என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பூண்டு வெங்காய பத்திய குழம்பு
Byமாலை மலர்29 Aug 2016 5:10 AM GMT (Updated: 29 Aug 2016 5:10 AM GMT)
பூண்டு, வெங்காயம் இருந்தால், அதனை வைத்து பத்திய குழம்பு செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இப்போது பூண்டு வெங்காய குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாம்பார் வெங்காயம் - 10
பூண்டு - 12 பல்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க...
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* வெங்காயத்தை பெரிய துண்டாக நறுக்கி வைக்கவும்.
* புளியை நீரில் ஊற வைத்து, கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் சாம்பார் பொடியை சேர்த்து, சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளி நீரை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
* எண்ணெய் பிரிந்த மேலே வரும் போது குழம்பை இறக்க வேண்டும்.
* இப்போது சுவையான பூண்டு வெங்காய குழம்பு ரெடி!!!
* இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
* சளி, ஜலதோஷம் தொல்லை இருப்பவர்கள் இதை செய்து சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சாம்பார் வெங்காயம் - 10
பூண்டு - 12 பல்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க...
நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* வெங்காயத்தை பெரிய துண்டாக நறுக்கி வைக்கவும்.
* புளியை நீரில் ஊற வைத்து, கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் சாம்பார் பொடியை சேர்த்து, சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளி நீரை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
* எண்ணெய் பிரிந்த மேலே வரும் போது குழம்பை இறக்க வேண்டும்.
* இப்போது சுவையான பூண்டு வெங்காய குழம்பு ரெடி!!!
* இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
* சளி, ஜலதோஷம் தொல்லை இருப்பவர்கள் இதை செய்து சாப்பிடலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X