி நிலவ வேண்டிய படுக்கைகளில் ஆடியோ ஸ்பீக்கர்கள் அலறுகின்றன. உறக்கம் தழுவும் கண்களை பெரிய திரை தொலைக்காட்சி பெட்டிகள் துடிப்புடன் இயங்க வைக்கின்றன. அதிகப்படியான வெளிச்சம் மற்றும் சத்தம் ஆகியவை உறக்கத்தை தரும் அமைதியான மனநிலைக்கு எதிராக உள்ளன. முடிந்த வரையில், எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாடுகளை படுக்கையறையில் தவிர்க்கலாம்.

     தலையணைகள் மற்றும் மெத்தைகள் இலவம் பஞ்சால் செய்யப்பட்டிருப்பது உடலின் ரத்த ஓட்டம் மற்றும் சரியான இயக்கத்துக்கு துணை புரிவதாக கண்டறியப்பட்டுள்ளது. கட்டில்கள் முடிந்த வரையில் மரத்தால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். விரிப்புகள், உறைகள் ஆகியவற்றையும் அறையின் வண்ணங்களோடு பொருந்தும்படி தேர்ந்தெடுப்பது அவசியமானது. அதன்வாயிலாக கண்களும், மனமும் உறுத்தல் இல்லாத சமநிலைக்கு செல்ல ஏதுவாக இருக்கும். அந்த நிலை உறக்கத்துக்கு அவசியம்.

     மன அமைதியில் வண்ணங்களின் பங்கு இருப்பது பற்றி அறிவியல் ரீதியான ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு அவற்றை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதில் பல்வேறு முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. மன அமைதியை உண்டாக்கும் வண்ணங்களில் நீல வண்ணத்துக்கு நிகராக எதுவும் இல்லை என்பது பலருடைய அனுபவமாக உள்ளது. ஆண்களின் படுக்கையறைக்கு சரியாக இருக்கும் என்று அறியப்பட்ட ஒரு சில நிறங்களில் முதன்மையாக இருப்பது ஸ்கை புளு எனப்படும் இளநீல வண்ணம் ஆகும்.

     அறைகளில் இருக்கும் எல்லாவித பொருட்களோடும் பொருந்தக்கூடிய நிறங்களில் இது முதலிடத்தில் உள்ளது. மன அமைதி, மன நிறைவு ஆகியவைகளை இளம் பச்சை நிறம் தூண்டுவதாக இருக்கிறது. வயது முதிர்ந்தவர்கள் மற்றும் இளைய வயதினர் படுக்கையறைகளில் இந்த வண்ணத்தை அதிகமாக பயன்படுத்தலாம். பர்னிச்சர்களும் இளம் பச்சை நிறத்தில் இருக்கும் பட்சத்தில் அறை முழுவதும் குளிர்ச்சியான தோற்றத்துடன் இருக்கும். மனதின் அழுத்தத்தை குறைப்பதில் கத்திரிப்பூ மற்றும் அதன் சாயல் கொண்ட நிறங்கள் குறிப்பிட்ட பங்கு வகிக்கின்றன. முக்கியமாக தரை விரிப்புகளில் இதன் சாயல் கொண்ட நிறம் இருப்பது சிறப்பாக இருக்கும்.

    முக்கியமாக இரவில் ஒளிரும் மின்சார விளங்குகள் கத்திரிப்பூ கலந்த நீல வண்ணத்தில் இருக்கலாம். பெண்களுக்கான படுக்கையறைகளுக்கு உகந்ததாக இவ்வண்ணம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    • ஆடைகள் வாங்குவதற்காக அதிக பணத்தைச் செலவிடுகிறார்கள்.
    • பணத்தை மிச்சப்படுத்தும் வழிகளை தெரிந்துகொள்வோம்.

    ஆள் பாதி, ஆடை பாதி" என்ற பழமொழி ஆடையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சில தலைமுறைகளுக்கு முன்பு வரை, முக்கியமான பண்டிகைகளின்போது மட்டும் புத்தாடைகளை வாங்குவார்கள். ஆனால் தற்போது அவரவரின் விருப்பத்துக்கு ஏற்றவாறு எப்போது வேண்டுமானாலும் ஆடைகளை வாங்குகிறார்கள்.

