search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வைகாசி மாதத்தில் புனித நீராடுங்கள்
    X

    வைகாசி மாதத்தில் புனித நீராடுங்கள்

    • பகவான் கிருஷ்ணர் வைகாசி மாதத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தருகிறார்.
    • வைகாசி மாதத்தின் கடைசி மூன்று நாட்களாவது நீராட வேண்டும்.

    கிருஷ்ணபெருமானுக்கு மிகவும் பிரியமான மாதம் வைகாசி மாதமே. இந்த மாதத்தில் பகவான் மனிதர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணி கங்கை, யமுனை, காவேரி, சிந்து, கோதாவரி, சரஸ்வதி, துங்கபத்ரா, கிருஷ்ணா போன்ற எல்லாப் புனித நதிகளையும் அழைத்து வைகாசி மாதத்தில் சூரிய உதயம் முதல் ஆறு நாழிகை வரை எல்லா தீர்த்தங்களிலும் தங்கி இருக்கும்படி கூறினார். அந்த சமயத்தில் புனித நதிகளில் நீராடுபவர்களின் பாவங்களைப் போக்கி, அவர்களுக்கு வேண்டிய வரங்களை அளிப்பேன் என்றும் விஷ்ணு கூறினார்.

    உடனே அவரிடம் புண்ணிய தீர்த்தங்கள் ஒரு கேள்வி கேட்டன. பாவிகள் எங்களிடம் விட்ட பாவத்தை நாங்கள் எப்படிப் போக்கிக் கொள்வது? எனக் கேட்டன.

    வைகாசி மாதம் முழுவதும் நீராட முடியாவிட்டாலும் ஏகாதசி, துவாதசி, பவுர்ணமி தினங்களிலாவது நீராட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வைகாசி மாதத்தின் கடைசி மூன்று நாட்களாவது நீராட வேண்டும். அப்படி நீராடதவர்களிடம் உங்களிடம் சேரும் பாவங்களை விட்டு விடுங்கள் என்றார். பகவான் கிருஷ்ணர் வைகாசி மாதத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் வருகை தருகிறார். அப்போது நீராடி இறைவனைப் பூஜித்தபடி இருக்க வேண்டும் என்பது ஐதீகம்.

    Next Story
    ×