search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடி கொடை விழா வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது
    X

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடி கொடை விழா வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது

    • குலசேகரன்பட்டினத்தில் உள்ளது ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில்.
    • ஆடி மாத கொடை விழா ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்ற திருவிழாவாகும். இந்த கோவிலில் ஆடி மாத கொடை விழா வருகிற ஆகஸ்டு 1-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதையொட்டி 1-ந் தேதி இரவு 8 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை, இரவு 10 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2-ந்தேதி காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை, 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்திருத்தல், 11.15 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி, நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு 8 மணிக்கு வில்லிசை, 9 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள், 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல் மற்றும் சிறப்பு மகுடம், குறவன்-குறத்தி, கரகாட்டம் நடைபெறுகிறது.

    3-ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு மகுடம், காலை 11 மணிக்கு கும்பம் திருவீதி எழுந்தருளல், 11.30 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு மஞ்சள் நீராட்டு, இரவு 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

    ஆடி கொடை விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், தக்காருமான சங்கர், செயல் அலுவலர் இராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்து உள்ளனர்.

    Next Story
    ×