    ஆன்லைன் தளங்களில் கொட்டிக் கிடக்கும் ஆடை வகைகள், பார்ப்பவர்கள் அனைவரையும் உடனே வாங்கிவிடத் தூண்டும். பலரும் ஆடைகள் வாங்குவதற்காக அதிக பணத்தைச் செலவிடுகிறார்கள். அதைத் தவிர்த்து. ஆடைகள் வாங்கும் போது பணத்தை மிச்சப்படுத்தும் வழிகளை இங்கே தெரிந்துகொள்வோம்.

    ஒருசிலர் குறிப்பிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது அணிவதற்காக மட்டுமே விலை உயர்ந்த ஆடைகளை வாங்கி இருப்பார்கள். அவற்றை மீண்டும் பயன்படுத்தாமல் அலமாரிகளில் போட்டு வைத்திருப்பார்கள். அத்தகைய ஆடைகளை மறுவிற்பனை செய்வதற்கு சில செயலிகள் இருக்கின்றன. அவற்றின் மூலம் நீங்கள் உபயோகப்படுத்தாத நல்ல நிலையில் இருக்கும் ஆடைகளை விற்பனை செய்யலாம். அந்த பணத்தைக்கொண்டு உங்களுக்கான புதிய ஆடைகள் வாங்கலாம்.

    ஆன்லைன் தளங்களிலும், கடைகளிலும் காட்சி படுத்தப்பட்டு இருக்கும் ஆடைகளால் ஈர்க்கப்பட்டு, அவை எல்லாவற்றையும் வாங்குவதைத் தவிர்க்கவும். உங்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆடைகளின் பட்டியலை முதலில் தயாரிக்கவும். அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆடைகளை வாங்கவும்.

    ஆடித்தள்ளுபடி மற்றும் வர்த்தக கணக்கு முடிக்கும் சமயங்களில் ஷாப்பிங் செய்வதன் மூலம் குறிப்பிட்ட தள்ளுபடிகளைப் பெற முடியும். அதன்மூலம் குறைந்த விலையில் தரமான ஆடைகளை வாங்கலாம்.

    குறிப்பிட்ட பருவ காலங்களில் சில விற்பனையாளர்கள் தள்ளுபடி விற்பனையை அறிவிப்பார்கள். அந்த நாட்களில் அவர்களிடம் ஆடைகளை வாங்குவதன் மூலமும் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

    மொத்த விலையில் துணிகள் விற்கும் கடைகளில், மற்ற இடங்களைவிட குறைந்த விலையில் ஆடைகளை வாங்க முடியும். கூப்பன்கள், லாயல்டி ரிவார்டு புள்ளிகள், கேஷ்பேக் சலுகைகள் அளிக்கும் நிறுவனங்கள் மூலம் ஆடைகள் வாங்கும்போது அதிக அளவு பணத்தை மிச்சப்படுத்தலாம்.

    உங்கள் பகுதிக்கு அருகே உள்ள சிறு சிறு கடைகளில் குறைந்த விலையில் தரமான துணிகளை விற்பனை செய்வார்கள். அத்தகைய கடைகளை ஆராய்ந்து ஆடைகளை வாங்குங்கள்.

    சில பிராண்டுகள் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் குறிப்பிட்ட சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவிப்பார்கள். அவற்றை தெரிந்துகொண்டு அதன்மூலம் குறைந்த விலையில் ஆடைகளை வாங்கலாம்.

    ஒரே ஆடையை வெவ்வேறு உடைகளுக்கு மாற்றி அணியக்கூடிய வகையில் ஆடைகளை வாங்கலாம். உதாரணத்துக்கு இரண்டு அல்லது மூன்று குர்திகளுக்கு பொருந்தக்கூடிய வகையில் ஒரு பேண்டை தேர்ந்தெடுத்து வாங்கலாம்.

    குறிப்பிட்ட விற்பனை நிறுவனங்கள், தாங்களே தயாரிக்கும் ஸ்டோர் பிராண்டுகளை விற்பனை செய்வார்கள். அத்தகைய ஆடைகள் விலை குறைவாகவும், தரமானதாகவும் இருக்கும். அவற்றை தேர்ந்தெடுப்பதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும்.

    • வயதானவர்கள் நலனில் சற்று அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.
    • வழுக்காத தரைத்தளம் பாத்ரூமில் அமைக்க வேண்டும்.

