என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பழங்கள்
Byமாலை மலர்23 Feb 2020 4:30 AM GMT (Updated: 19 Feb 2020 5:55 AM GMT)
பச்சை நிற காய்கறிகள் மட்டுமல்ல மற்ற வண்ணங்களை கொண்ட காய்கறிகள், பழங்களும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பச்சை நிற காய்கறிகள் மட்டுமல்ல மற்ற வண்ணங்களை கொண்ட காய்கறிகள், பழங்களும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றுள் மஞ்சள் நிற உணவு வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் கொண்டிருக்கின்றன. சரும ஜொலிப்புக்கும் வித்திடுகின்றன. அன்னாசி, மாம்பழம், வாழைப்பழம், முலாம் பழம், மஞ்சள் குடை மிளகாய், பூசணி, சோளம், எலுமிச்சை போன்றவைகள் அதில் குறிப்பிடத்தக்கவை. மஞ்சள் உணவுகளில் வைட்டமின் சி, பையோபிளவனாய்டு, கரோட்டினாய்டுகள் நிரம்பியுள்ளன. இவற்றுள் வைட்டமின் சி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
மாம்பழம், எலுமிச்சை பழங்களில் உள்ள வைட்டமின் சி சரும பளபளப்பை தரும். மேலும் எலும்பு, மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்தும். இளமையை தக்க வைக்கவும் உதவும். மஞ்சள் நிற உணவுகளுக்கு மனநிலையை மேம்படுத்தும் சக்தி இருக்கிறது. மன அழுத்தத்திற்கு ஆளாகும் சமயத்தில் மஞ்சள் பழம் அல்லது எலுமிச்சை பானம் அருந்தினால் விரைவாகவே மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுவதை உணரலாம்.
எலுமிச்சை பழம் நீர்ச்சத்து அதிகம் கொண்டது. அதற்கு சிறுநீரகத்தில் கற்கள் படிவதை தடுக்கும் தன்மை உண்டு. வளர்சிதை மாற்றத்திற்கும் வழி வகுக்கும். தினமும் ஏதாவதொரு மஞ்சள் நிற பழம் சாப்பிடுவது நல்லது. வாழைப்பழம் ஆண்டு முழுவதும் விளையக்கூடியது. அதனை சாப்பிடுவது வயிற்றுக்கு நலம் சேர்க்கும்.
அன்னாசி பழம் சாப்பிடுவது எடை இழப்புக்கு வழிவகுக்கும். செரிமான சக்தியை அதிகரிக்க செய்யும். பழங்களின் ராஜாவான மாம்பழத்தில் அதிக அளவு ஜியாசாந்தின் சத்து உள்ளது. அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் வலுசேர்க்கும். மாம்பழம் சாப்பிடுவது கண்களின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. அதற்கு கண்புரையை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது.
மாம்பழம், எலுமிச்சை பழங்களில் உள்ள வைட்டமின் சி சரும பளபளப்பை தரும். மேலும் எலும்பு, மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்தும். இளமையை தக்க வைக்கவும் உதவும். மஞ்சள் நிற உணவுகளுக்கு மனநிலையை மேம்படுத்தும் சக்தி இருக்கிறது. மன அழுத்தத்திற்கு ஆளாகும் சமயத்தில் மஞ்சள் பழம் அல்லது எலுமிச்சை பானம் அருந்தினால் விரைவாகவே மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுவதை உணரலாம்.
எலுமிச்சை பழம் நீர்ச்சத்து அதிகம் கொண்டது. அதற்கு சிறுநீரகத்தில் கற்கள் படிவதை தடுக்கும் தன்மை உண்டு. வளர்சிதை மாற்றத்திற்கும் வழி வகுக்கும். தினமும் ஏதாவதொரு மஞ்சள் நிற பழம் சாப்பிடுவது நல்லது. வாழைப்பழம் ஆண்டு முழுவதும் விளையக்கூடியது. அதனை சாப்பிடுவது வயிற்றுக்கு நலம் சேர்க்கும்.
அன்னாசி பழம் சாப்பிடுவது எடை இழப்புக்கு வழிவகுக்கும். செரிமான சக்தியை அதிகரிக்க செய்யும். பழங்களின் ராஜாவான மாம்பழத்தில் அதிக அளவு ஜியாசாந்தின் சத்து உள்ளது. அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் வலுசேர்க்கும். மாம்பழம் சாப்பிடுவது கண்களின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. அதற்கு கண்புரையை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X