என் மலர்

    தர்மபுரி - Page 2

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பதில் அளிக்காததால் அருகில் இருந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவன்மார்கள் கேள்வி கேட்ட பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
    • ஆபாசமாக பேசியதால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாலக்கோடு, 

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட 32 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம்நடைப்பெற்றது.

    நேற்று காட்டம்பட்டி, கெண்டேனஹள்ளி ஊராட்சி களில் நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் வரவு செலவு கணக்கு, குடிநீர் பிரச்சனை, சாக்கடை கால்வாய்,தெரு விளக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பெண் தலைவர்கள் உரிய பதில் அளிக்காததால் அருகில் இருந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவன்மார்கள் கேள்வி கேட்ட பொதுமக்களை தகாத வார்த்தைகளாலும், ஆபாசமாக பேசியதால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாலக்கோடு ஒன்றியத்தில் பெண்கள் தலைவியாக உள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களிலும் கணவர்களின் தலையீடு அதிகரித்து வருகிறது. இதனை தமிழகஅரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெயிலில் கரும்பு காய்ந்து எடை குறைந்து விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படுகின்றன.
    • லாரிக்கு வழங்கும் நேரபடி சமமாக டிராக்டருக்கும் வழங்க வேண்டும்.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கூட்டுறவு சக்கரை ஆலை கடத்த மூன்று மாதங்களாக இந்த ஆண்டுக்கான அரவைப்பணி துவக்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த விவசாயிகள் அரவைக்காக கரும்பை லாரி மற்றும் டிராக்டர் மாட்டு வண்டி உள்ளிட்ட வாகனங்களில் எடுத்து வருகின்றனர்.

    லாரிகளில் வரும் கரும்புக்கு அரவை நேரம் 24 மணி நேரமும் டிராக்டரில் வரும் கரும்புக்கு அரவை நேரம் 50 லிருந்து 60 மணி நேரமும் இருப்பதால் வெயிலில் கரும்பு காய்ந்து எடை குறைந்து விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படுகின்றன.

    லாரிக்கு வழங்கும் நேரபடி சமமாக டிராக்டருக்கும் வழங்க வேண்டும். வாகனங்களுக்கு டோக்கன் வழங்குவதை ஒழுங்கு படுத்த வேண்டும் எனக்கூறி டிராக்டரில் கரும்பு பாரம் ஏற்றி வந்த விவசாயி நூதன முறையில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆன்லைனில் பார்த்த விளம்பரம் ஒன்றினை நம்பி ஒரு லட்ச ரூபாய் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ம்தேதி பெங்களூரிலிருந்து மலேசியாவிற்கு சென்றார்.
    • 15 நாட்கள் மட்டுமே வேலை பார்த்த நிலையில் பாஸ்போட், விசாவை பறித்து வைத்துக்கொண்டு உனக்கு சரியாக வேலை தெரியவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள ஏ. சப்பாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துளசியம்மாள் (வயது65) என்பவர் மலேசியாவில் உள்ள மகனை மீட்டு தரக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் ஏ. சப்பாணிப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது மாதேஷ் (36) என்பவருக்கு திருமணமாகி திவ்யா (29) என்கிற மனைவியும், ஸ்ரீநிவாஸ் (7) என்ற குழந்தையும் இருக்கின்றனர். எனது மகன் மெக்கானிக்கல் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இதனால் வெளிநாட்டில் வேலை செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்கிற நோக்கத்தில் மலேசியாவுக்கு சென்றார். அங்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு தற்போது அவர் மலேசியாவில் தவித்து வருகிறார்.

    பெங்களூருவில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்த மாதேஸ், ஆன்லைனில் பார்த்த விளம்பரம் ஒன்றினை நம்பி ஒரு லட்ச ரூபாய் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ம்தேதி பெங்களூரிலிருந்து மலேசியாவிற்கு சென்றார்.

    15 நாட்கள் மட்டுமே வேலை பார்த்த நிலையில் பாஸ்போட், விசா உள்ளிட்டவைகளை பறித்து வைத்துக்கொண்டு உனக்கு சரியாக வேலை தெரியவில்லை.

    அதனால் 30 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் தரமுடியும். ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும் என வேலைக்கு அழைத்து சென்றவர்கள் துன்புறுத்தியுள்ளார்.

    இதனால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் மலேசியாவிலுள்ள இந்திய தூதரகத்தில் இருந்து வருவதாக வாட்ஸ்அப் வழியாக எனது மகன் மாதேஸ் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். இதனால் எனது மகனை மீட்டு தருமாறு கேட்டுகொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெருநாய்கள் கடித்த நிலையில் ஆறு செம்மறி ஆடுகள் இறந்து இருந்தன.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் திம்மராஜ் (வயது46) விவசாயி. இவர் விவசாய நிலங்களில் ஆடு வளர்த்து வந்துள்ளார். இரவு நேரங்களில் ஆடுகளை வீட்டின் முன்பு பட்டியில் அடைத்து விட்டு இரவு தூங்கச் சென்று இருக்கிறார்.

    இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் தெருநாய்கள் ஆடுகளைக் கடித்ததில் அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக எழுந்து வந்த திம்மராஜ் தெருநாய்கள் கடித்த நிலையில் ஆறு செம்மறி ஆடுகள் இறந்து இருந்தன.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திம்மராஜ் பஞ்சப்பள்ளி போலீசில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாதாந்திர சீட்டுத்தொகையாக பெற்று சீட்டு முதிர்வுக்கு பின்னும் தான் உறுதி அளித்தது போல் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது.
    • வலசையூரில் பதுங்கி இருந்த கோபாலை கைது செய்தனர். கைதான அவரை தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பப்பிரெட்டியூர் அருகே காட்டுவளவு கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவர் கடந்த 2000-ம் ஆண்டு வருடம் முதல் 2014 முடிய 4 வருடம் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

    அதில் நல்லம்பள்ளி அருகே உள்ள லளிகம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மற்றும் பொன்னுசாமி ஆகிய இருவரும் கோபால் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி ரூபாய் 5 லட்சம் 3 லட்சம் மற்றும் ரூ.1 லட்சத்திற்க்கான ஏலச்சீட்டு ஆகியவற்றில் சேர்ந்து மாதம் மாதம் சீட்டு பணம் கட்டி வந்தனர். மொத்தம் 2 பேரும் சேர்ந்து ரூ.9,45,000-கட்டியுள்ளனர்.

    இதற்காக, ரசீதை கோபால் கையெழுத்து போட்டு எழுதி கொடுத்துள்ளதாகவும், ஏல சீட்டு முதிர்வுக்கு பின்னர் பணம் தருவதாக உறுதி அளித்தார். ஆனால் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார். பின்னர் திடீரென்று கோபால் வீட்டை காலி செய்து தலைமறைவாகி விட்டார்.

    இது குறித்து அவர்கள் இருவரும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.

    விசாரணைக்காக இந்த வழக்கு சேலம் பொருளாதார குற்றப்பிரிவிலிருந்து தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    விசாரணையில் எதிரி கோபால் இதுவரை 13 நபர்களிடமிருந்து ரூ.66,65,000- பணத்தை மாதாந்திர சீட்டுத்தொகையாக பெற்று சீட்டு முதிர்வுக்கு பின்னும் தான் உறுதி அளித்தது போல் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது.

    இந்த நிலையில் தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையிலான குழுவினர் நேற்று சேலம் மாவட்டம், வீராணம் அடுத்த வலசையூரில் பதுங்கி இருந்த கோபாலை கைது செய்தனர். கைதான அவரை தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
    • வருவாய்த் துறையின் அனுமதி பெற்று செங்கல் சூளை நடத்துவதற்கு விரைந்து அனுமதி கடிதம் பெற வேண்டும்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பொம்மிடி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, மஞ்சவாடி, வே.முத்தம்பட்டி, போன்ற பகுதிகளில் மலைப்பகுதிகள் குன்றுகள் அதிக அளவில் இருப்பதால் செங்கல் தயாரிப்பதற்கான செம்மன் தரமான முறையில் கிடைத்ததால், தினம் தினம் செங்கல் சூளைகள் அதிக அளவில் செயல்படுத்த தொடங்கியது.

    இந்த செங்கல் சூலைகள் கிராம நிர்வாக அதிகாரி, தாசில்தார், கனிமவளத்துறை போன்றவர்களின் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக நடைபெற்று வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தது.

    இதனையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 96 சூளைகளுக்கு மேல் செயல்படுவதாகவும், 3 சூளைகள் மட்டுமே அரசியல் அனுமதி பெற்று நடைபெற்று வருவதும் ஆய்வில் தெரியவருகிறது.