    இன்றைய நாகரிக காலத்தில் தனி வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் வயதானவர்கள் உடல் நலனில் சற்று அதிகமான கவனம் செலுத்த வேண்டும். வயதானவர்கள் இருக்கும் இல்லங்களில் எல்லாவித வசதிகளையும் அவர்களுக்கு ஏற்றதாக மாற்றி அமைப்பது சிரமமான விஷயம். இருந்தாலும் பாத்ரூம் உள்ளிட்ட சில இடங்களிலாவது அவர்களுக்கேற்ற மாற்றங்களை செய்து தருவது அவர்களது சுலபமான பழக்கத்துக்கு ஏற்றதாக இருக்கிறது.

    நகர்ப்புற வாழ்க்கை பல சவுகரியங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் தரக்கூடியதாக இருந்தாலும் ஒரு சில விஷயங்களில் கவனம் செலுத்துவது கடினமாகி விடுகிறது. அவற்றில் முக்கியமாக நமது தனிப்பட்ட ஒவ்வொருவருடைய நலன் பற்றியும் கவனம் செலுத்துவது ஒன்றாகும். முக்கியமாக பாத்ரூம்களில் வயதான பெரியவர்களுக்கென்று அமைத்துக்கொள்ள வேண்டிய மாற்றங்கள் பற்றி உள்கட்டமைப்பு நிபுணர்கள் தரும் டிப்ஸ்களை இங்கே கவனிக்கலாம்.

    * டாய்லெட் சீட் வழக்கமான உயரத்தைவிடவும் சற்றே அதிகமாக இருக்குமாறு செட்டிங் செய்துகொள்வது முக்கியம். அதற்காக விஷேசமான உயர்த்தப்பட்ட குளோசெட்கள் விற்பனைக்கு இருக்கின்றன.

    * டாய்லெட் சேப்டி ரயில் என்ற அமைப்பானது உட்காரக்கூடிய டாய்லெட் சீட்டின் இரண்டு புறமும் பொருத்தப்பட்ட குழாய்கள் ஆகும். அவற்றின் பிடித்துக்கொண்டு அமர்வதும், எழுவதும் வயதானவர்களுக்கு சுலபமாக இருக்கும்.

    * போல்டபிள் கம்மோட் சேர் என்ற அமைப்பை குளியலறையில் வைத்துக்கொள்ளலாம். அது தேவைப்பட்ட இடங்களில் நகர்த்தி வைத்து உபயோகிக்கக்கூடிய டாய்லெட் சீட் அமைப்பாகும். அதாவது நகர்த்தக்கூடிய டாய்லெட் இருக்கை என்று சொல்லலாம்.

    * வயதானவர்கள் எளிதாக குளிப்பதற்காக சிறிய அளவில் பிளாஸ்டிக் ஸ்டூல் ஒன்றையும், கால் வழுக்கிவிடாமல் இருப்பதற்காக கெட்டியான பிளாஸ்டிக் மிதியடி அல்லது புளோர் மேட் கீழே விரித்து வைத்திருக்கவேண்டும்.

    * பளீரென்று கண்களை கூசாமல் வெளிச்சம் வருவது போன்று அறையில் லைட் செட்டிங் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    * ஹேண்ட் கிராப் பார் எனப்படும் பிடித்துக் கொள்ளும் குழாய் அமைப்பை ஓரிரு இடங்களில் பொருத்த வேண்டும். அதை பிடித்துக்கொண்டு பாதுகாப்பாக அமர்வது அல்லது எழுந்திருப்பது வயதானவர்களுக்கு சுலபமானதாக இருக்கும்.

    * அவசர தேவைகளை வீட்டில் உள்ளோரிடம் தெரிவிக்க தண்ணீரால் பாதிக்காத வாட்டர்புரூப் இண்டர்காம் அல்லது கார்டுலெஸ் தொலைபேசி இணைப்பு ஒன்று குளியலறையில் இருக்கவேண்டும்.

    * மின்சார சாதனங்கள் அனைத்திற்கும் கிரவுண்டு பால்ட் சர்க்கியூட் இன்ட்ரப்டர் எனப்படும் மின்சார பாதுகாப்பு அமைப்பை இணைத்திருக்க வேண்டும். அந்த அமைப்பு, மின்சாரமானது கருவிகள் தவிர்த்து மனிதர்கள் மீதோ அல்லது மற்ற பொருள்களின் மீதோ படும்போது மின் இணைப்பை துண்டித்து விடும்.

