search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குமாரபாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
    X

    குமாரபாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம்

    • தீர்த்தக்குட ஊர்வலம் ஜண்டை மேளங்கள் முழங்க நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது.

    குமாரபாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி யானை, ஒட்டகம், குதிரைகளுடன் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

    குமாரபாளையத்தில் தம்மண்ணன் வீதி பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 19-ந் தேதி யாகசாலைகால்கோள் விழாவுடன்தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து 29-ந் தேதி முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று யானை, ஒட்டகம், குதிரையுடன் காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் ஜண்டை மேளங்கள் முழங்க நடைபெற்றது. இதனையடுத்து 6, 7 ஆகிய நாட்களில் யாக சாலை பூஜைகள், இன்று காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேக விழாவும் நடைபெற உள்ளது.

    பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை சாந்த மல்லிகார்ஜுன சுவாமிகள், சாலுரு புருஹன் மாதா, தொழிலதிபர்கள் சிவசக்தி சண்முகசுந்தரம், சிவசக்தி தனசேகரன், சேர்மன் விஜய்கண்ணன், தொழிலதிபர் பழனிசாமி, நாட்டாண்மைக்காரர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    Next Story
    ×