search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • 28-ந்தேதி கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது.
    • 1-ந்தேதி ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா நடைபெறுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றுபரவலை தடுக்கும் வகையில் திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டு வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இதையொட்டி திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


    28-ந்தேதி கருட சேவை நிகழ்ச்சி, 30-ந்தேதி ஆண்டாள் சயன சேவை, வருகிற 1-ந்தேதி ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதனையொட்டி தற்போது தேர் சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல ஆடிப்பூர திருவிழாவிற்கு பந்தல் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×