என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
வாசனையும், பசி உணர்வும்...
Byமாலை மலர்6 Dec 2019 7:30 AM GMT (Updated: 6 Dec 2019 7:30 AM GMT)
பசி இல்லை என்று சொல்பவர்கள் ஒருபுறம். பசிக்கு ஒருவாய் உணவு இல்லை என்று பரிதவிப்பவர்கள் மறுபுறம். இருவருக்கும் பசி என்பது பிரச்சினை தரும் ஒன்று.
இந்த பசி உணர்வு எப்படி தோன்றுகிறது?
நமது ரத்தத்தில் சாதாரணமாக 80-ல் இருந்து 120 மில்லி கிராம் குளுக்கோஸ் இருக்க வேண்டும். இந்த குளுக்கோஸ் தான் உடலின் எல்லா பாகங்களுக்கும் சக்தியை கொடுக்கிறது. சாப்பிட்டு முடித்த கையோடு குளுக்கோஸ் அளவை எடுத்துப்பார்த்தால் எல்லோருக்கும் 140 மில்லி கிராம் வரை இருக்கும். அதற்கு மேலும் நமது சாப்பாட்டில் குளுக்கோஸ் இருந்தால் அதை தேவையில்லை என்று நமது உடல் சிறுநீரில் கலந்து கழிவாக வெளியேற்றிவிடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவு 80-90 என்ற அளவுக்கு குறைந்தால் பசி ஏற்படும்.
ரத்தத்தில் குளுக்கோஸ் குறைய குறைய வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாகும். காஸ்ட்ரின் என்ற ஒரு ஹார்மோன் தோன்றும். இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒட்டு மொத்தமாக வயிற்றில் ஏற்படுத்தும் பிரச்சினைதான் பசி. குளுக்கோஸ் குறைவான ரத்தம் மூளைக்கு போகும் போது மூளை எதிர்ப்பு தெரிவித்து ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மூளை உடலில் மிகச்சிறிய பகுதிதான். ஆனால் அதற்குத்தான் பெரும்பகுதி ரத்தம் தேவைப்படுகிறது.
ஆகாஞ் நல்ல வாசனை.. சாப்பிடணும் போல இருக்கேஞ்’ என்று பலர் பேசுவதைக் கேட்டு இருப்போம். ஏன்? நமக்கும் கூட அந்த உணர்வு ஏற்படும்தான்.
இதுபோல் சாப்பிடத் தூண்டும் நுகர்வுத்திறன் மருத்துவரீதியாகவும் பலன் அளிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தில் செயல்பட்டு வரும் யூனிவர்சிட்டி காலேஜ் ஆப் பிசினஸ் என்ற அமைப்பின் மார்க்கெட்டிங் புரொபசர் திபயான் பிஸ்வாஸ் மேற்பார்வையில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் உணவின் வாசனையை நுகர்வதால் அதனை உட்கொள்ளும் அளவு குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, கொழுப்புச்சத்து அதிகம் இருக்கிற உணவுப்பண்டங்களில் இருந்து வெளிப்படும் வாசனையை நுகர்ந்து பார்ப்பதால், பசியுணர்வு குறைவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.
இதற்கு ஐந்து புலன்களைச் சார்ந்து வெளிப்படும் மகிழ்ச்சி உணர்வை, மூளையால் துல்லியமாக வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், நமக்கு விருப்பமுள்ள உணவுகளால் ஏற்படும் பசியுணர்வைக் கட்டுப்படுத்துவதில், சுற்றுப்புறச் சூழலில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான நறுமணமும் முக்கிய காரணியாக செயல்படுவதும் இந்த ஆராய்ச்சி மூலமாக தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற ஆய்வுகளின் முடிவுகள் எத்தகையதாக இருந்தாலும், சாப்பிட வேண்டும் என்ற உணர்வு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுவதால், அளவுக்கு அதிகமான கலோரிகளை உட்கொள்வதில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதானே...!
நமது ரத்தத்தில் சாதாரணமாக 80-ல் இருந்து 120 மில்லி கிராம் குளுக்கோஸ் இருக்க வேண்டும். இந்த குளுக்கோஸ் தான் உடலின் எல்லா பாகங்களுக்கும் சக்தியை கொடுக்கிறது. சாப்பிட்டு முடித்த கையோடு குளுக்கோஸ் அளவை எடுத்துப்பார்த்தால் எல்லோருக்கும் 140 மில்லி கிராம் வரை இருக்கும். அதற்கு மேலும் நமது சாப்பாட்டில் குளுக்கோஸ் இருந்தால் அதை தேவையில்லை என்று நமது உடல் சிறுநீரில் கலந்து கழிவாக வெளியேற்றிவிடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவு 80-90 என்ற அளவுக்கு குறைந்தால் பசி ஏற்படும்.
ரத்தத்தில் குளுக்கோஸ் குறைய குறைய வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாகும். காஸ்ட்ரின் என்ற ஒரு ஹார்மோன் தோன்றும். இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒட்டு மொத்தமாக வயிற்றில் ஏற்படுத்தும் பிரச்சினைதான் பசி. குளுக்கோஸ் குறைவான ரத்தம் மூளைக்கு போகும் போது மூளை எதிர்ப்பு தெரிவித்து ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மூளை உடலில் மிகச்சிறிய பகுதிதான். ஆனால் அதற்குத்தான் பெரும்பகுதி ரத்தம் தேவைப்படுகிறது.
ஆகாஞ் நல்ல வாசனை.. சாப்பிடணும் போல இருக்கேஞ்’ என்று பலர் பேசுவதைக் கேட்டு இருப்போம். ஏன்? நமக்கும் கூட அந்த உணர்வு ஏற்படும்தான்.
இதுபோல் சாப்பிடத் தூண்டும் நுகர்வுத்திறன் மருத்துவரீதியாகவும் பலன் அளிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தில் செயல்பட்டு வரும் யூனிவர்சிட்டி காலேஜ் ஆப் பிசினஸ் என்ற அமைப்பின் மார்க்கெட்டிங் புரொபசர் திபயான் பிஸ்வாஸ் மேற்பார்வையில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் உணவின் வாசனையை நுகர்வதால் அதனை உட்கொள்ளும் அளவு குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக, கொழுப்புச்சத்து அதிகம் இருக்கிற உணவுப்பண்டங்களில் இருந்து வெளிப்படும் வாசனையை நுகர்ந்து பார்ப்பதால், பசியுணர்வு குறைவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.
இதற்கு ஐந்து புலன்களைச் சார்ந்து வெளிப்படும் மகிழ்ச்சி உணர்வை, மூளையால் துல்லியமாக வேறுபடுத்தி பார்க்க முடியாத நிலை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், நமக்கு விருப்பமுள்ள உணவுகளால் ஏற்படும் பசியுணர்வைக் கட்டுப்படுத்துவதில், சுற்றுப்புறச் சூழலில் இருந்து வெளிப்படும் ஒரு வகையான நறுமணமும் முக்கிய காரணியாக செயல்படுவதும் இந்த ஆராய்ச்சி மூலமாக தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற ஆய்வுகளின் முடிவுகள் எத்தகையதாக இருந்தாலும், சாப்பிட வேண்டும் என்ற உணர்வு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுவதால், அளவுக்கு அதிகமான கலோரிகளை உட்கொள்வதில் இருந்து நீங்கள் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதானே...!
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X