    * ஈரப்பதம் காரணமாக வழுக்காத தரைத்தளம் பாத்ரூமில் அமைக்க வேண்டும். அதில் உள்ள புளோர் மேட்கள் இருபுறமும் ஒட்டக்கூடிய ஆன்டி ஸ்கிட் டேப்கள் கொண்டு ஒட்டப்படுவது பாதுகாப்பானது.

    • உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்.
    • நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள்.

    வாரத்தின் ஆறு நாட்களும் வேலையில் மூழ்கி சோர்ந்து போகும் நபரா நீங்கள்? அப்படியென்றால் கொஞ்சம் `ஓய்வு' எடுக்க பழகுங்கள். ஒரே வேலையில் ஈடுபட்டு வரும்போது, அந்த வேலை அப்படியே தடைபட்டு நின்று போக வாய்ப்புள்ளது. இது உங்கள் செயல்திறனை குறைப்பது மட்டுமின்றி, உங்களை அடுத்தகட்டத்துக்கு நகரவிடாமல் நீண்ட நாட்கள் அதே இடத்தில் முடக்கிவிடும். இதுபோன்ற பணிச்சூழலில் சிக்கியிருப்பவர்கள் அதில் இருந்து மீண்டுவர என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை பார்ப்போம்...

    சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள்

    தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். உங்கள் சைக்கிள் பயணங்களில், கவனம் சிதற வைக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் பயணத்தையும், நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதை செய்ய பழகுங்கள்.

    10 ஆயிரம் காலடி நடைபயணம்

    ஒரு நாளைக்கு நீங்கள் நடந்து செல்லும் தூரம் 10 ஆயிரம் காலடி (ஸ்டெப்ஸ்) என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ௧௦ ஆயிரம் ஸ்டெப்ஸ் என்பது 7.5 கிலோமீட்டர். அதற்காக ஒருவர் தினமும் 7.5 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும் என்பது இல்லை. உங்கள் வீட்டு மாடிக்கு ஏறுவது தொடங்கி, உங்கள் அலுவலகத்தில் காபி அருந்த கேண்டீனுக்கு செல்வது வரை அனைத்தையும் சேர்த்து இந்த அளவு நடந்தால் போதுமானதாக இருக்கும்.

    தினசரி ஒரு புகைப்படம் எடுங்கள்

    தினசரி உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அல்லது உங்களுக்கு பார்க்க அழகாக தோன்றும் ஒரு விஷயத்தை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். இதேபோல் 30 நாட்களும் புகைப்படம் எடுங்கள். உங்கள் மனநிலை முதல் நாளில் இருந்து தற்போது எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களை புதுமையாக சிந்திக்க வைக்க இந்த பழக்கம் மிகவும் உதவியாக இருக்கும். அது மிகப்பெரிய போட்டோகிராபியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. செல்போன் புகைப்படமே போதுமானது.

    தினமும் எழுதுங்கள்

    தினமும் எழுதுங்கள் என்று கூறியவுடன் உங்களுக்குள் ஒரு கேள்வி எழலாம். `நான் ஒரு கணினி பொறியாளர்... நான் எப்படி தினமும் எழுதுவது?' என்று. ஒரு நாளைக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை அரைப்பக்க அளவில் இருந்து எழுத துவங்குங்கள். 100-வது நாள், 50 பக்க அளவு கொண்ட குறுநாவல் உங்கள் பெயரில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதுமையான விஷயங்களுக்கு நீங்கள் மாறிய விதம் புரியும்.

    காதலிக்க பழகுங்கள்

    காதல் என்றவுடன் எதிர்பாலின ஈர்ப்பு என்ற அர்த்தம் இல்லை. உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். நீங்கள் செய்யும் சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலையை பற்றிய நினைவு இல்லாத உற்சாகமான விஷயங்களில் நாட்டம் செலுத்துங்கள்.

    நண்பர்களுடன் சமூக வலை தளங்களில் உரையாடாமல் நேரில் உரையாட பழகுங்கள். மனதுக்கு நெருக்கமான நபருடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள். இவற்றை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, நீங்கள் நினைத்த புதுமை நபராக உங்களை நீங்களே தயார்படுத்தி இருப்பீர்கள்.

    எதை செய்யக் கூடாது?

    வேலையை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.

    அலுவலக நேரம் தவிர அதிக நேரம் அலுவலகத்தில் இருக்காதீர்கள்.

