search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராஜகோபுர கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது
    X

    ராஜகோபுர கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

    • நாளை காலை 6.45 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
    • கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏழு நிலைகளை கொண்ட ராஜகோபுர கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைக்காக ராஜகோபுரத்தின் முன்புறம் புதிதாக யாகசாலை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. இதில் யஜமான சங்கல்பம், தேவதானுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, அக்னி சங்கரஹணம், தீர்த்த சங்கரஹகணமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6.05 மணிக்கு மேல் இரவு 8.30 மணிக்குள் முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து ராஜகோபுரத்தின் உச்சியில் கும்ப கலசங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராஜகோபுர கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடைவீதியில் உள்ள ஆண்டவர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். யாகசாலை பூஜையில் தர்மபுர ஆதீனம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5.30 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம் மற்றும் நான்காம் கால யாக பூஜை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 6 மணிக்கு மகாபூர்ணாஹுதியும், தீபாராதனையும் நடைபெறுகிறது. அன்று காலை 6.45 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது.

    Next Story
    ×