search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பற்களை பாதுகாப்பது எப்படி?
    X
    பற்களை பாதுகாப்பது எப்படி?

    பற்களை பாதுகாப்பது எப்படி?

    பற்கள் ஆடுவதற்கு முதல் காரணம் பற்களை சுற்றி உள்ள எலும்பு பலமின்றி இருப்பது. இப்போது பற்கள் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    சிலர் சிரிக்கும் போது ஈறுகள் அதிகமாக தெரியும். பற்களின் பாதிக்கு மேல் ஈறுகள் வளர்ந்து இருக்கும். பல் தேய்க்கும் போது ஈறுகளில் ரத்தம் கசிவது, சில சமயம் வாய் துர்நாற்றம் ஏற்படுவது போன்ற பல காரணங்களால் ஈறுகள் அதிகமாக வளர்கின்றன. அதை சுத்தம் செய்வது கடினம். இதனால் ஈறுகளில் வீக்கம், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.

    வாய் துர்நாற்றத்திற்கு இது முக்கியமான காரணம். இதனை நவீன சிகிச்சை மூலம் சரி செய்யலாம். இந்த சிகிச்சை முறையில் லேசர் கருவி மூலம் ஈறுகளை சரியான அளவிற்கும், வடிவத்திற்கும் கொண்டுவர முடியும். இந்த சிகிச்சைக்கு ஊசியோ அறுவை சிகிச்சையோ தேவை இல்லை. சற்றும் வலி இருக்காது. இந்த சிகிச்சை முறையால் உங்கள் புன்னகை அழகாக மாறுவதோடு ஈறுகள் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    கழற்றி மாட்டும் பல் செட்கள் முதலில் நன்றாக இருந்தாலும் அவை தாடை எலும்புகள் தேய்வதை தவிர்ப்பதில்லை. பல் இல்லாத இடங்களில் எலும்பு தேய்ந்து நாளடைவில் பல் செட் போடுவதும் கடினமாகிவிடும். இதை தவிர்க்க ‘டென்டல் இம்ப்ளான்ட்’ வைப்பதே சிறந்த வழி. இதன் மூலம் இயற்கை பற்களை போலவே பற்களை பெறலாம். ‘டென்டல் இம்ப்ளான்ட்’ என்பது டைட்டானியம் என்னும் உலோகத்தால் ஆனது. இதனை பல்லின் வேர் இருந்த இடத்தில் வைத்து விட்டு அதன் மீது பற்களை பொருத்தி விடலாம். பல் எடுத்தவுடன் அதே இடத்தில் இம்ப்ளான்ட்களை உடனடியாக வைக்கலாம்.

    சில நேரங்களில் பற்களின் சொத்தை காரணமாக சீழ் இருந்தால் பல்லை எடுத்துவிட்டு, ஒரு மாத காலம் வரை பொறுத்து இம்ப்ளான்ட் வைக்க வேண்டும். பல் எடுத்து ஒரு வருடத்திற்குள் இம்ப்ளான்ட் வைப்பது நல்லது. இந்த முறையில் பல் கட்டும்போது அருகில் இருக்கும் பற்களை கரைத்து அதனோடு சேர்த்து பல் கட்டத் தேவையில்லை. பல் கட்டுவதற்காக சொத்தை இல்லாத பற்களை கரைப்பது தவறு. இம்ப்ளான்ட் மூலம் பொருத்தப்படும் பற்கள் நீண்ட காலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

    பற்கள் ஆடுவதற்கு முதல் காரணம் பற்களை சுற்றி உள்ள எலும்பு பலமின்றி இருப்பது. பற்களில் ஏற்படும் ஈறு நோய் நாளடைவில் அதனை சுற்றி உள்ள எலும்பிலும் பரவி விடும். இந்த கிருமிகளினால் பற்களை சுற்றி உள்ள எலும்பு தேய்ந்து பற்களின் பிடிமானம் குறைந்து ஆட ஆரம்பிக்கும். ஆடும் பற்களை எல்லாம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    பற்கள் ஆடுவதற்கான சரியான காரணத்தை கண்டுபிடித்து சரிசெய்துவிடலாம். ஈறுகளை சுத்தம் செய்வது முதல் கட்டம். பின்னர் ஈறுகளின் அடியில் சென்று எலும்பின் மேல் உள்ள கிருமிகளை நீக்கி விட வேண்டும். பின்னர் அந்த இடத்தில் ஈறுகளின் அடியில் மருந்து வைத்து கட்டிவிட வேண்டும். பின்னர் ஈறுகள் ஆறும் வரை கண்காணிக்க வேண்டும். இதன்மூலம் பற்களை சுற்றி உள்ள எலும்பு பலப்பட்டு ஈறுகளில் உள்ள கிருமிகள் நீங்கி பற்கள் ஆடுவது குறையும். 
    Next Story
    ×