    • கர்ப்பப்பை தசைகளில் வரக்கூடிய ஒரு வகை கட்டி.
    • ஹிஸ்ட்ரோஸ்கோப்பி எனப்படும் சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம்.

    ஃபைப்ராய்டு என்பது, கர்ப்பப்பை தசைகளில் வரக்கூடிய ஒரு வகை கட்டி. அந்த கட்டியானது எந்த இடத்தில் இருக்கிறது என்பதை வைத்துதான், அது கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்துமா, ஏற்படுத்தாதா என்று சொல்ல முடியும்.

    ஒருவேளை இந்த கட்டியானது, கர்ப்பப்பையின் உள்ளே உள்ள எண்டோமெட்ரியம் எனப்படும் சவ்வுப் பகுதியில் இருந்தால் கண்டிப்பாக குழந்தை பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும். ஏனென்றால் அந்த எண்டோமெட்ரியம் பகுதியில்தான் கருவானது பதியும்.

     கட்டி இருக்கும் பட்சத்தில் கரு அங்கே பதிவதிலேயே பிரச்சினை இருக்கும். இதுபோன்ற கட்டியை மருத்துவர்கள் `சப்மியூகோசல் ஃபைப்ராய்டு' என்று சொல்கிறார்கள். இது போன்ற கட்டியை அவசியம் நீக்கியாக வேண்டும். ஹிஸ்ட்ரோஸ்கோப்பி எனப்படும் சிகிச்சை மூலம் இதை நீக்கிவிடலாம்.

    அதுவே இந்த கட்டியானது கர்ப்பப்பையின் தசையில் இருந்தால் அதை டாக்டர்கள் `இன்ட்ராமியூரல் ஃபைப்ராய்டு' என்று சொல்கிறார்கள். இந்த கட்டி, கர்ப்பப்பை சவ்வில் இருந்து 2.8 செ.மீ தூரம் தள்ளி இருக்குமானால், அது கர்ப்பத்தை பாதிக்காது.

    இந்தநிலையில் கட்டி சிறியதாக இருந்தால் காத்திருந்து பார்க்கலாம். ஆனால், அந்த கட்டியானது 4 செ.மீ அளவுக்கு மேல் பெரிதாக இருக்கும் பட்சத்தில் அதை நீக்கிவிட்டு, பிறகு குழந்தை பெற்றுக்கொள்வதுதான் சரியானது.

    கர்ப்பப்பையின் வெளியே உள்ள கட்டியை `சப்சீரோசல் ஃபைப்ராய்டு' என்று சொல்கிறார்கள். பொதுவாக இந்த கட்டி எந்த பிரச்சினையையும் தராது. அதுவே அளவில் பெரிதாகி, கர்ப்பப்பையை அழுத்தினால் அந்த கட்டியையும் நீக்கியாக வேண்டும்.

    எனவே, ஃபைப்ராய்டு கட்டி எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொறுத்துதான் அது கர்ப்பத்தை பாதிக்குமா இல்லையா என்று டாக்டர்கள் சொல்வார்கள்.

    • அனைவரையும் ஈர்ப்பவை கார்ட்டூன் கதாபாத்திரங்கள்.
    • இளம் வயதினரையும் கவர்பவை கார்ட்டூன் நகைகள்.

    வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் ஈர்ப்பவை கார்ட்டூன் கதாபாத்திரங்கள். குழந்தைகளோடு, பெரியவர்களும் கார்ட்டூன் திரைப்படங்களை ரசித்து பார்ப்பார்கள். இத்தகைய கார்ட்டூன் கதாபாத்திரங்களை மையமாக வைத்து பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வரிசையில் குழந்தைகளையும், இளம் வயதினரையும் கவர்பவை கார்ட்டூன் நகைகள். தங்களுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரத்தின் வடிவில் நகை அணிவதை பலரும் விரும்புவார்கள்.

    தங்கம். வெள்ளி. பிளாட்டினம், இரும்பு, பிளாஸ்டிக் என பல வகையான மூலப்பொருட்களால் இந்த நகைகள் தயாரிக்கப்படுகின்றன. டிரெண்டியான மற்றும் மாடர்ன் ஆடைகளுக்கு அணியும் வகையில் வடிவமைக்கப்படுவது கார்ட்டுன் நகைகளின் தனிச்சிறப்பாகும். இளசுகளை எளிதில் ஈர்க்கும் சில கார்ட்டூள் நகைகள்

    ×