search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் புட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்து வருகிறது.
    X

    காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் புட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்து வருகிறது.

    • காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் புட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்து வருகிறது.
    • இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வரலாற்று காலத்தில் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய, வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்பவேண்டும் என்று அரசன் உத்தரவை நிறைவேற்ற முடியாமல் புட்டு விற்று பிழைப்பு நடத்திவந்த மூதாட்டி தவித்தார். அவரது நிலை அறிந்த சிவபெருமான் அந்த மூதாட்டி முன்பு தோன்றி, உங்களுக்காக தான் மண் சுமப்பதாகவும், அதற்கு கூலியாக சாப்பிட புட்டு தருமாறு கேட்டு மண் சுமந்தது சிவனின் திருவிளையாடலில் ஒன்றாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

    இந்த சம்பவத்தை சித்தரித்து காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் புட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்து வருகிறது. அதன்படி ஆவணி மாத மூல நட்சத்திரமான நேற்று காலை, காரைக்கால் கயிலாசநாதர் தலையில் மண் சட்டி சுமந்து வீதியுலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் புட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    Next Story
    ×