என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
காரசாரமாக ஆந்திரா ஸ்டைல் இட்லி பொடி
Byமாலை மலர்26 May 2021 9:34 AM GMT (Updated: 26 May 2021 9:34 AM GMT)
நாவிற்கு சுவையை கொடுக்கும் இந்த இட்லி பொடியை சுடச்சுட இட்லியோடு நல்லெண்ணெய் ஊற்றி பரிமாறினால் அவ்வளவு அருமையாக இருக்கும். ஆந்திரா ஸ்பெஷல், ‘நல்ல கார பொடி’ ஒருவாட்டி இப்படி செஞ்சுதான் பாருங்களேன்
தேவையான பொருட்கள்:
வர மல்லி - 1/2 கப்,
உளுந்து - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 ஸ்பூன்,
வரமிளகாய் - 10,
கறிவேப்பிலை - 2 கொத்து,
பூண்டு - 5 பல்,
சிறிய நெல்லிக்காய் அளவு - புளி,
தேவையான அளவு உப்பு.
செய்முறை
சிலபேருக்கு வர மல்லி வாசம் பிடிக்காது. இப்படிப்பட்டவர்கள் 1/2 கப் உளுந்து, 1/4 கப் அளவு வரமல்லி என்று அளவுகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த பொடிக்கு, காரம் கொஞ்சம் தூக்கலாக தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து 1/2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து முதலில் வர மல்லியை போட்டு, வர மல்லி வாசம் வரும் வரை சிவக்க வேண்டும்.
அடுத்தபடியாக உளுந்தையும், கடலை பருப்பையும் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்க வேண்டும்.
மூன்றாவதாக சீரகத்தை மட்டும் தனியாக சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சீரகத்தை கருக விடாமல் வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மிளகாயையும் உப்பையும் ஒன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக கறிவேப்பிலையை மொறுமொறுவென வறுக்க வேண்டும்.
பூண்டு சூடாகும் வரை வறுக்கவேண்டும்.
புளியை சிறிய சிறிய துண்டுகளாக கிள்ளி போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் நன்றாக அரைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
புளியை மொத்தமாக ஒரு நிமிடம் வறுத்தால் கூட போதும்.
வறுத்த அனைத்து பொருட்களும் நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இப்போது சூப்பரான காரசாரமாக ஆந்திரா ஸ்டைல் இட்லி பொடி ரெடி.
வர மல்லி - 1/2 கப்,
உளுந்து - 1/4 கப்,
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - 1 ஸ்பூன்,
வரமிளகாய் - 10,
கறிவேப்பிலை - 2 கொத்து,
பூண்டு - 5 பல்,
சிறிய நெல்லிக்காய் அளவு - புளி,
தேவையான அளவு உப்பு.
செய்முறை
சிலபேருக்கு வர மல்லி வாசம் பிடிக்காது. இப்படிப்பட்டவர்கள் 1/2 கப் உளுந்து, 1/4 கப் அளவு வரமல்லி என்று அளவுகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த பொடிக்கு, காரம் கொஞ்சம் தூக்கலாக தான் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து 1/2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து முதலில் வர மல்லியை போட்டு, வர மல்லி வாசம் வரும் வரை சிவக்க வேண்டும்.
அடுத்தபடியாக உளுந்தையும், கடலை பருப்பையும் ஒன்றாக சேர்த்து பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்க வேண்டும்.
மூன்றாவதாக சீரகத்தை மட்டும் தனியாக சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து சீரகத்தை கருக விடாமல் வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
மிளகாயையும் உப்பையும் ஒன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக கறிவேப்பிலையை மொறுமொறுவென வறுக்க வேண்டும்.
பூண்டு சூடாகும் வரை வறுக்கவேண்டும்.
புளியை சிறிய சிறிய துண்டுகளாக கிள்ளி போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் நன்றாக அரைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
புளியை மொத்தமாக ஒரு நிமிடம் வறுத்தால் கூட போதும்.
வறுத்த அனைத்து பொருட்களும் நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
இப்போது சூப்பரான காரசாரமாக ஆந்திரா ஸ்டைல் இட்லி பொடி ரெடி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X