என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பார்வை குறைபாட்டுக்கு ‘நானோ டிராப்ஸ்’
Byமாலை மலர்10 Oct 2019 7:41 AM GMT (Updated: 10 Oct 2019 7:41 AM GMT)
சொட்டு மருந்தை கண்களில்விட்டால் போதும். ஆயுளுக்கும் கண்ணாடியும் தேவையில்லை, அறுவை சிகிச்சையும் தேவையில்லை என்கிறது, இஸ்ரேலில் அண்மையில் நடந்த ஓர் ஆய்வு.
பார்வைக் கோளாறு வந்துவிட்டதா? அவ்வளவுதான். ‘‘இனி காலம் முழுவதும் கண்ணாடியோடத்தான் அலையணுமா?’’ என்பது பலரின் ஆதங்கமாக இருக்கும். ‘ஸ்டைலுக்கு கூலிங்கிளாஸ்’ அணிவதை விரும்புகிறவர்கள்கூட, பார்வைக் கோளாறுக்காக கண்ணாடி அணிய விரும்புவது இல்லை. இதன் காரணமாகவே கண் அறுவை சிகிச்சை செய்துகொள்கிறவர்களும் உண்டு.
இந்த பிரச்சினைக்கு புதிதாக வழி பிறந்திருக்கிறது. ‘‘சொட்டு மருந்தை கண்களில்விட்டால் போதும். ஆயுளுக்கும் கண்ணாடியும் தேவையில்லை, அறுவை சிகிச்சையும் தேவையில்லை’’ என்கிறது, இஸ்ரேலில் அண்மையில் நடந்த ஓர் ஆய்வு. அதோடு, ‘‘மருத்துவரிடம்கூட போகத் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போன்தான் உங்கள் மருத்துவர்.
அதைக்கொண்டு பரிசோதித்து, நீங்களே பார்வைக் குறைபாட்டுக்கு தீர்வு கண்டுகொள்ளலாம்’’ என்று சொல்லி ஆச்சரியப்படவைக்கிறது, அந்த ஆய்வு. அது கிட்டப்பார்வையோ, தூரப்பார்வையோ, பார்வைக் குறைபாடுகளுக்கு மொபைல்ஆப் உதவியுடன் ‘‘நானோ டிராப்ஸ்’’ என்னும் சொட்டு மருந்தை விட்டு சரிசெய்யலாம் என்பதையும் கண்டறிந்து இருக்கிறார்கள். இஸ்ரேலின் ஷாரே ஸெடெக் மருத்துவ மையமும் பார்இலான் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில்தான் இந்த சொட்டு மருந்து கண்டறியப்பட்டு இருக்கிறது.
முதலில் உங்கள் மொபைல் போனில் இதற்கான பிரத்யேகமான ஆப்-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மொபைல் போனிலிருந்து வெளிப்படும் லேசர் ஒளியைக்கொண்டு சில நிமிடங்கள் கண்களின் கார்னியாவை ஸ்கேன் செய்ய வேண்டும். கடைசியாக, கண்ணில் இந்த டிராப்ஸை விட்டால் போதும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை கோளாறுகளை சரிசெய்துவிடும் என்கிறார்கள், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள். இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்த நவீன சொட்டு மருந்து, சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என்கிறார்கள்.
பார்வை குறைபாட்டில் கிட்டப்பார்வை, அல்லது தூரப்பார்வை ஏற்படுகிறது. இது தவிர ‘அஸ்டிக்மாடிஸம்’ பாதிப்பும் ஏற்படலாம். இந்த குறைபாடுகளுக்கு கண்ணாடிகளோ, கான்டாக்ட் லென்சுகளோ அணியலாம். சின்னதாக லேசர் சிகிச்சையும் செய்துகொள்ளலாம். இதுதான் இதுவரை நடைமுறையாக இருக்கிறது.
வருடத்துக்கு ஒருமுறை கண்களை பரிசோதித்து புதுக்கண்ணாடி மாற்றிக்கொண்டே இருக்க ஆகும் செலவைவிட, ஒரு முறை செய்யும் லேசர் சிகிச்சைக்கு ஆகும் செலவு குறைவு. அதனால் பெரும்பாலானோர் லேசர் சிகிச்சையையும் தேர்ந்தெடுக்கிறார்கள். புதிய கண்டுபிடிப்பான ‘நானோ டிராப்ஸ்’ கிகிச்சையில், சொட்டு மருந்து மட்டுமே போதும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இது சாத்தியமானால், கண் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாக அமையும். அதே நேரத்தில், எவ்வளவு டிராப்ஸ் விட வேண்டும், சொட்டுகள் விடுவது கண்களுக்கேற்ப மாறுபடுமா, பக்க விளைவுகள் உண்டா, இது எத்தனை நாளைக்குப் பயன்தரும், எந்த நிலை வரை பாதிப்பு உள்ளவர்களுக்கு அது பலன் அளிக்கும் என்பதெல்லாம் தெளிவாகச் சொல்லப்படவில்லை.
