என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா
- ராமநாதசாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
- ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கோவிலின் உள்புற வளாகத்தில் நடைபெற்றது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளில் ராவண சம்ஹாரம், 2-வது நாளான நேற்று விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிலையில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கோவிலின் உள்புற வளாகத்தில் நடைபெற்றது.
அதற்காக விஸ்வநாதர் சன்னதியில் இருந்து ஆஞ்சநேயர் வேடமணிந்த குருக்கள் ஒருவர் சாமி விக்ரகத்துடன் சன்னதி பிரகாரத்தில் மூன்று முறை ஆடியபடி வலம் வந்தார். தொடர்ந்து கோவிலின் கருவறையில் உள்ளே சென்று மண்டியிட்டு அந்த சாமி விக்ரகத்தை கருவறையில் உள்ள சிவலிங்கம் அருகே வைத்து பூஜை செய்தார். முன்னதாக கருவறையில் உள்ள ராமநாதசாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்ச்சியில் கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முரளிதரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து இரவு சாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி ரதவீதிகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்