    இந்த சட்டவிரோத நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் சுப்பிரமணி தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர்கள் கமருதீன், சேரன், பாப்பிரெட்டிப்பட்டி காவல் ஆய்வாளர் லதா, ஏ. பள்ளிப்பட்டி , கோபிநாதம்பட்டி, மொரப்பூர் காவல் நிலைய ஆய்வாளர்கள், பொ,மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, தென்கரைக்கோட்டை வருவாய் ஆய்வாளர்கள், வருவாய் துறையை சேர்ந்த 45 கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது, செங்கல் சூளை உரிமையாளர்கள், கனிமவளத்துறை, வருவாய்த் துறையின் அனுமதி பெற்று செங்கல் சூளை நடத்துவதற்கு விரைந்து அனுமதி கடிதம் பெற வேண்டும். அதற்கு கால அவகாசம் தருவது, மீறியும் செயல்படும் செங்கல் சூளைகள் மீது கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
    • சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் மாசுக்கட்டுப்பாடு ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள பி.துரிஞ்சிப்பட்டி கிராமம். இங்கு உள்ள தருமபுரி சேலம் நெடுஞ்சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் தெரு, மசூதி தெரு, போயர் காலனி போன்ற பகுதிகளில் உள்ள 800-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகளின் வீடுகளில் உள்ள சாக்கடை கால்வாய் நீர் தாழ்வான பகுதியில் உள்ள துரிஞ்சிப்பட்டி பேருந்து நிறுத்தம் , அரசு துவக்கப் பள்ளி அருகே நெடுஞ்சாலையில் குளம் போல தேங்கி நிற்கிறது.

    இதனால் துர்நாற்றம் வீசுவதால் பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில்:-

    கடந்த ஒரு ஆண்டுகளாக இந்த சாக்கடை மழை பெய்யும் பொழுதும், சாதாரண நேரத்திலும் சாலையில் தேங்கி நிற்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டருக்கும், நெடுஞ்சாலை துறையினர், ஊராட்சி மன்றம் போன்ற இடங்களில் பலமுறை முறையிட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் பள்ளி குழந்தைகள் துர்நாற்றத்தோடு மூக்கை அடைத்தபடி பள்ளிக்குச் செல்லும் நிலை நீடிக்கிறது. ஏற்கனவே தொற்றுநோய் ஊர் முழுவதும் அதிக அளவில் பரவி வரும் நிலையில் இந்த சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் மாசுக்கட்டுப்பாடு ஏற்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

    எனவே பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டத் துவங்கி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலையில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரை உடனடியாக வடிகால், தரைப்பாலம் அமைத்து கொடுத்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லாரிகளில் கொண்டுவரப்படும் வைக்கோல் கட்டுகள் ஒரு கட்டு 230 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
    • இவ்வளவு விலை கொடுத்து கால்நடை வளர்ப்போர் வாங்கி வைத்தாலும் அவை உடனடியாக தீர்ந்து விடுகிறது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அனல் பறந்த வெப்பம் மற்றும் அனல் காற்று வீசி வருகிறது.

    தொடர் வெப்பம் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் அதிவேகமாக குறைந்துவிட்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைய தொடங்கியவுடன் மற்றொருபுறம் கால்நடை வளர்ப்போருக்கு மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கால்நடை வளர்ப்போர் கால்நடை களுக்கு தேவையான தீவனப் புற்கள் வைக்கோல் உள்ளிட்டவற்றை அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததின் அதன் காரணமாக தண்ணீர் இல்லாததால் கால்நடை களுக்கு தேவையான தீவன தட்டுப்பாடு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தற்பொழுது வெளி மாவட்டங்களில் இருந்து தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் லாரிகளில் வைக்கோல் கட்டுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    வைக்கோல் கட்டுகள் தேவைக்கு அதிகமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டாலும் அதிக அளவு விலை காரணமாக அவற்றின் விலை கால்நடை வளர்போருக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

    லாரிகளில் கொண்டுவரப்படும் வைக்கோல் கட்டுகள் ஒரு கட்டு 230 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு விலை கொடுத்து கால்நடை வளர்ப்போர் வாங்கி வைத்தாலும் அவை உடனடியாக தீர்ந்து விடுகிறது.

    கால்நடைகள் மூலம் பால் விற்பனை செய்பவர்கள் அவற்றுக்கு வைக்கோல் வாங்கி போடும் செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ளதால் தற்போதைய சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    ஒருபுறம் கோடை காலத்துக்கு முன்பு துவங்கிய அதிக அளவிலான அனல் காற்றுடன் கூடிய வெப்பம் மறுபுறம் தீவனம் பற்றாக்குறை இவற்றால் நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் மிகுந்த துயரத்துக்குள்ளா கியுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 20 வகையான 300 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கோவிலூர் ஊராட்சி சென்றாயன அள்ளி ஏரிகரை பகுதியில் நடப்படுகிறது.
    • மூன்று ஆண்டுகளில் இவ்விடம் முழுவதும் பறவைகளின் வாழ்விடமாக மாற்றப்படும்.

    தொப்பூர்,

    உலகம் முழுவதும் காடுகள் மற்றும் மரங்களின் அளவு குறைந்து கொண்டே வருவதால் கோடை காலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் காடுகளில் உள்ள வனவிலங்குகள் முதல் பறவைகள் வரை அனைத்தும் தங்களுக்கான வாழ்விடம் தண்ணீர் உணவு உள்ளிட்டவற்றை தேடும் அவலம் நீடித்து வருகிறது.

