search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பனித்திட்டு மகாகாளியம்மன் கோவில் செடல்விழா
    X

    பனித்திட்டு மகாகாளியம்மன் கோவில் செடல்விழா

    • இரவில் முத்துப்பல்லக்கில் சாமிகளின் வீதியுலா நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கிருமாம்பாக்கத்தை அடுத்த பனித்திட்டு மீனவ கிராமத்தில் மகாகாளியம்மன், விநாயகர், ஊத்துக்காட்டு மாரியம்மன், மகாசக்தி கங்கையம்மன், கங்காதீஸ்வரர், பாலமுருகன் கோவில்கள் உள்ளன.

    இந்த கோவிலில் செடல் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு காளியம்மன் கடற்கரைக்கு சென்று ஜலம் திரட்டி வந்து பக்தர்கள் செடல் குத்துதல், சாகைவார்த்தல் ஆகியவை விமரிசையாக நடந்தது.

    இரவில் முத்துப்பல்லக்கில் சாமிகளின் வீதியுலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பனித்திட்டு கிராம பஞ்சாயத்து தலைவர் அஞ்சாபுலி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×