search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நவராத்திரி: இன்று 9-வது நாள் வழிபாட்டு முறை
    X

    நவராத்திரி: இன்று 9-வது நாள் வழிபாட்டு முறை

    • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து விடும்.
    • இன்று 9-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

    9-வது நாள் 4-10-2022 (செவ்வாய்க்கிழமை)

    வடிவம் : பரமேஸ்வரி, சுபத்ராதேவி (கையில் வில், பாணம், அங்குசம், சூலத்துடன் தோற்றம்)

    பூஜை : 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் வழிபட வேண்டும்.

    திதி : நவமி

    கோலம் : வாசனைப் பொடிகளால் ஆயுதம் போன்ற கோலம் போட வேண்டும்.

    பூக்கள் : தாமரை, மரிக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள்.

    நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், கடலை, எள் பாயாசம், கேசரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை.

    ராகம் : வசந்த ராக கீர்த்தனம் பாடி தேவியை மகிழ்விக்க வேண்டும்.

    பலன் : ஆயுள், ஆரோக்கியம் பெருகும். சந்ததிகள் சவுக்கிய மாக இருப்பார்கள்.

    Next Story
    ×