search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா
    X

    சங்கரன்கோவில் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா

    • நாளை ஊஞ்சல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 14-ந்தேதி பால்குடம் மற்றும் அம்மன் படைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    சங்கரன்கோவில் சங்கர்நகர் 2-ம் தெருவில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சக்தி கும்பம் எடுத்தல், திருக்கல்யாணம், அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி, திரவுபதி அம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று நடந்தது.

    விழாவை முன்னிட்டு காலை சக்தி நிறுத்துதல், அக்னி வளர்த்தல் நிகழ்ச்சியும், மாலை திரவுபதி அம்மன் புஷ்ப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு அக்கினி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். நிகழ்ச்சியை முன்னிட்டு சங்கரன்கோவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை ஊஞ்சல் நிகழ்ச்சியும், 14-ந்தேதி பால்குடம் மற்றும் அம்மன் படைப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    Next Story
    ×