அதேபோல ‘‘மருத்துவரின் ஆலோசனையில்லாமல், இப்படி தாங்களாகவே சிகிச்சை செய்துகொள்வது சுயமருத்துவத்துக்கு ஒப்பானது. இது குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் நிறைவடையவில்லை. நடைபெற்று வருகிறது. முடிந்த பின்னர்தான் சரியான ஒரு முடிவுக்கு வர முடியும்’’ எனவும் மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.
இந்த பிரச்சினைக்கு புதிதாக வழி பிறந்திருக்கிறது. ‘‘சொட்டு மருந்தை கண்களில்விட்டால் போதும். ஆயுளுக்கும் கண்ணாடியும் தேவையில்லை, அறுவை சிகிச்சையும் தேவையில்லை’’ என்கிறது, இஸ்ரேலில் அண்மையில் நடந்த ஓர் ஆய்வு. அதோடு, ‘‘மருத்துவரிடம்கூட போகத் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போன்தான் உங்கள் மருத்துவர்.
அதைக்கொண்டு பரிசோதித்து, நீங்களே பார்வைக் குறைபாட்டுக்கு தீர்வு கண்டுகொள்ளலாம்’’ என்று சொல்லி ஆச்சரியப்படவைக்கிறது, அந்த ஆய்வு. அது கிட்டப்பார்வையோ, தூரப்பார்வையோ, பார்வைக் குறைபாடுகளுக்கு மொபைல்ஆப் உதவியுடன் ‘‘நானோ டிராப்ஸ்’’ என்னும் சொட்டு மருந்தை விட்டு சரிசெய்யலாம் என்பதையும் கண்டறிந்து இருக்கிறார்கள். இஸ்ரேலின் ஷாரே ஸெடெக் மருத்துவ மையமும் பார்இலான் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில்தான் இந்த சொட்டு மருந்து கண்டறியப்பட்டு இருக்கிறது.
முதலில் உங்கள் மொபைல் போனில் இதற்கான பிரத்யேகமான ஆப்-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மொபைல் போனிலிருந்து வெளிப்படும் லேசர் ஒளியைக்கொண்டு சில நிமிடங்கள் கண்களின் கார்னியாவை ஸ்கேன் செய்ய வேண்டும். கடைசியாக, கண்ணில் இந்த டிராப்ஸை விட்டால் போதும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை கோளாறுகளை சரிசெய்துவிடும் என்கிறார்கள், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள். இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்த நவீன சொட்டு மருந்து, சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என்கிறார்கள்.
பார்வை குறைபாட்டில் கிட்டப்பார்வை, அல்லது தூரப்பார்வை ஏற்படுகிறது. இது தவிர ‘அஸ்டிக்மாடிஸம்’ பாதிப்பும் ஏற்படலாம். இந்த குறைபாடுகளுக்கு கண்ணாடிகளோ, கான்டாக்ட் லென்சுகளோ அணியலாம். சின்னதாக லேசர் சிகிச்சையும் செய்துகொள்ளலாம். இதுதான் இதுவரை நடைமுறையாக இருக்கிறது.
வருடத்துக்கு ஒருமுறை கண்களை பரிசோதித்து புதுக்கண்ணாடி மாற்றிக்கொண்டே இருக்க ஆகும் செலவைவிட, ஒரு முறை செய்யும் லேசர் சிகிச்சைக்கு ஆகும் செலவு குறைவு. அதனால் பெரும்பாலானோர் லேசர் சிகிச்சையையும் தேர்ந்தெடுக்கிறார்கள். புதிய கண்டுபிடிப்பான ‘நானோ டிராப்ஸ்’ கிகிச்சையில், சொட்டு மருந்து மட்டுமே போதும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இது சாத்தியமானால், கண் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதமாக அமையும். அதே நேரத்தில், எவ்வளவு டிராப்ஸ் விட வேண்டும், சொட்டுகள் விடுவது கண்களுக்கேற்ப மாறுபடுமா, பக்க விளைவுகள் உண்டா, இது எத்தனை நாளைக்குப் பயன்தரும், எந்த நிலை வரை பாதிப்பு உள்ளவர்களுக்கு அது பலன் அளிக்கும் என்பதெல்லாம் தெளிவாகச் சொல்லப்படவில்லை.
அதேபோல ‘‘மருத்துவரின் ஆலோசனையில்லாமல், இப்படி தாங்களாகவே சிகிச்சை செய்துகொள்வது சுயமருத்துவத்துக்கு ஒப்பானது. இது குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் நிறைவடையவில்லை. நடைபெற்று வருகிறது. முடிந்த பின்னர்தான் சரியான ஒரு முடிவுக்கு வர முடியும்’’ எனவும் மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X