search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிறுவாபுரி வேல் வணக்கம்
    X

    சிறுவாபுரி வேல் வணக்கம்

    • அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த தலத்தைப் பாடியுள்ளார்.
    • கல்யாண கோலத்தில் வள்ளியும், முருகனும் கைகோர்த்து நிற்பது அற்புதச் சிறப்பாகும்.

    வறுமை தீர் வளங்கள் நல்கி வானவர் மண்ணு ளோரும்

    தறுகனான் தீமை நீங்கித் தகவுடன் வாழச் செய்த

    சிறுவை தன் வாழ்வாம் எங்கள் சீராமன் மருகனாகும்

    அறுமுகன் கரத்து வேலைப் பணிவதே எமக்கு வேலை.

    ஒப்பிலா முக்கண் எந்தை ஒரு சுடர் வடிவாய் வந்து

    செப்பரும் கருணை நல்கி செகமெலாம் புகழும் அந்த

    ஒப்பிலாச் சிறுவை வாழும் உயர் மகிழ் முருகன் வானோர்

    செப்பறு முகத்தான் வேலைச் செபிப்பதே எமக்கு வேலை.

    -சேக்கிழார் தாசன்

    Next Story
    ×