search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆந்திராவில் அக்டோபர் 11-ந்தேதி பிரமாண்ட நாட்டுபுற குலதெய்வ திருவிழா
    X

    ஆந்திராவில் அக்டோபர் 11-ந்தேதி பிரமாண்ட நாட்டுபுற குலதெய்வ திருவிழா

    • கடந்த 2 ஆண்டுகளாக இந்த குலதெய்வ திருவிழா நடைபெறவில்லை
    • இந்த விழாவில் 4 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.

    ஆந்திர மாநிலம் விஜயநகரம் டவுன் பகுதியில் ஸ்ரீ பைட் பள்ளி பிரதான குலதெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகைக்கு பிறகு முதல் செவ்வாய்க்கிழமை இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக இந்த குலதெய்வ திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு வருகிற அக்டோபர் மாதம் 11-ந்தேதி பிரமாண்ட குலதெய்வ திருவிழா நடைபெற உள்ளது. இது ஆந்திராவில் வடகடலோர பகுதியில் முக்கிய நாட்டுப்புற விழா என அழைக்கப்படுகிறது.

    இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ மானோற்சவம் அக்டோபர் 11-ந்தேதி நடக்கிறது. அப்போது 55 அடி கம்பத்தின் உச்சியில் பூசாரி அமர்ந்து ராஜ உடையில் கோட்டையை சுற்றி வந்து பக்தர்களை ஆசீர்வதிப்பார்.

    மேலும் கம்பத்தின் முனையில் தொங்கியபடி பூசாரி சிறப்பு ஆசிர்வாதம் வழங்குவார். இந்த விழாவில் ஆந்திரா அண்டை மாநிலங்களான ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள்.

    இந்த ஆண்டு விழாவிற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை விஜய நகர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த திருவிழாவிற்காக ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மேலும் தரிசன டிக்கெட்டுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டுப்புற குலதெய்வ திருவிழாவில் ரூ. 100 முதல் 300 வரை தரிசன டிக்கெட் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×