search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு
    X

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு

    • ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாளை வழிபட்டனர்.

    திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் புரட்டாசிபிரம்மோற்சவ விழாவில் சுவாமிக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலை அனுப்பப்பட்டது.

    இதற்கு எதிர்சீராக ஆண்டாளுக்கு ஏழுமலையான் கோவிலில் இருந்து பட்டுப்புடவை கொடுத்து அனுப்பப்பட்டது. இதையொட்டி நேற்று ரெங்கமன்னாருடன் எழுந்தருளிய ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாளை வழிபட்டனர்.

    Next Story
    ×