search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி
    X

    பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி

    பாகற்காய் சிப்ஸ் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய பாகற்காய்  - 250 கிராம்
    பெருங்காயத்தூள்  - ஒரு சிட்டிகை,
    நசுக்கிய பூண்டு  - ஒரு டேபிள்ஸ்பூன்,
    கடலை மாவு  - 5 டேபிள்ஸ்பூன்,
    அரிசி மாவு  - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகாய்த்தூள்  - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
    மஞ்சள்தூள்  - ஒரு சிட்டிகை,
    தயிர்  - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு  - தேவைக்கேற்ப,
    எண்ணெய்  - பொரிப்பதற்கு தேவையான அளவு.

    செய்முறை :

    * பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்து விடவும்.



    * வெட்டிய பாகற்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உப்பு, மஞ்சள்தூள், தயிர் சேர்த்துப் பிசிறி 20 நிமிடங்கள் ஊறவிடவும்.



    * பிறகு தண்ணீர் விட்டுக் கழுவி நீர்போக பாகற்காயை வடிகட்டவும். (இப்படிச் செய்வதால் கசப்பு தெரியாது).

    * வடிகட்டிய பாகற்காயுடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், நசுக்கிய பூண்டு சேர்த்து, சிறிதளவு நீர் சேர்த்துப் பிசிறவும்.



    * கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காயைப் போட்டு பொரித்து எடுக்கவும்.



    * எண்ணெயை வடியவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். இவ்வாறு செய்து 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×