    அவற்றை நிவர்த்தி செய்யும் விதமாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் முதல் சமூக தன்னார்வல அமைப்புக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை மரங்களை வளர்த்தெடுக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம், கோவிலூர் ஊராட்சி சென்றாயனஅள்ளி ஏரிகரை பகுதியில் உலக வன நாள் விழாவை முன்னிட்டு பெரியாம்பட்டி ஸ்ரீ ஞானாம்பிகா கல்வி அறக்கட்டளையின் சார்பாக மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஸ்ரீ ஞானாம்பிகா கல்வி அறக்கட்டளையின் லட்சுமிமதி கூறும்போது:-

    உலக வன தினத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவில் சாதாரணமாக நிழல் தரும் மரங்கள் அனைத்து இடங்களில் நடப்படுகின்றன.

    தற்போதைய சூழ்நிலையில் பறவைகள் தான் அதிக அளவில் தங்கள் வாழ்விடம் உணவு தேவை உள்ளிட்ட வற்றில் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

    அவற்றை மீட்கும் விதமாக பறவைகளுக்கு பலன் தர கூடிய ஆலமரம், அரசன், அத்தி, வேப்பமரம், நொச்சி, புங்கன், உச்சி, இலுப்பை உள்ளிட்ட 20 வகையான 300 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கோவிலூர் ஊராட்சி சென்றாயன அள்ளி ஏரிகரை பகுதியில் நடப்படுகிறது. மேலும் ஏரி கரையில் நடப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தின் தொடர் கண்காணிப்பில் அனைத்து மரக்கன்றுகளும் வளர்த்தெடுக்கபடும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இவ்விடம் முழுவதும் பறவைகளின் வாழ்விடமாக மாற்றப்படும் என தெரிவித்தனர்.

    விழாவில் கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவி தமிழ் செல்வி நந்திசிவன் கலந்து கொண்டார். மேலும் ஊராட்சி நிர்வாகத்துடன் சேர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி மற்றும் ரவி தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மேலும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் லட்சுமிமதி, நாகராஜ், முனுசாமி, சங்கர், வேல்முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு கிலோ சர்க்கரைவள்ளி கிழங்கு 10 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கிறது.
    • ஒரு ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.

    தருமபுரி,

    தமிழகத்தில் கடந்த வருடம் நல்ல பருவமழை பெய்துள்ளது. குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் நல்ல பருவமழை பொழிந்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் மானாவரி பயிர்கள் சாகுபடி அதிகரித்துள்ளது.

    இதில் காரிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான குட்டப்பட்டி, மன்னாடிப்பட்டி, முருக்கம் பட்டி, நாகணம்பட்டி, முல்லனூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சர்க்கரைவள்ளி கிழங்கு அதிகளவு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் சர்க்கரைவள்ளி கிழங்கு பயிரிடப்படுகிறது. பின்னர் தை, மாசி, பங்குனி ஆகிய மூன்று மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

    மூன்று மாத குறுகிய கால சாகுபடி பயிர் என்பதாலும் அதிக அளவு பூச்சி தாக்குதல் குறைவாகவும் மகசூல் அதிக அளவு கிடைப்பதாலும் ஏக்கருக்கு 75 ஆயிரம் முதல் 80,000 வரை லாபம் கிடைப்பதாலும் சாகுபடி செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இங்கு விளையும் சிவப்பு கலர் சர்க்கரை வள்ளி கிழங்கு தருமபுரி மாவட்டம் மற்றும் திருச்சி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், மணப்பாறை, சென்னை அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயி ரங்கநாதன் கூறியதாவது:-

    காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் சர்க்கரைவள்ளி கிழங்கு 200- க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். குறுகிய கால பயிர் என்பதாலும் குறைந்த செலவில் நல்ல மகசூல் கிடைப்பதாலும் தொடர்ந்து சர்க்கரைவள்ளி கிழங்கை பயிரிட்டு வருகிறோம்.

    இங்கு விளையும் சர்க்கரைவள்ளி கிழங்கை மாவட்டத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களான கேரளாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    ஒரு கிலோ சர்க்கரைவள்ளி கிழங்கு 10 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கிறது. தற்பொழுது இரண்டு ஏக்கரில் சர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளேன் குறைந்தது.

    ஒரு ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது. கூலி ஆட்களுக்கு வெட்டுக்கூலி கொடுத்தால் சற்று லாபம் குறைய வாய்ப்புள்ளது. விவசாயி களாகிய எங்களால் ஏற்றுமதி செய்ய முடிவதில்லை.

    இதனால் வியாபாரிகள் எங்களிடம் கிலோ 10 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் உழவர் சந்தை, தினசரி சந்தைகளில் கிலோ 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo