என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
- திரவுபதியம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு ரதத்தில் வைத்து வீதிஉலா காட்சி நடைபெற்றது.
- திருவிழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள கீழபெரம்பூர் திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரவுபதி பிறப்பு, சுபத்திரை திருமணம் போன்ற கதைப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், தினமும் சுவாமி வீதிஉலா காட்சியும் நடைபெற்றது.
திருவிழாவின் நிறைவு நாளான நேற்று காலை 9 மணிக்கு படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து திரவுபதியம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு ரதத்தில் வைத்து வீதிஉலா காட்சி நடைபெற்றது. திருவிழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கீழபெரம்பூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்