என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சூப்பரான ஸ்நாக்ஸ் போஹா பிங்கர்ஸ்
Byமாலை மலர்15 May 2021 9:35 AM GMT (Updated: 15 May 2021 9:35 AM GMT)
அவலை கொண்டு வெறும் உப்புமா மட்டுமே தயாரிக்க முடியும் என்ற நிலை மாறிவிட்டது, குடும்பத்தினர் மட்டுமல்லாமல் நண்பர்கள் விரும்பும் வகையில் பல்வேறு உணவு வகைளை அவல் மூலம் தயார் செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்
அவல் - 1 கப்
கடலை மாவு - அரை கப்
தக்காளி - 1
வெங்காயம் - 1
குடைமிளகாய் -
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
பெருங்காயம் - சிறிதளவு
ஓமம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
அவலை நன்றாக கழவி 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
தக்காளி, பூண்டு, ப.மிளகாயை மிக்சியில் போட்டு ஒன்றாக அரைத்து கொள்ளவும்.
ஊறவைத்த அவலுடன் அரைத்த விழுது, வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி, பெருங்காயம், ஓமம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்க வேண்டும். தண்ணீர் விடாமல் மாவை கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
கைகளில் சிறிது நல்லெண்ணெய் தடவிக்கொண்டு பிசைந்த மாவை நீள வாக்கில் விரல் போன்று உருட்டி கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிங்கர்ஸ்சை கவனமாக போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
அதை சாஸ் உடன் பரிமாறவும்.
அவல் - 1 கப்
கடலை மாவு - அரை கப்
தக்காளி - 1
வெங்காயம் - 1
குடைமிளகாய் -
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
பெருங்காயம் - சிறிதளவு
ஓமம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், கொத்தமல்லி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
அவலை நன்றாக கழவி 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
தக்காளி, பூண்டு, ப.மிளகாயை மிக்சியில் போட்டு ஒன்றாக அரைத்து கொள்ளவும்.
ஊறவைத்த அவலுடன் அரைத்த விழுது, வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி, பெருங்காயம், ஓமம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்க வேண்டும். தண்ணீர் விடாமல் மாவை கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
கைகளில் சிறிது நல்லெண்ணெய் தடவிக்கொண்டு பிசைந்த மாவை நீள வாக்கில் விரல் போன்று உருட்டி கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிங்கர்ஸ்சை கவனமாக போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
அதை சாஸ் உடன் பரிமாறவும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X