என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
ஹோட்டல் ஸ்டைல் பருப்பு பொடியை வீட்டிலேயே செய்யலாமா?
Byமாலை மலர்14 May 2021 10:01 AM GMT (Updated: 14 May 2021 10:01 AM GMT)
சுடச்சுட சாதத்தில் நெய் விட்டு பருப்பு பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டால்.. அடடே என்ன ருசி என்பீர்கள்.. .உங்களுக்கும் உணவகங்களில் தரும் பருப்பு பொடி பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இதனை செய்து பாருங்கள், ரொம்ப நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1/4 கப்
முழு உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
பாசி பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் துவரம் பருப்பை போட்டு நன்கு சிவக்க வறுத்து கொள்ளவும். அதனை ஒரு தட்டில் கொட்டிவிட்டு, அடுத்து அதை போல்
பாசி பருப்பை சிவக்க வறுத்து, துவரம் பருப்புடன் சேர்த்து கொள்ளவும்.
அடுத்து உளுந்தம் பருப்பையும் நன்கு சிவக்க வறுத்து மற்ற பருப்புடன் சேர்த்து கொள்ளவும்.
பின் காய்ந்த மிளகாயை நன்கு மொறுமொறுவென்று வறுத்து கொள்ளவும்.
அதனையும் பருப்புடன் சேர்த்து கொள்ளவும்,
கடைசியாக மிளகை லேசாக வறுத்து சேர்த்து கொள்ளவும்.
கூடவே பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் சிறிது நேரம் ஆற விடவும்.
பின் மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு நைசாக பொடித்து கொள்ளவும்.
சுவையான பருப்பு பொடி தயார்.
காற்று புகாத டப்பா அல்லது பாட்டிலில் போட்டு தேவையான போது பயன்படுத்தலாம்.
சூடான சாதத்துடன் பருப்புப் பொடி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு
துவரம் பருப்பு - 1/4 கப்
முழு உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
பாசி பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் துவரம் பருப்பை போட்டு நன்கு சிவக்க வறுத்து கொள்ளவும். அதனை ஒரு தட்டில் கொட்டிவிட்டு, அடுத்து அதை போல்
பாசி பருப்பை சிவக்க வறுத்து, துவரம் பருப்புடன் சேர்த்து கொள்ளவும்.
அடுத்து உளுந்தம் பருப்பையும் நன்கு சிவக்க வறுத்து மற்ற பருப்புடன் சேர்த்து கொள்ளவும்.
பின் காய்ந்த மிளகாயை நன்கு மொறுமொறுவென்று வறுத்து கொள்ளவும்.
அதனையும் பருப்புடன் சேர்த்து கொள்ளவும்,
கடைசியாக மிளகை லேசாக வறுத்து சேர்த்து கொள்ளவும்.
கூடவே பெருங்காயத்தூள் சேர்த்து அனைத்தையும் சிறிது நேரம் ஆற விடவும்.
பின் மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு நைசாக பொடித்து கொள்ளவும்.
சுவையான பருப்பு பொடி தயார்.
காற்று புகாத டப்பா அல்லது பாட்டிலில் போட்டு தேவையான போது பயன்படுத்தலாம்.
சூடான சாதத்துடன் பருப்புப் பொடி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம்.
குறிப்பு
ஒவ்வொரு பருப்பையும் தனித்தனியாக வறுத்து கொள்ளவும். நன்கு நைசாக பொடித்து கொள்ளவும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X