
கரு முட்டை, கர்ப்பப்பை சிறியதாக இருக்கும் பெண்களுக்கு சில ஹார்மோன் ஊசிகள், மாத்திரை மூலம் கருத்தரிக்க வைக்கலாம். சினைப்பை வளர்ச்சி இல்லாத பெண்கள் கரு முட்டையை தானமாக பெற்று தாய்மை அடையலாம்.
ஒரு முறை கூட மாதவிடாய் ஆகாத பருவம் ஆகாத பெண்களும் கருமுட்டை தானம் பெற்று, கணவரின் விந்தணுவை சேர்த்து கருவாக்கி, கருப்பையில் செலுத்தி தாய்மை அடையச் செய்யலாம். கரு முட்டையின் தரம் குறைவாக இருக்கும் பெண்களுக்கும் சினை முட்டைகள், அவர்களின் ரத்த தட்டணுக்களை எடுத்து கருப்பைக்குள் செலுத்தி கருமுட்டையின் தரத்தை கூட்டலாம்.
25-30 வயது உள்ள பெண்களுக்கு புதிதாக வந்துள்ள மருந்தினை 6 மாதம் கொடுத்து நார் திசுக்கட்டிகளை கரைத்து குழந்தைப் பேறு அடையச் செய்யலாம். நார் திசுக் கட்டிகள் பெரியதாக உள்ள பெண்களுக்கு மருந்து கொடுத்து கட்டியின் அளவை குறைக்கலாம். இதற்கு பின் மையோ மெக்டமி (Myomectomy) என்ற அறுவை சிகிச்சையை செய்து மீதமுள்ள கட்டியை அகற்றி விடலாம்.
மதுரை கருத்தரித்தல் மையம் பொன்னி மருத்துவமனை,
டாக்டர் யாழினி செல்வராஜ்
நாராயணபுரம், மதுரை.
செல்: 94433 68627