என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
இளநரையைத் தடுக்க சிம்பிள் டிப்ஸ்
Byமாலை மலர்22 Aug 2019 3:26 AM GMT (Updated: 22 Aug 2019 3:26 AM GMT)
இளம் வயதில் நரை முடி வருவதற்கான காரணங்களும், அதற்கான தீர்வுகளைப் பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
25 வயதானவர்களுக்கு நரைமுடி வருவதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்று, மரபணு தாக்கம் எனப் பெரும்பாலான தோல் நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களின் தாத்தா அல்லது அப்பாவுக்கு இளநரை தாக்கம் இருந்தால், உங்களுக்கும் அதன் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
நீண்ட நாள்களாக உடலில் இருக்கும் சளி மற்றும் மலச்சிக்கல், ரத்தசோகை, தைராய்டு சுரபியில் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால் இளநரை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. முறையற்ற உணவுப் பழக்கங்கள், உடலிலுள்ள ஊட்டச்சத்தின் அளவை மாற்றுகின்றன. இதை, தோல் மற்றும் முடிகளில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே கணிக்கலாம். வைட்டமின் B12, அயோடின், தாமிரம், இரும்புச்சத்து, புரதச்சத்து, அமீனோ அமிலங்கள் மற்றும் ஃபோலிக் அமிலங்கள் முதலியவை தேவையான அளவில் உடலில் இல்லையென்றால், நரை முடி வரும்.
அதிகப்படியான வெப்பம் மற்றும் ரசாயனங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட கூந்தல் பராமரிப்புப் பொருள்களை உபயோகிப்பதால், மீண்டும் மீட்டெடுக்க முடியாத அளவுக்குச் சேதமடைகிறது உச்சந்தலை. இளநரைக்கு, புகைப்பழக்கமும் மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று.
வெந்தயத்தில் இருக்கும் லெசித்தின் மற்றும் அத்தியாவசிய அமீனோ அமிலங்கள் இளநரையைக் கட்டுப்படுத்துகின்றன. 1/2 கப் தேங்காய் எண்ணெயைக் கொதிக்கவைத்து அதில் 1/4 கப் வெந்தயம் சேர்த்து 6-8 நிமிடம் கொதிக்கவிடவேண்டும். சூடு தணிந்து அரை வெப்பநிலைக்கு வந்ததும், வெந்தயத்தை தனியே வடிகட்டி எடுத்துவிட்டு எண்ணெயை மேலும் குளுமைப்படுத்தவேண்டும். இரவில் இந்த எண்ணெயால் மசாஜ் செய்து ஊறவைத்து காலையில் ஷாம்புகொண்டு கூந்தலை அலசலாம். வாரம் இருமுறை இப்படிச் செய்யலாம்.
தற்போது மார்க்கெட்டுகளில் அதிகம் காணப்படும் ஆப்பிள் சீடர் விநிகர்கொண்டும் இந்தப் பிரச்னையைச் சரிசெய்யலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் விநிகரோடு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கலவையை, தலையில் ஊற்றி அனைத்து இடங்களுக்கும் படரவிட்டு 20 நிமிடங்கள் வரை ஊறவைத்த பிறகு ஷாம்புகொண்டு அலசவேண்டும். வாரம் ஒருமுறை இதுபோன்று செய்துவந்தால், இளநரையைத் தடுக்கலாம்.
நீண்ட நாள்களாக உடலில் இருக்கும் சளி மற்றும் மலச்சிக்கல், ரத்தசோகை, தைராய்டு சுரபியில் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால் இளநரை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. முறையற்ற உணவுப் பழக்கங்கள், உடலிலுள்ள ஊட்டச்சத்தின் அளவை மாற்றுகின்றன. இதை, தோல் மற்றும் முடிகளில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே கணிக்கலாம். வைட்டமின் B12, அயோடின், தாமிரம், இரும்புச்சத்து, புரதச்சத்து, அமீனோ அமிலங்கள் மற்றும் ஃபோலிக் அமிலங்கள் முதலியவை தேவையான அளவில் உடலில் இல்லையென்றால், நரை முடி வரும்.
அதிகப்படியான வெப்பம் மற்றும் ரசாயனங்கள் அதிகம் சேர்க்கப்பட்ட கூந்தல் பராமரிப்புப் பொருள்களை உபயோகிப்பதால், மீண்டும் மீட்டெடுக்க முடியாத அளவுக்குச் சேதமடைகிறது உச்சந்தலை. இளநரைக்கு, புகைப்பழக்கமும் மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று.
வெந்தயத்தில் இருக்கும் லெசித்தின் மற்றும் அத்தியாவசிய அமீனோ அமிலங்கள் இளநரையைக் கட்டுப்படுத்துகின்றன. 1/2 கப் தேங்காய் எண்ணெயைக் கொதிக்கவைத்து அதில் 1/4 கப் வெந்தயம் சேர்த்து 6-8 நிமிடம் கொதிக்கவிடவேண்டும். சூடு தணிந்து அரை வெப்பநிலைக்கு வந்ததும், வெந்தயத்தை தனியே வடிகட்டி எடுத்துவிட்டு எண்ணெயை மேலும் குளுமைப்படுத்தவேண்டும். இரவில் இந்த எண்ணெயால் மசாஜ் செய்து ஊறவைத்து காலையில் ஷாம்புகொண்டு கூந்தலை அலசலாம். வாரம் இருமுறை இப்படிச் செய்யலாம்.
தற்போது மார்க்கெட்டுகளில் அதிகம் காணப்படும் ஆப்பிள் சீடர் விநிகர்கொண்டும் இந்தப் பிரச்னையைச் சரிசெய்யலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் விநிகரோடு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கலவையை, தலையில் ஊற்றி அனைத்து இடங்களுக்கும் படரவிட்டு 20 நிமிடங்கள் வரை ஊறவைத்த பிறகு ஷாம்புகொண்டு அலசவேண்டும். வாரம் ஒருமுறை இதுபோன்று செய்துவந்தால், இளநரையைத் தடுக்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X